பக்கம் எண் :

பாமாலை : பக்தி பாடல்கள்

வேதாந்தப் பாடல்கள்
மனத்திற்குக் கட்டளை

பேயா யுழலுஞ் சிறு மனமே
   பேணா யென்சொல் இன்றுமுதல்
நீயா யொன்றும் நாடாதே
   நினது தலைவன் யானேகாண்
தாயாம் சக்தி தாளினிலும்
   தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடுவாய்
   உரைத்தேன் அடங்கி உய்யுதி
யால்.

[பாட பேதம்]:
'பேயா விழலுஞ்'
'நீயா ஒன்றை'
'ஓயா தேநின் றுழைத்திடு நீ'
-- 1910 ஆம் வருடப் பதிப்பு