பக்கம் எண் :

குடும்ப விளக்கு

(மூன்றாம் பகுதி - திருமணம்)

மணமகன் வீட்டில் மணம்

அகவல்

'காயா பழமா கழறுக' என்றாள்.
'கனிதான்' என்று கழறினார் தாத்தா.

வண்டிவிட் டிறங்கி வந்தார் உள்ளே
தங்கம் நடந்ததைச் சாற்றுக' என்றாள்.

'என்மேல் மாவரசுக் கெரிச்சல் இருந்ததா?
மறைந்ததா?' என்றான் மணவழ கன் தான்.

'ஒப்பி னாரா? ஒப்பவில் லையா?
செப்புக' என்று செப்பினாள் தங்கம்.

'இருந்தா ரன்றோ வீட்டார் எவரும்?
கொல்லையில் காதலர் கூடிப் பேசிய
எல்லாம் அவரிடம் இயம்பி னீரா?
மறந்தீரா?' என்றான் மணவழ கன்தான்.

'குறுக்கே பேச்சேன்? பொறுக்க வேண்டும்.
உரைக்க மாட்டேனா? உட்காரு ங்கள்'
என்றார் தாத்தா, இருவரும் அமர்ந்தார்.

'நான் கிளம்பினேன் நாலு மணிக்கே
ஐந்து மணிக்கெல்லாம் அவ்விடம் சேர்ந்தேன்.
மாவர சிருந்தான். மலர்க்குழல் இருந்தாள்.
நகைமுத் திருந்தாள். நடந்ததைச் சொன்னேன்.
'வேறே எவனையும் விரும்பேன்' என்றும்,

'வேடப் பனைத்தான் விரும்பினேன்' என்றும்,
சட்டவட்டமாய்ச் சாற்றினாள் மங்கையும்.
'திருமண முடிவு செப்புக' என்றேன்.
ஒருபேச் சில்லை, ஒப்புக் கொண்டார்
'மணமகன் வீட்டில் மணம்நடக் கட்டும்''
என்றேன் 'சரிதான்' என்றார் அவர்களும்.

கருப்பண்ணன் என்பவன் கடைக்கு வந்து
வெறுப்பாய்ப் பேச வேண்டிய தில்லை.
ஆயினும் அவன்என் அன்புறு நண்பன்,
நம்பலாம் அவனை, நம்ப வில்லை;
மணவழ கவனை மதிக்க வில்லை;
அதனால் என் மனம் கொதித்த துண்டு.
மணவழகன் தன் மகனும், என்றன்
இணையிலா மகளும் இணைந்தார் என்றால்.
பெற்றவர்க் கிதிலும் பேரின்ப மேது?
நாளைக்கவர்களை நான்எதிர்பார்ப்பேன

மணவழகு, தங்கம், மைந்தன், மக்கள்
அனைவரும் வரும்படி அறிவிக்க வேண்டும்!''
மாவரசு, மலர்க்குழல், வாயால் இப்படி
ஆவலோடு கூறினார், அறிக'' என்று
பெருமாள் தாத்தா பேசி முடித்தார்
பெரு மகிழ்ச்சி பெருமகிழ்ச்சி!

இரவெல்லாம் பயண ஏற்பாடு செய்தனர
விடியுமா? இரவின் இருட்டு
விடியுமா? காலை மலர்கஎன் றனரே.







( 5 )






( 10 )





( 15 )





( 20 )





( 25 )





( 30 )




( 35 )





( 40 )





( 45 )

மணமக்கள் கருத்துரைகள்

(நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா)

திண்ணையிலே மாவரசன்
சிற்றானைக் குட்டிபோல்
கண்ணை எதிர் அனுப்பிக்
காத்துக் கிடக்கின்றான்
வண்ண மலர்க்குழலி
வந்திடுவாள் உட்செல்வாள்
பெண்ணாம் நகைமுத்தோ
பேசாதுலவினளே.

கழுத்து மணிகள்
கலகலெனக் கொஞ்ச
இழுக்கும் எருதுகள்
எக்களித்துத் தாவப்
பழுப்புநிற வண்டி யொன்றும்
பச்சையொன்றும் ஆக
முழுப்பளுவில் வீட்டுக்கு
முன்வந்து நின்றனவே!

மணவழகன், தங்கள்
மகன், சிறுவன், தாத்தா
தணியா மகிழ்ச்சி
தழுவும் முகத்தால்
அணியாய் இறங்கிவர
மாவர சங்கே
பணிவாய் வரவேற்கப்
பாங்காய்உட் சென்றாரே.

