பக்கம் எண் :

குறிஞ்சித் திட்டு

பிரிவு -- 26


(செழியனிடம் சில்லி பொய்க் காரணம் கூறி,
அவனை விநோதை இருப்பிடம் கூட்டி வருதல்.)

(அறுசீர் விருத்தம்)

" ஆலைமுதலாளிக்கு முதலாளி
என்வீட்டில் உன்னைக் காண
நாலைந்து நாழிகையாய்க் காத்திருக்க,
நீஎங்கே நடந்து சென்றாய்?
வேலையின்றித் தொழிலாளர் வாடுகின்றார்;
அவர்நலத்தை விரைந்து காக்க
ஏலுமன்றோ செழியனே! ஏற்கும்வகை
செய்யலாம், வருக!" என்றே.

"வெண்ணிலவில் வெண்பட்டு மேலிருந்து
முத்துத்தேர் வெளிவந்தாற்போல்
கண்ணிரண்டும் தன்தோழர் காத்திருக்கும்
இடம்செல்லக் கடிது செல்லும்
திண்டோளன் செழியனிடம் சொல்லிநின்றான்!
செழியனுமே மகிழ்ந்தா னாகி,
"அண்ணாநீ முன்செல்; நான் ஆலைமுத்த
னிடம்சென்று மீள்வேன என்றான்!

மின்விளக்குப் பகல்செய்ய; பொன்னுடம்பு
மெல்லுடைமேல் விளக்கம் செய்யப்
பன்மணிகள் இழைஒளியோ பார்ப்பவரின்
பார்வையினை அள்ளக் கள்ளப்
புன்னகையோ இதழ்க்கடையில் பூரிக்க,
விழிமலரோ கூம்ப, அன்னாள்
தன்முகவாய் மலர்மீது செங்காந்தள்
விரல்ஊன்றித் தனித்தாள் அங்கே.

செழயன் வந்தான்; வரவேற்றான் சில்லி,
இல்லில் "முதலாளி எங்கே?" என்ற
மொழிவிடுக்க,மறுநொடியில்; முதலாளி
கட்குமுதலாளி அந்த
எழிலறையில் இருப்பதனை நீயேபோய்க்
கண்டிடுக!" என்றான் சில்லி
செழியன்தான் உள்சென்றான்; பொன்னழகின்
செப்பத்தைத் துயிலில் கண்டான்!

"புகைஎனினும் பொருந்திடுமென் கருங்கூந்தல்
முகிலின்கீழ் புதுநிலாவின்
நகைஎனினும் செய்யதாமரைஎனினும்
பொருந்துமுக இதழின் ஓரம்
தகைஎனினும், நன்மணிதான் எனினும்அமை
யச்சிரித்துத் தூங்குவாள் என்
பகைஎனினும், என்காதற் பதைப்புக்குப்
பகையல்லள்!" என்று நின்றான்.

எண்ணினான்: "துயில்வாளை எழுப்புவது
சரியாமோ? என்னை இங்கு
நண்ணுமாறு உரைத்ததுவும் என்னுறவை
நாடித்தான் போலும்! அல்லால்
பெண்ணொருத்தி இரவினிலே இளைஞன்
என்பால் பேசுதற்குக் கருதுவாளா?
கண்ணுறக்கம் காட்டுவதும் நாடகமோ?"
என்றுவிரல் நொடித்தான் நன்றே!

குளிர்க்கையால் மலர்விழிகள் தடவி, ஒரு
கொட்டாவி வாங்கி; மெல்ல
விளக்குமுகம் திருப்பியவன் விழியினிலே
பட்டவிழி விரைந்து மீட்டு:
"வெளிச்சென்றான் சில்லியவன் உமையழைக்க;
நீர்வருமுன் விழிதுயின்றேன்;
துளிச்சினமும் கொள்ளற்க! செழியனே,
அமர்க!" என்று தோகை சொன்னாள்.

(வேறு) வெண்பா

நெஞ்சணையும் காதல் நெருப்பணைய, அச்செழியன்
பஞ்சணையில் அன்னவளின் பக்கத்தில் -- நஞ்சணையும்
கண்பார்க்க உட்கார்ந்தான், கட்டமுதக் கைதாவி
உண்பார்க் குதவியது போல்.

