இசையமுது
தேனருவி் II
இதரப்பாடல்கள்
ம. சிங்காரவேலர்
|
சிங்கார வேலனைப்போல் சிந்தனைச்
சிற்பி
எங்கேனும் கண்டதுண்டோ?
சிங்கார வேலனைப்போல்!
பொங்கிய சீர்திருத்தம் பொலிந்ததும் அவனால்
பொய்புரட் டறியாமை பொசிந்ததும் அவனால்
சங்கம் தொழிலாளர்க் கமைந்ததும் அவனால்
தமிழர்க்குப் புத்தெண்ணம் புகுந்ததும் அவனால்!
செங்கதிர் ஒளிபோல் அறிவில் தெளிந்தவன்
திங்களின் ஒளிபோல் அன்பில் குளித்தவன்!
(சிங்கார வேலனைப்போல்)
நாடு விடுதலை பெற்றதும் அவனால்
நாத்திகக் கருத்தனல் கனன்றதும் அவனால்
பாடுபடுவார்க் குரிமை உயிர்த்ததும் அவனால்
பழமையில் புதுமை மலர்ந்ததும் அவனால்!
ஓடும் அருவியைப்போல் உண்மையில் தெளிந்தவன்
உறுதியில் எஃகினுக்கும் ஊட்டம் அளித்தவன்!
(சிங்கார வேலனைப்போல்)
மூல தனத்தின்பொருள் புரிந்ததும் அவனால்
புதுவுலகக்கனா முளைத்ததும் அவனால்
கோலப் பொதுவுடைமை கிளைத்ததும் அவனால்
கூடின அறிவியல், அரசியல் அவனால்!
கடல்வான் ஆழ்அகலக் கல்வியைக் கற்றவன்
கண்ணாய் உயிராய்த் தமிழர்க் குற்றவன்!
(சிங்கார வேலனைப்போல்)
தோழமை உணர்வு தோன்றிய தவனால்
தூய தன்மானம் தொடர்ந்ததும் அவனால்
ஏழமை இலாக் கொள்கை எழுந்ததும் அவனால்
எல்லோர்க்கும் எல்லாம் என்றுணர்ந்ததும் அவனால்!
போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி
போதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி!
(சிங்கார வேலனைப்போல்)
|
( 5 )
( 10 )
( 15 )
( 20 )
( 25 )
|
இல்லை என்பேன் நானடா!-அத்
தில்லை கண்டுதானடா!
பல்லோர் பணம் பறித்துப்
பாடுபடாதார்க் களிக்கும்
கல்லில் செம்பில் தீட்சிதர்கள்
சொல்லில் செயலில் உண்மைப் பொருள்
(இல்லை
என்பேன்)
இல்லை உரு அப் பொருளுக்
கென்பதை மறப்பதோடா?
கல்லைச் செம்பைக் காட்டுதற்குப்
கட்டணம் பறிப்பதோடா? (இல்லை என்பேன்)
பல்லைக் காட்டும் ஏழைமுகம்
பார்க்கவும் வெறுப்பதோடா!
பால்பருகத் தீட்சிதர் ஊர்த்
தாலியை அறுப்பதோடா? (இல்லை என்பேன்)
காட்டும்சிலை கடவுள்எனில்
காசுவாங்கச் சொல்லுமோடா?
கையுழைப் பிலாதவரின்
பொய்நடத்தை செல்லுமோடா?
தேட்டைக்காரர் சொற்கள் பண
மூட்டை தன்னை வெல்லுமோடா?
தீட்சிதராம் தேவர்களை
வாந்திபேதி கொல்லுமோடா? (இல்லை என்பேன்)
தொத்துநோய் அகற்றும் வன்மை
அச் சிலைக் கிருந்ததோடா?
தோள்எடுத்த அரசினரின்
சொல்லுக்கஞ்சி வாழுமோடா?
பத்துநாள் விழா நிறுத்தச்
செப்பினால் பொறுக்குமோடா?