'அம்மா வருக; என்று
அன்புமலர்க் குழலும்
கைமலர் தாவக்
கனிவாய் வரவேற்றாள்.
செம்மைநகை முத்தும் எதிர்
சென்று வணக்கம் என்றாள்.
மெய்மை, மகிழ்ச்சி, அன்பு
வீடெல்லாம் ஆர்த்தனவே!

தூய்மைசெய நீரளித்துக்
கூடத்தில் சொக்கட்டான்
பாய்விரித்து நல்லாவின்
பாலும் பருகவைத்து
வாய்மணக்கும் வெள்ளிலைகாய்
வட்டில் தனிலிட்டே
ஓய்வாய் நலம்பேசி
உள்ளமகிழ்ந்தாரங்கே.
''வேடப்பன் உள்ளம்
நகைமுத்தை வேண்டிற்றே
ஆடும் மயிலும்
அவன்மேல் உயிர்வைத்தாள்
நாடு நகரறிய
நாளொன்றில் இங்கிவரை
நீடூழி வாழ்க'' என்றார்
நெஞ்சார வேதாத்தா!

ஈன்றார் கருத்தென்ன?
இன்பத் திருமணத்தை
மூன்றுநாட் பின்னை
முடிக்க நினைக்கின்றேன்
ஆன்ற பெரியோர்க்
கழைப்பனுப்ப வேண்டுமன்றோ
தோன்றியஉம் எண்ணத்தைச்
சொல்வீர்''என்றார்தாத்தா

மகிழ்ச்சியுடன் ஒப்புவதாய்
மாவசரன் தானுரைத்தான்
தனியில்லம்'' என்றனளே.
புகழ்ச்சியுறும் ''வேடப்பன்
பூவை மணத்தை
இகழ்ச்சியா செய்திடுவேன்?''
என்றாள் மனைவி
நகைப்போடு நன்றென்
றுரைத்தான் மணவழகே!

அன்புநகை முத்தின்
அருகில் அமர்ந்திருந்த
தன்துணைவி யானஎழில்
தங்கத்தை நோக்கியே
'உன்கருத்தைச் சொல்' என்
றுரைத்தான் மணவழகன்
இன்ப நகைமுத்தும்
ஏங்கிமுகம் பார்க்கையிலே.

''நானோ மறுப்பேன்
நகைமுத்தே? என்மகனைத்
தேனே, உயிரென்றாய்;
சேயவனும் அன்புகொண்டான்;
மானே மயிலே
மருமகளே என்வீட்டு
வானநிலாவே
மகிழ்'' வென்றாள் தங்கமுமே!

''இன்ப நகைமுத்தே
உன்கருத்தை யானறிவேன்
என்றாலும் இங்கே
இருப்பார் அறிந்திடவே
அன்பால் உரைத்திடுவாய்
ஆணழகும் அப்படியே
பன்னுதல் வேண்டும்'' மென்று
தாத்தா பகர்ந்தனரே.

''கட்டழக னைமணக்கக்
காத்திருக்கின் றேனேநான்
அட்டியில்லை அட்டியில்லை
ஆனால் ஒரு திட்டம்
மட்டமாய்ச் செலவிடுக
எங்கள் மணமுடித்துத்
தட்டா மல்ஈக
மேலும் நகைமுத்து
விண்ணப்பம் செய்கின்றாள்.
''ஏலுமட்டும் எங்கள்
குடித்தனத்தை யாம்பார்ப்போம்.
ஏலாமை உண்டானால்
என்மாமி யார்உள்ளார்!''
சேல்இரண்டு கண்ணானாள்
சேப்பினாள் இப்படியே!

''யானுமதை ஒப்புகிறேன்'!
என்கருத்தும் அன்னதுவே'!
நானோ கடையினிலே
நன்றிருப்பேன் அப்பா, ஏ
தேனும் ஒரு நூறுரூ
பாய்மாதம் ஈந்திடட்டும்
தேனோடை எம்வாழ்க்கை,''
என்றுரைத்தான் செம்மலுமே!

''மாமிகொடு மைக்கு
வழியில்லை. மைத்துனர்கள்
தாமொன்று சொல்லும்
தகவில்லை. தன்துணைவன்
ஏமாற்றி னான்தன்
இளையவனை என்று சொல்லும்
தீமையில்லை. தக்கதென்று''
செப்பிமகிழ்ந்தார்தாத்தா.