"இரவழைக்கும் கூகைபோல் ஏந்திழையே என்னை
வரவழைத்தாய், வல்லிருளில்! என்ன -- தர அழைத்தாய்!"
என்று மொழிந்தான்; இசைந்தானென் றெண்ணியவள்
ஒன்று மொழிந்தாள் உவந்து.

என்னைத் தரஅழைத்தேன் கண்ணாளா! என்றனுக்கே
உன்னைத் தரநீயும் ஒத்துக்கொள் -- பின்னை
முரசு பெறுவாயில் அரண்மனையின் முந்த
அரசு பெறுவாய்என்னால்!"

"ஏய்தரஓர் வேங்கைக்கு யானைஅடித் தேசிறிய நாய்தரவும் ஒண்ணுமோ நங்கையே! -- நோய்தருமிச்
சொல்லைச் சிரித்துநீ சொல்லாதே! -- தோகைஉன்
முல்லைச் சிரிப்புவாய் மூடு.

"தன்னிற் சிறந்த தமிழும், தமிழ்வளர்த்த
எண்ணிற் சிறந்த மறவர்களும் -- பொன்னிற்
பொலிவுமுள்ள தாய்நிலத்தைப் புன்செயலால் மாற்றும்
வலிவுமுள்ளதோஉனக்கு மற்று

"சேறும்செந் தாமரையும் போலே செறிந்தஇடை
ஊறும் உறுப்பழகும் உள்ளவள்நீ -- கூறும்
இடையூறு பட்டேன் எதிரி இதழின்
கடையூறு தேனேஎன் காப்பு!"

எனக்கேட்ட மங்கை இனிஆவ தெண்ணி,
மனக்கோட்டம் தீர்ந்தாள்போல வாய்ச்சொல் -- தனைக்காட்ட
உன்கருத்தே என்றன் உயிர்வாழ்க்கை அல்லாமல்,
என்கருத்தே ஒன்றுமில்லை இங்கு."

என்று செழியன் இருதோள் கமழ்தேய்வில்
சென்று புதைந்தாள்! சிறந்தஅறை -- நன்று
கதவடைக்கப் பட்டது: காதற்றேன் ஆற்றின்
மதகுடைக்கப் பட்டது வந்து

(வேறு)

செங்கதிர் எழுந்தது! சில்லி எழுந்தான்!
தன்மகன் தங்கவேல் எங்கென்று தேடினான்
சாத்திய அறையின் சாவித் தொளையில்
கண்இட் டிருந்தான்; காதைப் பிடித்தே
இழுத்து வந்தே, "என்னபார்க்கின்றாய்?
செழியன் விநோதை!" என்று செப்புமுன்,
தங்கவேல் தன்கையால் தந்தைவாய் மூடினான்;
இங்கிக் கூக்குரல் எழுப்பவே, அறையில்
மங்கையும் செழியனும் மலர்ந்த விழிகள்
மீண்டும் கலந்தன! பிரியவும்
தூண்டின! அறையைத் துறந்தனர் துயர்ந்தே!





( 5 )





( 10 )




( 15 )





( 20 )





( 25 )




( 30 )





( 35 )




( 40 )





( 45 )





( 50 )




( 55 )







( 60 )






( 65 )





( 70 )





( 75 )





( 80 )






( 85 )







( 90 )




( 95 )

பிரிவு -- 27

(அரசனிடம் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பண
நெருக் கடிபற்றிக் கூறுகின்றார்கள்),அனமச்சனும், படைத்தலைவனும்

(அறுசீர் விருத்தம்)

அரசனும் அமைச்சன் தரனும்
சேந்தனும் அரண்ம னைக்கண்
உரையாடும் போத மைச்சன்,
"(1) உழவொன்று (2) கல்வி ஒன்று
(3) வரைவொன்று (4) தொழிலென் றொன்று
(5) வாணிகம் ஒன்று (6) தச்சொன்

றரசேஇவ் வறுது றைக்கும்
பணமில்லை" என்று சொன்னான்.

