பக்கம் எண் :

பாமாலை : பக்தி பாடல்கள்

வேதாந்தப் பாடல்கள்
மனமே
கண்ணன் திருவடி
எண்ணுக மனமே
திண்ணம் அழியா
வண்ணந் தருமே.
1

தருமே நிதியும்
பெருமை புகழும்
கருமா மேனிப்
பெருமா னிங்கே.
2

இங்கே யமரர்
சங்கந் தோன்றும்
மங்கும் தீமை
பொங்கும் நலமே.
3

நலமே நாடிற்
புலவீர் பாடீர்
நிலமா மகளின்
தலைவன் புகழே.
4

புகழ்வீர் கண்ணன்
தகைசே ரமரர்
தொகையோ டசுரப்
பகைதீர்ப் பதையே.
5

தீர்ப்பான் இருளைப்
பேர்ப்பான் கலியை
ஆர்ப்பா ரமரர்
பார்ப்பார் தவமே.
6

தவறா துணர்வீர்
புவியீர் மாலும்
சிவனும் வானோர்
எவரும் ஒன்றே.
7

ஒன்றே பலவாய்
நின்றோர் சக்தி
என்றுந் திகழும்
குன்றா வொளியே.
8