பட்டம்பகல் கொள்ளைக்கென்றே
திட்டம் செய்த சிலையிலே உயிர் (இல்லை என்பேன்)
தட்டான் மணிக்கோவையும் ஓர்
காத்தானி பூமாலைகளும்
சிட்டா நாதசுரங்களும் ஓர்
சேணியன் பட்டுடை அழகும்
கட்டான் தோள் கன்னான் அன்று
காய்ச்சி வார்த்த திறமையதும் எட்டாப் பொருள் என்றுரைக்கும்
முட்டாள் தனம் தன்னில் உண்மை (இல்லை என்பேன்)
|
( 30 )
( 35 )
( 40 )
( 45 )
( 50 )
( 55 )
( 60 )
( 65 )
|
செக்குப் பாட்டும் சிட்டுப் பாட்டும்
ஒன்றா?-வட
சேரிப் பாட்டும் தெற்குப் பாட்டும் ஒன்றா?
கொக்குப் பாட்டும் குயிலின் பாட்டும் ஒன்றா-வட
கோணைப் பாட்டும் குழற்பாடடும் ஒன்றா?
விக்குப் பாட்டும் வீரப்பாட்டும் ஒன்றா-வட
வெட்டிப் பாட்டும் தொட்டிற்பாட்டும் ஒன்றா?
மக்குப் பாட்டும் தமிழன் பாட்டு ஒன்றா?-வட
மடையன் பாட்டை நாம் பாடுதல் நன்றா?
பிணவறையும் மணவறையும் ஒன்றா?-வட
பேயகமும் தாயகமும் ஒன்றா?
தணல் மொழியும் அணிதமிழும் ஒன்றா?-வட
தாழ்மறையும் தமிழ்மறையும் ஒன்றா?
நுணற்பாட்டும் தமிழ்ப்பண்ணும் ஒன்றா?-வட
நூற்கருத்தும் தமிழ்க் கருத்தும் ஒன்றா?
தணி புனலும் செந்தணலும் ஒன்றா?-வட
சழக்கிளை நாம் அழைப்பதுவும் நன்றா?
கல்லைத் தொழல் கடவுள் தொழல் ஒன்றா?-வட
கழிநெறியும் தமிழ் நெறியும் ஒன்றா?
புல்லணிதல் போர் அணிதல் ஒன்றா?-வட
புலைதொழிலும் கலைத்தொழிலும் ஒன்றா?
கொல்லும் தொழிலும்காப்புத் தொழிலும் ஒன்றா?-வட
கொலைவேள்ளியும் தமிழ்வேள்ளியும் ஒன்றா?
சொல்லிற் பொய்யும் நல்வாய்மையும் ஒன்றா?-வட
தூக்கில் தொங்க நாம்விரும்பல் நன்றா?
|
( 70 )
( 75 )
( 80 )
( 85 )
( 90 )
|
வறுமையில் செம்மை வாய்ப்பேச்சு
வல்லவர் சுரண்டிடும் பிழைபேச்சு!
பெருமையைப் பிடுங்கிடும் வறுமை,
பெரும்பேர் ஆற்றலைக் கெடுத்திடும் சிறுமை!
அருமை அருமை அதனுடன் வாழ்தல்,
'ஆண்டவன்' விதி எல்லாம் தாழ்தல்!
தீமைக் கெல்லாம் தீமை வறுமை,
தீர்த்துக் கட்டுவதே மக்கள் பெருமை;
ஆமை எனவாழ்தல் வீணான குறுமை
ஆக்குக தேக்குக பொருள் பொதுவுடைமை!
உடையவன் இல்லான் என்பதை நீக்கி
உழைப்பினை அனைவர்க்கும் பொதுமை யாக்கி
உழைப்புக் கேற்ற ஊதியம் தேக்கி
உலகம் நடத்துக ஓரா சாக்கி.
(வறுமையில்
செம்மை)
|
( 95 )
( 100 )
|
கண்திறக் காதபோது விடுதலை
வாழ்வின்
கதவு திறந்தால் பயன் ஏது?