"தகுகல்வித் துறைக்கு நானே
தலைவனா தலினால், அஃது
புகலுவேன்; பள்ளி எல்லாம்
புதுக்கிட வேண்டும்; கற்போர்
தொகைமிக்க தாத லாலே,
புதுப்பள்ளி துவக்க வேண்டும்:
நகும்படி வரும்ப டிக்கு
நம்கணக் காயர் நைந்தார்.

"தரைப்படை, குதிரை, யானை,
தரையூர்தி, வான ஊர்தி,
திரைகடல் ஊர்தி, மற்றும்
செழும்படை, இவற்றிற் கான
பெரும்பொருள் இல்லை; சட்டை
பெட்டிகள் புதுக்க வேண்டும்;
கருவிகள் திருத்த வேண்டும்;
படைவீடு கட்ட வேண்டும்!"

என்றனள், மருந்து வத்தின்
இயல்பினன் அழைக்கப் பட்டான்
"இன்றைய நிலையிலே, மன்னா!
எழில்மருத் துவத்து றைக்கே
ஒன்று பல்லா யிரம்பொன்
உடன்தேவை! மருந்துமில்லை;
நன்றான கருவி இல்லை;
நாம் வாங்கவேண்டும்!" என்றான்.

துறைமுகத் தலைவன் வந்தான்.
"மதகுகள் உடைசல், வாய்க்கால்
பழுது, நல் வடிகால் தூர்ப்பு,
வயற்காவல் மிகஇ ழுப்பு!
மழைஇல்லை! பொறிகள் இல்லை;
மண்ணீரை மேலெ ழுப்ப!
உழவர்க்குக் கடனகொடுக்க
ஒருகாசும் இல்லை!" என்றான்.

வாணிகத் துறைத்த லைவன்
வந்துவேந் தனைவணங்கி,
"மாண்புறு தொழிலாளர்கள்
வயிற்றிலே ஈர மில்லை;
பேணும்எப் பொருள்விளைவும்
பெருகிட வில்லை நாட்டில்!
நாணமாம் வெளியிற் சொன்னால்!
நம்மிடம் ஒருகாசில்லை!

"வரும்படி அதிக மாக
வரும்படி செய்ய வேண்டும்;
தரும்படி செய்ய வேண்டும்.
செலவுக்குத் தகுபொருள்கள்;
இரும்படித் தொழிலா ளர்கள்,
இனும்பல தொழிலா ளர்கள்,
பெரும்படி யாப்பொருள்கள்,
பெருக்கவே! இதுவு மன்றி,

"துன்பம்வந் துற்ற போது
தொழிலாளர் தங்கட் கெல்லாம்
அன்புகாட்டுவதாய்ச் சொல்லி,
அரைவயிற் றுக்கூ ழுக்கும்
வன்புசெய் கின்றார் ஆலை
மடையர்கள் என்றால், அன்னார்
என்பினை உடைக்க வேண்டும்
எழில்நாட்டை ஆளவந்தார்!

"அதுமட்டும் போதா தென்பேன்;
ஆலையின் தொழிலா ளர்க்கே
எதை? என்று? தருதல் வேண்டும்
அதை அன்றே தருதல் வேண்டும்;
பொதுநிதி எங்கே? நாட்டைப்
பொசுக்கிடும் பசியைப் போக்க
அதுவன்றோ தேவை? இன்றேல்
அழிவன்றோ தாய்நாட்டிற்கே!"

சொல்லினான் இவ்வா றேபின்
தொழிற்றுறைத் தலைவன் வந்தான்.
"அல்லல்நீக் குந்தொ ழிற்கே
அடிப்படைப் பொருள்கள் எல்லாம்
இல்லை! உண்டாக்கக் காசும்
இல்லை! ஓர் எடுத்துக் காட்டு
நல்லவாறுரைப்பேன் கேட்க!
நடுமண்ணுக்குள் புகுந்தே.

"பொன்னெடுத் திடஉ ழைப்போர்
பொதுத்தொழி லாளர் அன்றோ?
மன்னவர் அவர்கோ ரிக்கை
மறந்ததும் வியப்பே அன்றோ?
என்னதான் செய்தீர்! பின்னர்
இதைவிடப் பெரிய வேலை?
பொன்வேண்டும் தொழிற்று றைக்கே
பொழுதுவீ ணாயிற் றெ"ன்றான்.

