|
பகைவனுக் கருள்வாய்
|
பகைவனுக் கருள்வாய் -- நன்னெஞ்சே
பகைவனுக் கருள்வாய்.
|
புகைநடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோமே -- நன்னெஞ்சே
பூமியிற்
கண்டோமே.
பகை நடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான் நன்னெஞ்சே
பரமன்
வாழ்கின்றான். |
(பகைவனுக்) |
1 |
சிப்பியிலே
நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யறியாயோ -- நன்னெஞ்சே
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ? -- நன்னெஞ்சே |
(பகைவனுக்) |
2 |
உள்ள நிறைவிலொர் கள்ளம்
புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ? -- நன்னெஞ்சே
தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ? -- நன்னெஞ்சே
|
(பகைவனுக்) |
3 |
இப்பாடலின் முதல்
மூன்று அடிகளும் நான்காமடியின் முற்பகுதியுமான ஏழு வரிகம் 'பாரதி அறுபத்தாறு' என்னும்
பகுதியுள் 32 ஆம் பாட்டில் உள்ளன.
|
வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ? -- நன்னெஞ்சே
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழி வானென்
சாத்திரங் கேளாயோ? -- நன்னெஞ்சே
|
(பகைவனுக்) |
4 |
போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலுவந் தானுமவன் -- நன்னெஞ்சே
நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு
நின்றதுங் கண்ண னன்றோ? -- நன்னெஞ்சே |
(பகைவனுக்) |
5 |
தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய் -- நன்னெஞ்சே
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய் -- நன்னெஞ்சே
|
(பகைவனுக்) |
6 |