எண்ணும் எழுத்துமிரு கண்எனத் தெரிந்தும்
இன்தமிழ்க் கட்டாயக் கல்வியால் மக்களின்
(கண்
திறக்காதபோது...)
மண்ணுளார்க் கெல்லாம் அழியாத செல்வம்
மன்னிய கல்வியே ஆகும்-நாம்
வண்டமிழ் நாட்டில் கட்டாயக் கல்வி
இல்லையேல் உள்ளதும் போகும்.
புண்ணே கல்லார் கண்எனத் தெரிந்தும்
புகல்தமிழ்க் கட்டாயக் கல்வியால் மக்களின்
(கண்
திறக்காதபோது...)
மதம்எனும் முள்ளுப்புதர் அடரந்திருக்கும்
வழிக்கெல்லாம் கல்வியே விளக்கம்-இங்கு
மண்டிடும் சாதிச் சண்டைக்குக் காரணம்
மனிஇருளால் வரும் சுளுக்காம்.
எதற்கும் கல்வியே வேர்எனத் தெரிந்தும்
இன் தமிழ்க் கட்டாயக் கல்வியால் மக்களின்
(கண்
திறக்காதபோது...)
|
( 105 )
( 110 )
( 115 )
( 120 )
|
மக்கள் உணர்வு பெறவேண்டும்
கலகத்துக்கெல்லாம் படிப்பாளிகள் காரணம்
|
முதலாளி எவ்வாறு முளைத்து
வந்தான் அண்ணே?
முதலாளியைப் படிப்பாளி முளைக்க வைத்தான் தம்பி
மதியாளி படிப்பாளி இரண்டும் ஒன்றா அண்ணே?
மதியாளி பிறர் நலத்தை மதிப்பு வனாம் தம்பி
எதனாலே படிப்பாளி இகழ்ச்சியுற்றான் அண்ணே?
இழிந்தனை உயர்ந்ததென்றும் இயம்பிடுவான் தம்பி
பதைபதைக்கும் கலகமெலாம் யாராலே அண்ணே?
படிப்பாளி யால்வந்த பாழும்நிலை தம்பி.
படிப்பாளர் என்பவர் யார் பகரவேண்டும் அண்ணே?
படியாளும் அரசனொரு படிப்பாளி தம்பி
உடனிருக்கும் அமைச்சனொரு படிப்பாளி தம்பி,
ஊர்ச் சட்டம் அமைப்பவனும் படிப்பாளி தம்பி,
கடிதாகக் கருத்துரைப்போன் படிப்பாளி தம்பி,
கைச்சரக்கே அறம் எனபான் படிப்பாளி தம்பி,
படிப்பாளி படுத்தியுள்ள பாடென்ன அண்ணே?
பாரிலுள்ள துன்பமெல்லாம் சட்டம் என்றான் தம்பி.
மக்கள் சமம் என்பதற்குச் சட்டமுண்டோ அண்ணே?
மதமிருக்க வேண்டுமென்ற சட்டமுண்டு தம்பி
தக்கபடி வாழ்ந்திருக்கச் சட்டமுண்டோ அண்ணே?
சண்டையிடும் சாதிவெறிச் சட்டமுண்டு தம்பி
ஒக்க எலாம் வாழ்வநற்குச் சட்டமுண்டோ அண்ணே?
ஒரினமே வாழ்வதற்குச் சட்டமுண்டு தம்பி
திக்கற்றார் காப்புக்குச் சட்டமுண்டோ அண்ணே?
தீதிற்றார் சாவுக்கே சட்டமுண்டு தம்பி.
தன் நாட்டை அயல் நாட்டின் தாய் என்றா சொன்னான்?
தன் நாடே பிறநாடாம்? சட்டமிதே என்றான்
தன் மொழியை அநல் மொழியுன் தாய் என்றா சொன்னான்?