வரைவெனும் துறைத்த லைவன்
வந்துநின் றுரைக்க லானான்;
"தெருவெலாம் சேறும் மண்ணும்,
தெருச்சாலை தரையுள் மட்டம்
நரிஎலாம் ஊளைப் பாடல்
நடத்திடும் அலுவல் இல்லில்
உரைப்பதேன் ஒருநூ றாயி
ரம்பொன்கள் தேவை!" என்றான்.

உயர்தச்சுத் துறைத்த லைவன்
உரைக்கின்றான எனது மன்னா!
புயல்தொடும் கட்ட டங்கள்
புதுக்கிட வேண்டும் என்றீர்
அயலுள மலையை நன்செய்
ஆக்கிட வேண்டு மென்றீர்
பயில்பள்ளி எல்லாம் தச்சுப்
பயிற்றிட வேண்டும் என்றீர்!

"ஓவியம் நாட்டி லெங்கும்
ஓங்கிட வேண்டும் என்றீர்
பாவியம் பியப டிக்கே
பற்பல செய்யச் சொன்னீர்.
கோவிலில் கோன்இ ருக்கை
குளமிவை இயற்றச் சொன்னீர்.
ஆவியிங் கிவைகட் கெல்லாம்
பொருளன்றோ அறிக!" என்றான்.

இன்ன வேளையிலே வாயில்
காப்பவன் "ஏந்த லேஎன்
அன்னையார் விநோதை இங்கே
அனுப்பிய சிலபேர் உங்கள்
முன்னிலை பெறவி ழைந்தார
என்றனன் முடுகி மன்னன்
"அன்னவர் வருக." என்றான்.
சுமையுடன் அவர்கள் வந்தே,

பெட்டியைத் திறந்தார், மன்னன்
பெருவியப் படைந்தான், வானை
எட்டிய ஒளியும் ஆசைக்
கெட்டாத விலையு முள்ள
கட்டித் தங்கத்தில் மின்னும்
பன்மணி நகைகள் காட்டி
வெட்டொன்று துண்டி ரண்டாய்
விலையையும் கூறினார்கள்.

"இழைபல இவைபோல் வீட்டில்
இருக்கஏன் இவைகள் எல்லாம்
பொழுதொடு போய்வா ருங்கள
என்றனன் திரைய மன்னன்,
"வழியினில் மன்னி யார்தாம்
கண்டனர்; வையம் மெச்சும்
கழுத்தணி இதனை வாங்கக்
கருதியிங்கு அனுப்பினார்கள்!"

என அந்த வணிகன் சொல்ல
வேந்தனும் எரிச்ச லோடு
"நனிஆசைக் காரி அந்த
நங்கைஓர் பகட்டுக் காரி!
தனியான போக்குக் காரி!"
எனப்பல சாற்றும் போதே,
தனிமொழி காற்சி லம்பு
பாடிடக் கடிதில் வந்தாள்!

பார்க்கும்போ தெல்லாம் நெஞ்சைப்
பறிக்கின்ற முகக் கருக்கில்
தார்க்குன்றத் தோளன் மையல்
தலைக்கேற, இருகை தாவி
வேர்க்கின்ற முகந்து டைத்து
விலகிய கூந்தல் நீவி,
சேர்க்கின்ற இடந்து டைத்தே
சிறக்கத்தன் அருகில் சேர்த்தான்.

கழுத்தணி தன்னை மன்னன்
கைநீட்டி வாங்கி, அன்னாள்
கழுத்தினில் இட்டுக் கண்ணால்
கண்டுகண் டகம கிழ்ந்தே
"முழுத்தொகை தருக" என்றான்.
அமைச்சனும் முடிச்ச விழ்த்தான்.
"எழுத்தெல்லாம் இனிமை யாக்கும்
தமிழ்ப்பாட்டே அழகி தெ"ன்றான்.

வணிகர்க்கு விலைகொ டுத்து
வந்தனன் அமைச்ச னங்கே
"பணமில்லாப் போதில் உள்ள
பணத்தையும் செலவு செய்ய
இணங்கினான் மன்னன் என்றான்
இவளுக்கேன் பொறுப்பே இல்லை?
அணங்கின்பால் அரசர்க்குள்ள
ஆசையும் அறுதல் வேண்டும்!"