பெண்ணுக்குச் சொத்துரிமை
இல்லைஎன்பர் நான் தருவேன்,
கண்ணை இமையிரண்டு
காப்பதுபோல் என்மருகர்
பண்ணும் குடித்தனத்தை
மேலிருந்து பார்த்திடுவேன
உண்மை'' என்றான் மாவரசன்;
பெற்றவளும் ஒப்பினளே!

''நகைமுத்தின் எண்ணத்தை
நான்ஒப்பு கின்றேன்.
மிகஓர் 'குடும்ப
விளக்கேற்றல்' நன்றே!
தகும்'' என்றாள் தங்கம்!
மணவழகன் தானும்
மகனுக்கு மாதமொரு
நூறுதர ஒப்பினனே!

மூன்றாநாள் நன்கு
மணத்தை முடிப்ப தென்றும்
ஏற்றுக்கொண்டார் எல்லோரும்,
சாப்பா டினிதுண்டார
வான்தோய்ந்த வெண்ணிலவில்
வண்டி புறப்படுமுன்
தேன்சுரக்கச் ''சென்று
வருகின்றோம்' என்றனரே





( 50 )





( 55 )




( 60 )





( 65 )





( 70 )




( 75 )





( 80 )




( 85 )




( 90 )





( 95 )




( 100 )





( 105 )





( 110 )




( 115 )





( 120 )




( 125 )





( 130 )





( 135 )




( 140 )





( 145 )





( 150 )




( 155 )





( 160 )




( 165 )





( 170 )





( 175 )




( 180 )





( 185 )

திருமண அழைப்பு

(அகவல்)

''விடிந்தால் திருமணம்! விண்ணின் நிலவு
வடிந்தஇன் றிரவு மணப்பெண் வருவதால்,
வாழ்த்தி நீங்கள் வரவேற் பதற்கும்,
காலை மலர்ந்ததும் கவின்மண வறையில்
மாலை யிட்ட மணமக்கள் தமை
வாழ்க என்று வாய்மலர்ந் திடவும்,
உடன்யாம் பரிந்திடும் உணவுண் ணுதற்கும்
வந்தருள் புரிக, வந்தருள் புரிக!''
என்று, தங்கம் மணவழகு
நின்று வீடுதொறும் நவின்றனர் பணிந்தே!

( 190 )




( 195 )



முதல்நாள் இரவு

(கட்டளைக் கலித்துறை)

அன்றிரவு ஒன்ப தடிக்க
முரசம் முழங்கும்மணி
முன்றிலில் வாழை கமுகுதெங்
கின்குலை முத்தின் ஈந்து
நன்று சிறக்க நடுப்பகல்
போல விளக்கெரியப்
பொன்துகில் பூண்ட தெருமாதர்
ஆடவர் போந்தனரே!

விருப்பந் தரத்தக்க வெண்துகில்
கட்டி விளக்கிலகும்
தெருப்பந்தல் வாயிலிற் செந்தூக்
கிலேமணித் தேர்இரண்டும்
இருப்பங் கெனத்தங்கம் செம்மல்
இவர்நின் றிருந்தபடி
வரத் தம் கைகூப்பி வருவார்
தமைவர வேற்றனரே!

*இருப்பங்கென- இருப்பு அங்கு என்று பிரிக்க;

மாடப் புறாக்கள் மயில்குயில்
மான்நிகர் மங்கை யர்கள்
ஆடவர் பிள்ளைகள் எள்ளிட
மின்றி அமர்ந்திருந்தார்
வீடப் படித்தெருப் பந்தலில்
அப்படி! மாடியின்மேல்
வேடப்பன் பார்த்துநின் றான்மங்கை
யாள்வரும் வேடிக்கையே!

இசைவந் ததுபொம்பொம் என்றே!
விழிகூச வந்ததொளி!!
மிசைவண் ணமெருகு கண்ணாடிச்
சன்னல்களுக்கு மின்விளக்கம்
அசைகின்ற ஊசலின் முன்பின்
இருக்கைகள் ஆகியதோர்
விசைவண்டி வந்தது வந்தாள்
நகைமுத்து மெல்லியேலே!

மாவர சன்பான மக்கள்
மலர்க்குழல் மற்றவர் பின்
ஏவலர் பெட்டிகள் பட்டுப்
படுக்கைகள் ஏந்திவரப்
பூவி லிருந்து பெடையன்னம்
ஒன்று புறப்படல்போல்
பாவை இறங்கினள் வண்டிவிட்
டேதெருப் பந்தல்முன்னே!