தன் மொழியை உலக மொழி; சட்டமிதே என்றான்
தன் இனத்தைப் பிறர்பொருளால் காப்பதவன் கருத்தா?
தன் நலத்துக் காகப்பிறர் சாகவேண்டும் என்றான்
இன்னலெல்லாம் படிப்பாளி ஏற்பாடா அண்ணே!
ஏழைகளை ஏய்ப்பவனே படிப்பாளி தம்பி.
படிப்பாளி கெதிர்ப்பாளி இருப்பதுண்டோ அண்ணே?
படிப்பாளி எதிர்ப்பாளி கொள்கைஒன்றே தம்பி
படிப்பாளி உழைப்பாளிக் கெதிரி அன்றோ அண்ணே?
படிப்பாளிக் கெதிர்ப்பாளி அப்பன்தான் தம்பி
அடிப்பாளி படிப்பாளி கட்கியுண்டோ அண்ணே?
அவற்றோடும் ஆச்சாரி கட்சி ஓன்று தம்பி
படிப்பாளி கொட்டமெலாம் பறப்பதுண்டோ அண்ணே?
பறக்கடிக்க மக்களெலாம் உணர்ச்சிபெற வேண்டும்.
|
( 125 )
( 130 )
( 135 )
( 140 )
( 145 )
( 150 )
( 155 )
( 160 )
|
ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆரரிரோ
ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆரரிரோ
வாரும் இன்பத் திராவிடனே என் கரும்பே!
ஆரா அமுதே வெற்றித் திராவிடரின்
ஆரியர்கள் இங்கே அடிவைக்கு முன்னமே
வேரிட்டு வாழ்ந்த வெற்றித் திராவிடரின்
பேரர்க்குப் பேரனே பிள்ளையாய் நீ கண்ணுறங்கு!
சேர அரிதான் செல்வமே கண்ணுறங்கு!
வெண்டா மரையில் விளையாடும் வண்டுபோல்
கண்தான் பெயரநீ என்ன கருதுகின்றாய்?
பண்டைத் திராவிடத்தின் பண்பு குலைக்க இனி
அண்டைப் பகைவர் நினைப்பரெறும் ஐயமோ?
தொண்டு விரும்போம் துடை நடுங்கோம் எந்நாளும்
சண்டையிட்டுத் தோற்றதில்லை தக்க திராவிடர்கள்
எண்டிசையும் நன்றறியும் அன்றோ? இனிக்குங்கற
கண்டே, கனியே, எங்கண்மணியே கண்வளராய்.
தங்கம் உருக்கித் தகடிட்டுப் பன்மணிகள்
எங்கும் அழுத்தி இயற்றியதோர் தொட்டிலிலே
திங்கள் திகழ்ந்ததெனும் வெண்பட்டு மெத்தையின்மே
மங்கா உடல் மலரும் வாய் மலரும் கண்மலரும்,
செங்கை மலரும், சிரிப்பின் எழில் மலரும்,
தங்கா தசைந்தாடும் தண்டை இரு கண்மலரும்!
அங்கங் கழகு செயும் ஆணழகே கண் வளராய்
எங்கள் மரபின் எழில் விளக்கே கண் வளராய்.
|
( 165 )
( 170 )
( 175 )
( 180 )
|
பெண் பெற்றப் பயனைப் பெற்றேன்
அன்னையின் மகிழ்ச்சி
|
இன்றுதான் உனைப் பெற்றபயன்
பெற்றேன்
நன்று கற்றவள் உன் மகள் எனக்கேட்ட (இன்றுதான்.....)
குன்றாப் பெருமை உடைய நிறைமொழி
ஒன்றே என்றால் அதுஎன் தமிழ்மொழி
என்றே பற்பல சான்றுகள் காட்டி
மன்று மகிழவைத் தாயாம்என் கண்ணாட்டி (இன்றுதான்.....)