என்றனன் அமைச்சன், மங்கை,
என்னாசைக் காக நான்போய்
ஒள்றுமே வாங்கேன்; மன்னர்
உள்ளத்தை நிறைவு செய்தல்

என்கடன், மன்னர் ஆசை
என்ஆசை, அமைச்சன் என்பால்
அன்புகாட்டாதிருக்க
வேண்டு"மென் றாள்அவ் வஞ்சி!

"நெருக்கடி யான நேரம்!
நிறுத்துக தனிமைச் செய்தி!
தெருக்களில் தொழிலா ளர்கள்
திடுக்கிடுமாறு மேனி
உருக்குலைந்து அலைகின் றார்கள்;
உணவிட்டுக்காக்க வேண்டும்;
பெருத்தஆலைக்காரர்தம்
பிழையையும் திருத்த வேண்டும்.

"வீணாகச் சிறைப்பட்டோரை
விடுதலை செய்ய வேண்டும்;
காணாதார் போலும், கேட்கக்
காதிலார் போலும் மன்னர்
வாணாளைக் கழிப்ப தென்றால்,
வையகம் நகைக்கும் நம்மை
கோணாமல் நெஞ்சு வந்து
ஒருதொகை கொடுப்பீர்!" என்றான்

"தொழிலாளர் வீடு தோறும்
சோறிட்டு வருவேன் நானே!
எழிலான அத்தான்! நீங்கள்
முதலாளி யிடம்போய், நல்ல
மொழிகூறி அமைதிக் கான
முடிவினைச் செய்ய வேண்டும்.
பழியின்றிச் சிறைப்பட்டாரைச்
சேர்ந்தனார் விடுத்தல் பாங்கே!"

என்றனள் "இருப்ப தெல்லாம்
இழிவெய்தும் தொழிலாளர்க்கு
நன்றாகச் செலவு செய்க
நங்கைஎன் விநோதை! மற்றும்
இன்றுநான் ஆலைக் காரர்
இடர்செய்யா வகைசெய் கின்றேன்;
பின்பொரு திட்டம் காண்போம்
அரசியற் பெருந்தொகைக்கே!"

அரசனிவ் வாறு கூற
அமைச்சனும் பிறரும் ஆங்கே
பெருமகிழ் வெய்தி னார்கள்.
பெண்ணரசாம் விநோதை
"விரைவினில் செல்ல வேன்டும
எனக்கூறி வெளியிற் சென்றாள்.
பிரிவினைப் பொறாத மன்னன்
கையினைப் பிசைந்தி ருந்தான்.

வாட்டத்தில் இருந்த ஏழை
மக்கட்குத் தணிவு கூறி
"வீட்டுக்கு வீடு சோறு
விநோதைவந் தளிப்பாள்!" என்று
கூட்டத்தில் சேந்தன் பேசிக்
கொண்டிருந் திட்ட போது
"தோட்டத்தில் விநோதை உம்மை
அழைத்தனள என்றாள் தோழி.

தோழிஅம் புயமு ரைத்த
சொற்கேட்ட சேந்தன் "மக்கள்
வாழநல் லுணவ ளிக்கும்
வகைகேட்க எண்ணம் போலும்.
நாழிகை ஆகு முன்னே
நண்ணுவேன்!" எனந டந்தான்;
ஆழத்தில் சுழல்கா ணாதான்
ஆழ்கடல் முழ்கலானான்.

( 100 )




( 105 )






( 110 )




( 115 )





( 120 )





( 125 )




( 130 )





( 135 )





( 140 )




( 145 )





( 150 )




( 155 )





( 160 )





( 165 )




( 170 )





( 175 )





( 180 )




( 185 )





( 190 )




( 195 )





( 200 )





( 205 )




( 210 )





( 215 )





( 220 )




( 225 )





( 230 )




( 235 )





( 240 )





( 245 )




( 250 )





( 255 )





( 260 )




( 265 )





( 270 )





( 275 )





( 280 )





( 285 )




( 290 )





( 295 )





( 300 )




( 305 )





( 310 )




( 315 )





( 320 )





( 325 )




( 330 )

பிரிவு -- 28

(சேந்தனுக்கு விநோதை விரித்த வலை கிழிகின்றது.)