'வாழி மணப்பெண் நகைமுத்து
நல்ல பெண்!' என்றே
ஆழி முழுக்கென யாரும்
முழக்க, அடியெடுத்தே
யாழின் நரம்பிசை ஏழும்
சிலம்பும் சிலம்ப உடன்
தோழி நடத்த நடந்தாள் இல
நோக்கிஅத் தூய்மொழியே!

வானில் துவைத்த முழுநில
வேமுகம்! வண்கடலின்
மீனில் துவைத்தநீள் மைவிழி
யாள் அவள் வேடப்பனின்
ஊனில் துவைத்தும் உயிரில்
துவைத்தும்தன் வாயின் உண்ணத
தேனில் துவைத்தநற் செவ்வித
ழாள்வீடு சேர்ந்தனளே!

பாலும் பழமும்அப் பாவைக்
களித்தனர்! பற்பலரும்
மேலும் கமழுநீர் தோளும்
கமழ்மாலை வெள்ளிலைகாய்
ஏலும் படிஎய்தி ஏகினர்!
வேடப்பன் இங்கும் அங்கும்
காலும் கடுகத் திரிவான்
நகைமுத்துக் கண்படவே!

அம்மா துயின்றன ரோ' என
வேடப்பன் அவ்வறைக்குள்
சும்மா வினவித் தலைநீட்ட
அங்கொரு தோழி சொன்னாள்;
"எம்மா தரும்துயின்றா" ரென
வே! இது பொய்ம்மை என்றே
செம்மா துளைஇதழ் சிந்தினளே
வெண் நகைமுத்தமே!

மூடிய கண்களும் மூடிடாத
நெஞ்சுமாய் முன்னறைக்குள்
ஆடிய தோகை அடங்கினள்!
அப்படி வேடப்பனும்
பாடிய யாழ்போல் கிடந்தனன்
ஓர்புறம்! பால்இரவோ
ஓடியதே, எதிர் உற்றது
கீழ்க்கடல் ஒண்கதிரே!

( 200 )




( 205 )





( 210 )




( 215 )







( 220 )





( 225 )




( 230 )





( 235 )





( 240 )




( 245 )





( 250 )




( 255 )





( 260 )





( 265 )




( 270 )





( 275 )



மணவாழ்த்தும் வழியனுப்பும்

(அகவல்)

எழுந்தது பரிதிக் குழந்தை கடலின்
கெழுநீ லத்தில் செம்பொன் தூவி

கரிய கிழக்குவான் திரையில், வெளுப்பும்
மஞ்சளும் செம்மணி வண்ணமும் ஒளிசெயும்!

எழும் வளைந்து நெளிந்து விழும் கடல் அலையே,
அழகிய தென்பாங் காடற் கலையே!

புதிய காலையில் புதிய பரிதியின்
எதிரில் அடடா சதிர்க்கச் சேரி!

கிழக்கில் திராவிடற்குக் கிடைத்த கடல் முரசு,
முழக்குவோன் இன்றி முழங்கும் இசையரசு!

திரைகடல் முழக்கெனத் திருமண வீட்டின்
பெருங் கூட்டிசையரங்கு செய்த இசைமழை
தெருத்தொறும் இல்லந்தோறும் தென்றல்
திருத்தேர் ஏறிச் சென்று கா தெலாம்
''வருக மணத்துக்'' கென்று பெருகிற்று!

மணவீடு நோக்கி வந்தனர். என்னே!
அணி அணியாக அணியிழை மங்கைமார்
துணையோடு நன்மலர்முக்கனி சுமந்து!
நகைமுத்தை மலர்பெய்த நன்னீராட்டிக்
குறைவற நறும்புகை குழலுக் கூட்டி
மணக்குநெய் தடவி வாரிப்பூப் பின்னி
மணியிழை மாட்டி. எம்கண்ணாட்டிக்கு
ஏலும் சேலை எதுவென எண்ணி
நிலாமுகத் திற்கு நீலச் சேலை
நேர்ச்சி ஆக்கி நிலைக்கண்ணாடி
பார்க்கச் சொன்னார் பார்த்த நகைமுத்தோ
கண்ணா டியில்தனைக் கண்டாள்; தன்மனத்
துள்நாடி வேடனுக் கொப்பு நோக்கினாள்.
காலுக்குச் சிறாய், மேலுக்குச் சட்டை யொடு
சேலுக்கு நிகர்விழித் தெரிவை காணத்
தென்னாட்டு சேர சோழபாண் டியரில்
இந்நாள் ஒருவனோ என்ன நின்றான்.
வருக திருமண மக்கள்! - என்று
திருந்து தமிழ்ப்பெரியார் அழைத்தனர்
திருமணப் பந்தலின் சிறப்புறு மணவறை,
இருமண மக்களை ஏந்தித் தன்னிடை,
முழுநில வழகொழுகு முகமும் மற்றும்
எழுந்த பரிதிநேர் ஆணழகு முகமும்,
இருப்பது காட்டி இறுமாப்புற்றது!

