'அத்தான்' என்றெதிர்வந்தாள். ஐயோ
என்றாள்
"அவன்என்னைக் கற்பழித்தான்;
உடனிருந்த
அத்தீய மாதரினால் மயக்கந் தந்தான்;
உணர்விழந்தேன் அவ்விரவில்!
விடிந்த பின்உம்
சொத்தான என்னை அவன் தொட்டானென்று
தோன்றியது மறைந்துவிட்டான்
தேடிச்சென்று
குத்தினேன்! சிறுக்கிகளை இவர்மடித்தார்
கூவினேன் கோட்டையிலே
உம்மை வந்தே.
பேழைக்குள் இந்நாட்டை அடைத்தோம் என்ற
பெருநினைப்பால், வடநாட்டார்
தமிழர் தம்மை
வாழவிடாமற்செய்யத் திட்ட மிட்டார்.
மறம்வீழும் அறம்வாழும்
என்பதெண்ணார்.
தாழ்வுற்றுப் போகவில்லை தமிழரெல்லாம்;
தமிழகத்தைப் பிறர்தூக்கிச்
செல்ல வில்லை,
வாழ்கின்ற காவிரியைப் பெண்ணை யாற்றை
வடநாட்டான் எடுத்துப்போய்விடஒண்ணாது.
முப்புறத்தும் தமழ்நாட்டின் முரசு மாக
முழங்குகின்ற திரைகடலைப்
பகைவர் வந்து
கைப்புறத்தேந் திப்போக முடிவ துண்டோ?
கன்னலது சாறுபட்டுச் சேறு
பட்டு
முப்பழத்தின் சுவைபட்டு முன்னாள் தொட்டு
முளைசெந்நெல் விளைநிலத்தை இழந்தோமில்லை.
எப்புறத்தும் வளங்கொழிக்கும் மலைகள் உண்டு
பறித்துவிட எவராலும் ஆவதில்லை.
செந்தமிழர் இருக்கின்றார் சிங்கங்கள்போல்
திறலழித்து விடஎவரும் பிறந்தா
ரில்லை.
பைந்தமிழன் மொழியுண்டு வாழ்வைச் செய்ய
படைகொண்டு வஞ்சகர்கள்
பறிப்ப துண்டோ?
வந்துநுழைந் தார்சிறிது நாள்இருப்பார்.
வளைந்துகொடுத்ததுசெஞ்சி
நிமிர்தல் உண்டு.
சந்தையவர் வாழ்வென்று நினைத்தாரில்லை
தமிழ்நாடு பணிவதில்லை
வடநாட்டார்க்கே! தேசிங்கன் அறியவில்லை அறிந்து கொள்வான்,
தென்னாட்டைத் துரும்பாக
மதித்து விட்டான்.
வீசுங்கோல் சொங்கோலாய்த் தமிழர் நாட்டை
விளையாட்டுக் கூடமாய்த்
தமிழப் பெண்கள்
பேசுந்தோற் பாவைகளாய் மறவர் தம்மைப்
பேடிகளாய்த் தேசிங்கனும்
நினைத்து விட்டான்.
மாசொன்று நேர்ந்திடினும் உயிர்வாழாத
மன்னர்களின் மக்களென
நினைக்க வில்லை.
கையொடு கூட்டிவந்து வடநாட்டார்கள்
காணுகின்ற பெண்டிர்களைக்
கற்பழிக்கச்
செய்கின்றான். அறமறியான் சுபேதார் என்னைத்
தீண்டினான். தேசிங்கு தமிழர்
தங்கள்
மெய்யுரிமை தீண்டினான். மாய்ந்தான், மாய்வான்.
விதிகிழிந்து போயிற்று
மீள்வ தில்லை.
ஐயகோ அத்தான்என் ஆவல் கேட்பீர்
ஆனமட்டும் பார்ப்போமே
வடக்கர் தம்மை!"
என்றுரைத்தாள்! பாய்ந்தார்கள் சிப்பாய் கள்மேல்
இருகத்தி வாங்கினார் திம்மன்
செங்கான்.
குன்றொத்த சிப்பாய்கள் இறந்து வீழ்ந்தார்.
கொடியொத்த இடையுடையாள்
சிரிப்பில் வீழ்ந்தாள்.
'என்றைக்கும் சாவுதான் அத்தான்' என்றாள்.
'இன்றைக்கே சாவோமே'
என்றான் திம்மன்.
நன்றுக்குச் சாகலாம் என்றாள் நங்கை.
நாட்டுக்கு நல்லதொண்டாம்
என்றான் திம்மன்.
நிலையற்ற வாழ்வென்பார் கையி லுள்ள
நெடியபொருள் நில்லாவாம்
என்பர்; ஆனால்
தலைமுறையின் வேர் அறுக்க நினைப்பவர்க்குத்
தாழ்வதிலும் தம்முயிரே
நல்ல தென்பார்!
சிலர்இந்நாள் இப்படியே என்றான் செங்கான்!
புதுமைதான் புதுமைதான் என்றான்
திம்மன்!
இலைபோட்டு நஞ்சுண்ட வீடடைந்தார்
இவ்விடந்தான் நஞ்சுண்டேன்
என்றாள் நங்கை!
மயக்கத்தால் தலைசாய் தேன் இவ்வி டத்தில்!