(எண்சீர் விருத்தம்)

புறஞ்சுவரின் நிலைக்கதவு திறந்து கொண்டு
பூங்காவின் உட்புறத்தில் புன்னை நீழல்
மறைப்பினிலே பின்கைகள் சேர்த்து லாவி
மங்கைவரும் வழியினிலே விழியைச் சேர்த்தான்.
வெறுப்புற்றான். மங்கைமேல்; 'என்னை இங்கு
வீணாகக் காத்திருக்க வைத்தாள்!" என்றான்.
குறுக்கிட்டாள் அம்புயந்தான்; அவளைச் சேந்தன்
"கொழுக்கட்டைக் கண்ணாளே!" என்றழைத்தான்.

"எங்கேடி உன்தலைவி?" என்று கேட்டான்.
"எதற்காக காத்திருக்க வைத்தாள்?" என்றான்.
"உங்கள்வீட் டுப்பிழுக்கை நானா?' என்றான்.
"உயிர்குடிக்கும் படைத்தலைவன்!" என்று சொன்னான்.
"மங்கையவள் விழியிமைக்கா தும்மைக் காண
வழியினிலோர் அறைதனிலே இருக்கின் றாளே;
அங்குநீர் எழந்தருள வேண்டும்!" என்றாள்.
"இதுதானா முறை?" என்று சேந்தன் சென்றான்.

"வந்தாரை வழிவந்து வருக என்னும்
மரியாதை தெரியவில்லை உனக்கே!" என்று
நொந்தானாய் விநோதையிடம் நுவன்றான் சேந்தன்.
"நோய்காணா மருந்துவனின் மருந்து போல
வந்தீர்என் கைப்புறத்தில் சாய்வீராயின்
மனவருத்தம் தணிந்துவிடும்!" எனந கைத்துக்
"கொந்தாதீர் என்மையல் தீர்ப்ப தற்கே
கொணர்வித்தேன்!" எனச்சொன்னாள், கொதித்தான் சேந்தன்.

"கழிவடையில் குளிப்பதற்கா? ஒருவன் வேறே
கண்டறிவாய் நானல்லன்!" என்று சேந்தன்
விழிசிவந்தான்; விநோதையவள் மனந்தீ யானாள்.
"வேலை இருந் தாற்பாரீர், போவீர்!" என்றாள்.
பொழிதேனில் புதுமலரில் ஒன்றைக் கிள்ளி்
மோந்தபடி முறுக்காகப் போனான் சேந்தன்.
அழித்துவிட்டு மறுவேலை! என்றன் மையல்
அழியானை அழியாமல் வாழேன்!" என்றாள்.




( 335 )





( 340 )




( 345 )





( 350 )




( 355 )





( 360 )

பிரிவு -- 29

(சேந்தனை ஒழிக்கச் சில்லியிடம் திட்டம்.)

(அகவல்)

"சேந்தனை ஓழிக்க என்ன செய்யலாம்?"
சில்லியைக் கேட்டாள் இவ்வாறு சேயிழை!
"இங்குவா, உட்கார் இப்படி நங்கையே!
சேந்தனை ஒழிக்க என்ன செய்யலாம்?
என்று கேட்டாய் இயம்பு கின்றேன்;
தெருக்கதவு திறந்திருப்பது பெரும்பிழை! மூடிவா!
நானொரு நல்ல ஆணுனக்கெ" ன்றான்.
"சீநீ செருப்பென்று!" திட்டினாள் விநோதை.
"நீயோ எனக்கு மகள்!" என நிறுத்தியப்
பேச்சை முடித்தான்; பிழையுணர்ந்த தவளாய்

"அதுசரி அதுசரி ஐயா!" என்றாள்.
"இப்போ தென்னை என்ன கேட்கிறாய்?"
என்று கேட்டான். எரிச்சலொடு மங்கை
"சொன்னேன்; சொன்னதை நீயும் உரைத்தாய்;
இன்னும் கேட்ப தென்ன மடமை?"
என்றாள். "பெண்ணே கேளிதை!" என்றே
"சேந்தனை ஓழிப்பதா ஒளிப்பதா? செப்புவாய்!"
என்று கேட்டான் சில்லி என்பான்!