நிறைமண மன்றெலாம் நறுமணம்; இன்னிசை
அறிஞர் பெண்டிர், ஆடவர் பெருங்கடல்!
உதிரிப் புதுமலர் எதிருறு மன்றின்
நிறைந்தார், கையில் நிறையத் தந்தனர்.
பெரியவர் ஒருவர், ''பெண்ணே நகைமுத்து!
வேடப் பனை நீ விருப்பிய துண்டோ?
வாழ்வின் துணைஎனச் சூழ்ந்த துண்டோ?
''என்னலும் நகைமுத் தெழுந்து வணங்கி,
'வேடப்பனை நான் விரும்பிய துண்டு;
வாழ்வின் துணைஎன்று சூழ்ந்தேன் என்றாள்

வேடப்பா நீ மின் நகை முத்தை
மணக்கவோ நினைத்தாய்? வாழ்க்கைத் துணைஎன
அணுக எண்ணமோ அறிவித் திடுவாய்'
என்னலும் வேடன் எழுந்து வணங்கி
மின்நகை முத்தை விரும்பிய துண்டு
வாழ்வின் துணையாய்ச் சூழ்ந்தேன்'' என்றான்

'மணமகள் நகைமுத்து வாழ்க வாழ்கவே!
மணமகன் வேடப்பன் வாழ்க வாழ்கவே!
என்றார் அனைவரும் எழில்மலர் வீசியே!

தன்மலர் மாலை பொன்மகட் கிடவும்
பொன்மகள் மாலையை அன்னவற் கிடவும்
ஆன திருமணம் அடைந்த இருவரும்,
வானம் சிலிர்க்கும் வண்டமி ழிசைக்கிடை
மன்றினர் யார்க்கும், அன்னைதந் தையர்க்கும்
நன்றி கூறி வணக்கம் நடத்தி
நிற்றலும், 'நீவிர் நீடு வாழிய!
இற்றைநாள் போல எற்றைக்கும் மகிழ்க!
மேலும்உம் வாழ்வே ஆலெனச் செழித்து
அறுகுபோல் வேர்பெற! குறைவில்லாத
மக்கட்பேறு மல்குக' என்று
மிக்குயர்ந்தார் மேலும் வாழ்த் தினரே!
அமைந்தார் எவர்க்கும் தமிழின் சீர்போல்
கமழும்நீர் தெளித்துக் கமழ்தார் சூட்டி
வெற்றிலை பாக்கு- விரும்பி அளித்தார்.

மற்றும் ஓர்முறை 'வாழிய நன்மணம்'
என்று, வந்தவர் எழுந்த அளவில்
எழில்மண மக்களும், ஈன்றார் தாமும்
"நன்றி ஐயா! நன்றி அம்மா!
இலைபோட்டுப் பரிமாறி எதிர்பார்த் திருக்கும்
எம்அவா முடிக்க இனிதே வருக!
உண்ண வருக உண்ண வருக"
என்று பன்முறை இருகை ஏந்தினர்
நன்மண விருந்துக்கு நண்ணினர் அனைவரும்.
மணமகள் மணமகன் மகிழ்வொடு குந்தினர்
துணையொடு துணைவர் இணைந் திணைந்து குந்தினர்;
வரிசையாய்ப் பல்லோர் வட்டித் திருந்தினர்.
விருந்து முடிந்து, விரித்த பாயில்
அமர்ந்தார்க்குச் சந்தனம் அளித்துக் கமழ்புனல்
அமையத் தெளித்தே அடைகாய் அளிக்க
மணமக்கள் தமை வாழ்த்தினர்; செல்கையில்
எழில்மண மக்கள் ஈன்றோர்
வழியனுப்பினர் வணக்கம் கூறியே!

