வேதாந்தப்
பாடல்கள்
|
மனமே
|
கண்ணன் திருவடி
எண்ணுக மனமே
திண்ணம் அழியா
வண்ணந் தருமே. |
1 |
தருமே நிதியும்
பெருமை புகழும்
கருமா மேனிப்
பெருமா னிங்கே. |
2 |
இங்கே யமரர்
சங்கந் தோன்றும்
மங்கும் தீமை
பொங்கும் நலமே. |
3 |
நலமே நாடிற்
புலவீர் பாடீர்
நிலமா மகளின்
தலைவன் புகழே. |
4 |
புகழ்வீர் கண்ணன்
தகைசே ரமரர்
தொகையோ டசுரப்
பகைதீர்ப் பதையே. |
5 |
தீர்ப்பான் இருளைப்
பேர்ப்பான் கலியை
ஆர்ப்பா ரமரர்
பார்ப்பார் தவமே. |
6 |
தவறா துணர்வீர்
புவியீர் மாலும்
சிவனும் வானோர்
எவரும் ஒன்றே. |
7 |
ஒன்றே பலவாய்
நின்றோர் சக்தி
என்றுந் திகழும்
குன்றா வொளியே. |
8 |