வேதாந்தப்
பாடல்கள்
|
மனத்திற்கு
|
சென்றதினி மீளாது, மூடரே நீர்
எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில்வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல்
வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று
நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்
கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து
வாழ்வீர்:
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி
வாரா. |
|
|
|