( 280 )






( 285 )







( 290 )





( 295 )




( 300 )




( 305 )




( 310 )




( 315 )





( 320 )




( 325 )





( 330 )





( 335 )





( 340 )




( 345 )




( 350 )





( 355 )




( 360 )




( 365 )




( 370 )

சோலையிற் காதலர்

எண்சீர் விருத்தம்

நகைமுத்து வேடப்பன்
மகிழ்ச்சி யோடு
நாழிகையை வழியனுப்பிக்
காத்தி ருத்தார்;
மிகநல்ல மணிப்பொறியும்
ஐந் தடிக்க
விசைவண்டி ஓட்டுபவன்
வந்து நின்று,
'வகைமிக்க அரசினரின்
பூங்கா விற்கு
வருகின்றீரோ? என்று
வணங்கிக் கேட்டான்!
தகதகெனத் தனியறைக்கோர்
அழகைச் செய்யும்
தையலினாள் வேடப்பன்
''ஆம், ஆம்'' என்றார்.

விசைவண்டி ஏறினார்
இரண்டு் பேரும்!
விரைகின்ற காவிரியின்
வெள்ளம் போல
இசைஎழுப்பிச் சோலைக்குள்
ஓடி நிற்க
இறங்கினார் மணமக்கள்
உலவ லானார்.
அசையும் அவள் கொடியிடையை
இடது கையால்
அணைத்தபடி வேடப்பன்
அழகு செய்யும்
இசைவண்டு பாடுமலர்
மரங்கள் புட்கள்
இனங்காட்டிப் பெயர்கூறி
நடத்திச் சென்றான்

வளர்ப்புமயில் நாலைந்து
மான்ஏழெட்டு
மற்றொருபால் புறாக்கூட்டம்
பெருவான் கோழி
வளைகொண்டை நிலந்தோயக்
குப்பைத் தீனி
வாய்ப்பறியும் நிறச் சேவல்
கூட்டுக் கிள்ளை
விளைக்கின்ற காட்சியின்பம்
நுகர்ந்தே ஆங்கோர்
விசிப்பலகை மேலமர்ந்தார்
வெள்ளைக் கல்லால்
ஒளிசிறக்கும் இரண்டுருவம்
காணுகின்றார்-
ஒருபெண்ணின் அருள்வேண்டி
ஒருவன் நின்றான்

இரங்காதோ பெண்ணுளந்தான்
இந்நே ரந்தான்!
இன்பத்தில் ஒருசிறிதே
ஒன்றே முத்தம்
தரவேண்டும் எனக்கெஞ்சி
நிற்கக் கூடும்
தந்திட்டால் கைச்சரக்கா
குறைந்து போகும்?

சரியாக ஆறுமணி
மாலைப் போது
தணலேற்றும் தென்றலினை
எவன்பொ றுப்பான்?
"தெரிந்தனையோ?" எனக்கேட்டான்
எழில்வே டப்பன்!
"தெரிந்த தென்றாள்." வீட்டுக்குச்
செல்லலுற்றார்.





( 375 )




( 380 )




( 385 )





( 390 )




( 395 )




( 400 )





( 405 )




( 410 )




( 415 )





( 420 )




( 425 )





( 430 )

இன்பத் துறை

எண்சீர் விருத்தம்


கட்டிலிட்டார் மெத்தை, தலை
யணைகள் இட்டார்
கண்கவரும் வெண்துகிலும்
விரித்தார் மேலே
பட்டுப்போர் வைமடித்துப்
பாங்கில் வைத்தார்
பட்ட இடம் கமழ்கின்ற
பன்னீர் வீசித்

தட்டுகின்ற காம்பகற்றி
   மலர்கள் இட்டுச்
சந்தனம் பன்னீர், அடைகாய்த்
   தட்ட மைத்து
மட்டின்றி முக்கனிபால்
   பண்ணி யங்கள்
வைத்தெங்கும் விளக்கங்கள்
   ஏற்றினார்கள்

மிகச்சிறப்புச் செய்திட்ட
தனியறைக்கு
வெளிப்புறத்துத் தாழ்வாரம் நிறையக்கூடி
நகைத்தாடும் குழந்தைகளில்
ஒருவன் கேட்டான் ;
'நாங்கள்விளை யாடும்அறை
இதுவோ'? என்று!
"புகவேண்டாம், புதுமணப்பெண்
புதுமாப் பிள்ளை
புலவர்தரு திருக்குறளின்
பொருளாய்தற்கு
வகைசெய்து வைத்தஇடம்,
வாழ்வில் இன்பம்
வாய்க்கும் இடம்! மணமக்கள்
வாழ்க நன்றே!

( 435 )




( 440 )





( 445 )




( 450 )





( 455 )




( 460 )




( 465 )