வேதாந்தப்
பாடல்கள்
|
விடுதலை --
சிட்டுக்குருவி
|
பல்லவி
விட்டு விடுதலை
யாகிநிற்பா யிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே.
சரணங்கள்
|
எட்டுத் திசையும் பறந்து
திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு
நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக்
கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு
|
(விட்டு) |
1 |
பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு
|
(விட்டு) |
2 |
முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக்
கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித்
ங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று
|
(விட்டு)
|
3 |