பக்கம் எண் :

பாமாலை : பக்தி பாடல்கள்

வேதாந்தப் பாடல்கள்
விடுதலை வெண்பா

சக்தி பதமே சரணென்று நாம்புகுந்து
பக்தியிற் பாடிப் பலகாலும் -- முக்திநிலை
காண்போம் அதனாற் கவலைப் பிணிதீர்ந்து
பூண்போம் அமரப் பொறி.
1

பொறிசிந்தும் வெங்கனல் போற் பொய்தீர்ந்து தெய்வ
வெறிகொண்டால் ஆங்கதுவே வீடாம் -- நெறிகொடண்
வையமெலாந் தெய்வ வலியன்றி வேறில்லை
ஐயமெலாந் தீர்ந்த தறிவு.
2


[பாட பேதம்]
: ''பீடையிலாத வோர்''

-- கவிமணி

அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்
வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர் -- குறிகண்டு
செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்
வெல்வயிரச் சீர்மிகுந்த வேல்.
3

வேலைப் பணிந்தால் விடுதலையாம்; வேல்முருகன்
காலைப் பணிந்தாற் கவலைபோம் -- மேலறி்வு
தன்னாலே தான்பெற்று சக்திசக்தி சக்தியென்று
சொன்னால் அதுவே சுகம்.
4

சுகத்தினை நான்வேண்டித் தொழுதேன்; எப்போதும்
அகத்தினிலே துன்புற் றழுதேன் -- யுகத்தினிலோர்
மாறுதலைக் காட்டி வலிமை நெறிகாட்டி
ஆறுதலைத் தந்தாள் அவள்
5