மணவாளர் தமைநினைத்து மெதுவாய்ச்
சென்று
துயர்க்கடலில் வீழ்வதுபோல் பாயில் வீழ்ந்து
சோர்ந்ததுவும் இவ்விடந்தான்
என்று ரைத்தாள்.
புயலுக்குச் சிறுவிளக்கு விண்ணப் பத்தைப்
போட்டழைத்த திவ்விடந்தான்
போலும் பெண்ணே
வயற்காட்டு வெள்ளாடு புலியிடம் போய்
வலியஅழைத் திட்டஇடம்
இதுதான் போலும்!
என்றுரைத்தே அடடாஓ எனநி மிர்ந்தே
இடிமுழக்கம் போற்சிரித்துப்
பின்னும் சொல்வான்
குன்றத்தைக் குள்ளநரி கடித்துப் பற்கள்
கொட்டுண்ட திவ்விடம்போ லும்சுப்பம்மா,
நன்றான தமிழச்சி, என்கண் ணாட்டி
நற்றமிழர் மானத்தின்
சுடர்வி ளக்கே
அன்றந்தச் சுதரிசன்சிங்க் உன்னைத் தொட்டே
அழிவைஅழைத் திட்டஇடம்
இதுதான் போலும்!
தேசிங்கன் உனைப்பழித்தான் ஒருவ னைநீ
சேர்த்துக்கொண் டாய்
என்றான். அவனைக் கொண்டே
தூசிநிகர் சுதரிசனைக் கொன்றாய் என்றான்.
துடுக்கான அவன்வாயைக் கிழித்தே
னில்லை!
ஆசைமயி லேநீயும் அங்கே இல்லை.
அன்புன்மேல் இருந்ததனால்
அவன்பி ழைத்தான்
'நீசாவாய் நான்செத்தால்' எனநி னைத்தேன்.
நிலைகெட்டுப் போனேண்டி;
மன்னி' என்றான்.
'ஒருவனையும் நத்தவில்லை; சிங்கன் மார்பில்
ஊன்றியது தமிழச்சி கத்தி
என்று
உருவழிந்த சுதரிசன்சிங்க் அறிவதன்றி,
ஊரைளும் அரசறிய உலகம்
காண,
துரையேநீருங்காண, அவனின் மார்பில்
சுடர்விளக்குத் தண்டுபோல்
நாட்டி வைத்தேன்
திருடரென வழிமறித்த அந்நாள் அந்தத்
திருவண்ணாமலைத்தமிழர்
தந்த கத்தி!'
என்றுரைத்தாள், திம்மனது கேட்டிருந்தான்
இதற்குள்ளே நேஞ்சிமலை
கிளம்பிற் றங்கே!
ஒன்றல்ல; பத்தல்ல நூறு பேர்கள்
உயர்குதிரை மேலேறிச் சேரி
நோக்கிக்
குன்றத்தின் வீழருவி போல்இ றங்கும்
கோலத்தைக் கண்டிருந்த
ஊரின் மக்கள்
இன்றிங்குப் புதுமைஎன்ன என்றுரைத்தார்,
'ஏ' என்றார் 'ஆ' என்றார்
கடலார்ப் பைப்போல்,
தமைநோக்கி வருகின்றார் என்ற சேதி
தனையறிந்தாள் சுப்பம்மா;
பதற வில்லை
அமைவான குரலாலே கூறி கின்றாள்;
'அத்தான்என் விண்ணப்பம்
கேட்க வேண்டும்,
நமைஅவர்கள் பிடிப்பரேல் தேசிங் கின்பால்
நமைஅழைத்துப் போவார்கள்;
வடக்கர் கைகள்
நமைக்கொல்லும்; சரியில்லை. என்னைத் தங்கள்
நற்றமிழக் கையாலே கொன்று
போட்டு
திருவண்ணா மலைநோக்கி நீவிர் செல்க.
செய்வீர்கள் இதைஎன்று
சொல்லக் கேட்ட
பெருமறவன் கூறுகின்றான்; பெண்ணே என்னைப்
பிழைசெய்யச் சொல்லுகின்றாய்;
தேசிங்குக்குத்
தருவதொரு பாடமுண்டு; தீப்போல் வானின்
தலைகிடைத்தால் மிகநன்மை
தமிழ்நாட்டுக்குப்
பெரிதான ஆலமரம் அதோபார் என்றான்,
பெட்டையும்ஆண் கிளியுமாய் அமர்ந்தார் ஆலில்.
பெரியவரே கருத்துண்டோ எங்க ளோடு
பெருவாழ்வில் ஈடுபட? கருத்தி
ருந்தால்
உருவிக்காட் டாதிருப்பீர்;கத்தி தன்னை !
உள்மறைத்து வைத்திருப்பீர்
; எதிரே சென்று
வருவோர்கள் வரவுபார்த் திருப்பீர்; வந்தால்
வந்துசொல்ல வேண்டுகின்றேன்
என்றான் திம்மன்
சரிஎன்று செங்கானும் உளவு பார்க்கத்
தனியாக உலவினான் புலியைப்
போலே!
|
( 5 )
( 10 )
( 15 )
( 20 )
( 25 )
( 30 )
( 35 )
( 40 )
( 45 )
( 50 )
( 55 )
( 60 )
( 65 )
( 70 )
( 75 )
( 80 )
( 85 )
( 90 )
( 95 )
( 100 )
( 105 )
( 110 )
( 115 )
( 120 )
( 125 )
|