செந்தமிழ்நான் மறைமறைக்க, வையம்
கேட்டால்
சிரிப்பதோர் ஆரியநான் மறையைச் செய்தோம்,
தந்ததிரு வள்ளுவன்நூல் மறைக்க நான்கு
சாதிசொல்லும் மனுநூலைச் செய்தோம். மற்றும்
எந்நூலும் தமிழ்நூலே எனல்ம றைக்க
இழிநூலாற் கலப்படத்தைச் செய்தோம்; இந்தக்
கல்நூலைக் கண்ணகியை மறைக்க இந்நாள்
காணும்நூல் எதுஎன்றார் ஆரியர்கள்.
"தமிழ்ஒழுக்க வேர்இருக்கும் வரைதமிழ்ச்சீர்
தடங்கிளையும் அடிமரமும் இருக்கும். இந்நாள்
தமிழ்ஒழுக்க வேரழிந்தால் தமிழர் வாழ்வு
தலைகவிழும எனும்முயற்சி கைகூடுங்கால்
அமைவுடைய நெடுஞ்செழியன் நான்கு சாதி
அறம்என்றான்; நாட்டோடும் அழியச் செய்தாள்;
தமிழரசி கண்ணகியைத் தொலைப்பதெந்நாள்
தமிற்கூடி ஆரியர்இவ்வாறு ரைத்தார்.
செம்பிலும், கல்லிலும் மஞ்சள் சாணி,
சேற்றிலும் எவனமைக்கும் உருவி னுக்கும்
நம்பெரியோர் ஆரியர்கள் மறையைக் கொண்டே
நல்லுயிர்ஏற்றுதல்வேண்டும் என்ற சட்டம்
பொய்ம்மைஎன் றாக்கியே கண்ண கிக்கும்
பொலிவுறவே உயிரமைத்தான் தமிழத் தச்சன்
நம்பொய்மை கற்கோட்டை தூளாயிற்று
நாளைநிலை என்என்றார் ஆரியர்கள்
| >
( 75 )
( 80 )
( 85 )
( 90 )
( 95 )
|