"ஒளிப்ப தென்றால் என்ன உரை" என்று
நவின்றாள் மங்கை! "நாடு கடத்தல்
ஒளிப்பது! நல்லுயிர் மாய்ப்பது ஒழிப்பது!
யாதுன் விருப்பம்? என்று கேட்க
"மாய்க்க வேண்டும்!" என்றாள் மங்கை
"மாய்க்கவோர் மறவன் வேண்டும்!" என்றான்!
அதேநேரத்தில் அவன்மகன் தங்கவேல்
குருதி கொட்டும் ஒருகத்தியுடன்
குறுக்கிலோடி அறையின் கதவை
மூடினான்! அவனை மொய்குழல் பார்த்தாள்.
சில்லியும் பார்த்தான்! சேயிழைக் குரைப்பான்;
"அவன்என் பிள்ளை; அருந்திறல் மறவன்;
அவனைக் கொண்டே சேந்தனை அழிப்போம்!"
என்றொரு போடு போட்டான். ஏந்திழை
என்னுடன் அவனை அனுப்புக!"
என்றாள். நன்றென அனுப்பினான் சில்லியே!

(வேறு) பஃறொடை வெண்பா

பொன்னார் பொறியியக்க வண்டியிலே பூங்கொடியும்
தன்மான மில்லாத தங்கவேல் என்பவனும்
சென்றார்கள். அங்கோர் தெருவினிலே முன்னமே
ஒன்றாக ஏழைமக்கள் கூடி உவப்புடனே
"இன்று நமக்குணவாம்!" என்றெல்லாம் பேசுகையில்

கன்றோடு தாய்போலக் கட்டழகி பையனுடன்
வந்திறங்கி னாளங்கே. வந்தனர்பின் வண்டியிலும்
"நொந்தே இருப்பீர் நுவலுவதைக் கேட்டிடுவீர்;
நான்தான் அரசி; குறிஞ்சிக்கு நான் தலைவி!
நான்தான் உமக்கெல்லாம் நல்லுரையை நல்க
நினைத்தேன்; நினைத்தபடி சொல்கின்றேன். உங்கள்
மனச்சோர்வை மாற்றுவேன் வண்டியிலே நல்லுணவும்
ஏற்றினேன். என்னோடே ஓட்டிவந்தேன் வண்டிகளை!
சோற்றைப் பெறுங்கள்; கறிபெறுங்கள்; தோய்தயிரும்
நின்றுகுவளை நிறையப் பெறுங்கள என்றாள்.

'நன்றுநன்றெ'ன்று நடுத்தெருவில் கையேந்த
ஆட்கள் உணவுகறி அள்ளிஅள்ளித் தந்தார்கள்.
நாட்கள் பலவாக நல்லுணவு காணாதார்
வாட்டும் பசிதீர வாங்கியுண்ண ஆளானார்கள்.
காட்டுக் குயில்மொழியாள் கண்டு மகிழ்ந்து நின்றாள்.
தங்கவேல் அங்கே தனித்திருந்த ஓர்ஏழை
மங்கைமேல் கண்ணாய் மதிஒன்று மில்லானாய்
மாட்டுத் தொழுவத்தில் மங்கைதனைக் கூட்டிப்போய்
ஏட்டை அவிழ்த்தான்; இடர்ப்பட்டான் தோதின்றி!

"வேண்டுமட்டும் நான் தருவேன்; வெல்லமே நீ எனக்கு
வேண்டுமட்டும் இன்பம்விளை!" என்று ரைத்திடவே
"ஐயையோ!" என்றழுதாள் அங்கிருந்தோர் ஓடிவந்து
மெய்யறிந்து கொண்டு விநோதையிடம் சொல்ல, அவள்
உள்ளம் மகிழ்ந்தாள்; "தங்கவேல்! உன்னாசை
வெள்ளம் அணைகடக்க வேண்டாம்; சிறிதுபொறு.
ஏதுமறி யாதவனென் றெண்ணினேன்! என்றனுக்குத்
தோதுதான் நீ என்று தோன்றிவிட்டது ஆகையினால்,

