வேதாந்தப்
பாடல்கள்
|
மனப் பெண்
|
மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை
நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய்
விழுவாய்
|
5 |
தொட்டதை மீள மீளவும் தொடுவாய்
புதியது காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய் புதியதை அஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய்
வீழ்வாய்
|
10 |
பழமையே யன்றிப் பார்மிசை யேதும்
புதுமை காணோமெனப் பொருமுவாய்,
சீச்சீ!
பிணத்தினை விரும்புங் காக்கையே
போல
அழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததில்
இசைவாய்.
|
15 |
அங்ஙனே
என்னிடத் தென்று மாறுத லில்லா
அன்புகொண் டிருப்பாய், ஆவிகாத்
திடுவாய்,
கண்ணினோர் கண்ணாய் காதின்
காதாய்ப்
புலன்புலப் படுத்தும் புலனா யென்னை
|
20 |
உலக வுருளையில் ஒட்டுற வகுப்பாய்,
இன்பெலாந் தருவாய், இன்பத்து
மயங்குவாய்,
இன்பமே நாடி யெண்ணிலாப் பிழை
செய்வாய்,
இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய்,
இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய்,
|
25 |
தன்னை யறியாய், சகத்தெலாந் தொலைப்பாய்,
தன்பின் னிற்குந் தனிப்பரம்
பொருளைக்
காணவே வருந்துவாய், காணெனிற்
காணாய்,
சகத்தின் விதிகளைத் தனித்தனி அறிவாய்,
பொதுநிலை அறியாய், பொருளையுங்
காணாய்,
|
30 |
மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!
நின்னோடு வாழும் நெறியுநன் கறிந்திடேன்;
இத்தனை நாட்போல் இனியுநின்
னின்பமே
விரும்புவன்; நின்னை மேம்படுத்
திடவே
முயற்சிகள் புரிவேன்; முத்தியுந் தேடுவேன்;
|
35 |
உன்விழிப் படாமல் என்விழிப் பட்ட
சிவமெனும் பொருளைத் தினமும்
போற்றி
உன்றனக் கின்ப ஓங்கிடச் செய்வேன்.
|
38 |