வண்டியிலே குந்தியிரு! வாராத பெண்களைநீ
அண்டுவது நன்றல்ல; அன்பனே." என்றவனின்
கண்ணின்கீழ்க் கிள்ளித்தின் கைவிரற்கு முத்தமிட்டு
பெண்ணினத்தின் பேர்கெடுக்கும் பேதை அவள்என்ன
உண்டு மகிழ்ந்திருந்த மக்களிடம் ஒடிவந்து
"தொண்டர்களே! ஆலைத் தொழிலாளரே! நீவிர்
என்றனுக்கும் மறவார்க்கும் கட்சிஒன் றேற்பட்டால்
என்றனையே ஆதரிக்க வேண்டுகின்றேன் உங்களை!
இன்னும் பலதெருக்கள் யான்போக வேண்டுமன்றோ?
சென்று வருகின் றேன்!" என்றாள்.


( 365 )




( 370 )





( 375 )




( 380 )





( 385 )




( 390 )




( 395 )







( 400 )





( 405 )




( 410 )





( 415 )




( 420 )





( 425 )





( 430 )




( 435 )


பிரிவு -- 30

(தங்கவேல் என்பவன் சில்லியின் மகன். அவனுக்கும்
விநோதைக்கும் ஏற்பட்ட தொடர்பு வெளிப்படுகின்றது.)

(அகவல)

சில்லி வீட்டுக் கொல்லை நடுவிலோர்
நெல்லி மரத்தின் நிழலில் தங்கவேல்
தூக்கினான்; அவனுடம்பு துவளும் மிலாறு!
வீங்கிய கண்இமை சிவப்புவெண் காயம்!
சுருண்ட தலைமயிர் சுவைத்த பனங்கொட்டை!
திறந்த உதட்டுவாய் சேற்றுச் சாக்கடை!
இறந்த நாயை இன்னொரு நாய்வந்து
மோந்தது போல்ஒரு முட்டாள் வந்து,
தங்கவேல் முகத்தில் தன்முகம் வைத்துத்
"தூக்கமா?" என்று கேட்டான்; தொட்டான்!
உருட்டினான்! கதிரவன் உச்சியில் இருக்க
"இருட்டு வெளுக்குமுன் ஏனடா எழுப்பினாய்?"
என்று தங்கவேல் எழுந்துட் கார்ந்தான்.
கொட்டாவி முடிந்த்பின் கூறுகின்றான்;

"வெந் நீருக்கு பன்னீர் வாங்கிக்
குளிக்கும் ஒருத்தியின் கூட்டுறவு கிடைத்தது.
கதிரவன் மின்னும் கதிர்கொண்டு நெய்ததோ
என்னும் பொன்னுடை உடுத்திவந் தென்னுடன்,
விளையாட்டு விழாவை முடித்தபின், இரவே
அலுப்புடன் வந்து, கண்ணை மூடினேன்.
வந்துநீ எழுப்பினாய் என்றான்! வந்தவள்
மெல்லியர் போற்றும் விநோதை!" என்றான்.

"மெரும்புளியங்கொப்பு பிடித்து விட்டாய்!
வரும்படிஇன்ப வாய்ப்பு மிகுமினி!
நண்பினாலிந்த நாட்டுக்கும் நலமே!"
என்றான். "போய்வா எல்லாம் தெரியும்!"
என்று தங்கவேல் இயம்பிட வந்தவன்
சென்றான், வழியில் அவனைச் சின்னான்
கண்டான். வந்தவன் தங்கவேல் கதையை
விண்டான். சின்னான் வியப்புடன் செல்கையில்:
பொன்னனைக் கண்டு தங்கவேல் புதுமையைச்

சொன்னான், பொன்னன் போகும் போது
நன்னனிடத்தில் நடந்தது நவின்றான்.
நன்னன் இரவு நாடகம் பார்க்கையில்
சொன்னான் எவர்க்கும், எவரும்
பின்பு பலரிடமும் பிரித்தார் கட்டினையே!

( 440 )




( 445 )




( 450 )





( 455 )




( 460 )





( 465 )




( 470 )





( 475 )