தமிழ்மொழி வாழ்ந்தால் தமிழர் வாழ்வார்
தமிழ்மொழி வீழ்ந்தால் தமிழர் வீழ்வார்
இமைப்பில் செயத்தக்க செய்கென்று சொல்லி
அமிழ்தைப் பொழிந்தாயாமே என் செல்வி, (இன்றுதான்.....)
ஆளப் பிறந்தவர் தமிழர்என் றாயாம்
ஆண்ட வரலாற்றை நீபுகன் றாயாம்
தோளில் தமிழர்க்கும் பலவீரம் திரும்பத்
துளிர்க்கச் செய்தாயாம் என்கட்டிக் கரும்பே. (இன்றுதான்.....)
வீரம் உடையது செந்தமிழ் நாடு
மேன்மை யுடையது தமிழர்பண் பாடு
நேர்மையோ டிவற்றை விளக்கினை என்றே
நிகழ்த்தக் கேட்டேன் என்குணக் குன்றே (இன்றுதான்.....)
|
( 185 )
( 190 )
( 195 )
( 200 )
|
கடின உழைப்புத் தொழிலாளி
கடைவிரித்தான் முதலாளி,
மடையன் என்று உனைநினைப்பான் நிற்காதே-உன்
மாண்புழைப்பை அவனிடத்தில் விற்காதே!
ஒன்றிரண்டு உதவி செய்வான்
உடலுழைப்பை உறிஞ்சிடுவான்
கொன்றழித்துத் தான்கொழுப்பான் போகாதே-பொருள்
கொலைகாரத் தொழிற்சூளையில் வேகாதே!
எண்ணங்கெட்ட பொருளாளி
இழிவுக்கெல்லாம் முதலாளி
தொண்டுறிஞ்சும் புல்லுருவி வெம்பாதே!-பசுத்
தோலைப்போர்ந்த புலியவனே நம்பாதே!
|
( 205 )
( 210 )
|
பொய்க்குக் காலில்லை
சிறகுகள் உண்டு-நான்
புகன்றேன் பொறாமைப் புலவனைக் கண்டு!
பொய்க்குக் காலில்லை சிறகுகள் உண்டு!
ஐயோ இவனும் ஒர் தமிழுக்கு மகனாம்
அயோத்தி இராமனுக்குக் கிடைத்த வீடணனாம்!
பொய்க்குக் கிடைத்ததாம் உட்காரும் இருக்கை
பொய்அவிழ்ப் பான் இனி பொறாமைச் சரக்கை!
பொய்க்குக் காலில்லை சிறகுகள் உண்டு!
உண்மை வெளியாகும் நாள் ஓன்றும் உண்டு
உயிரோ டிருக்குமா பொய் எனும் மண்டு?
கண்கெட்டு போகுமுன் களவாளி நண்டு!
காலைக் கடித்திடும் ஆக்குக துண்டு!
பொய்க்குக் காலில்லை சிறகுகள் உண்டு!
நாய்தன் வாயிலே தந்தம் உண்டாம்
நம்பினானே அதற்கொரு முண்டம்!
நோய்சேய் புலவர் தமிழுக்குத் தண்டம்
நூறுபொய் நூறுபொய் தாங்குமா அண்டம்!
|
(
215 )
( 220 )
( 225 )
( 230 )
|
கேள்வி : தென் கடலில்
முத்திருக்கும்
தென்னாட்டில் தமிழிருக்கும்
என்கின்றார் மெய்தானா தமிழரே?-அங்
கின்னம் ஏ தேனுமுண்டா தமிழரே?
விடை : தென் கடலில் முத்திருக்கும்
தென்குமரி ஆழ்த்திருக்கும்
தென்னாட்டில் எல்லாமுண்டு தோழரே-அதைத்
தெரிந்து கொள்ள ஆசைவேண்டும் தோழரே.
கேள்வி : முன்னாளின் இலக்கியங்கள்
இந்நாளின் இலக்கியங்கள்
தென்னாடில் உள்ளனவோ தமிழரே?-நீர்
செவ்வையாய் விளக்க வேண்டும் தமிழரே?
விடை : பொன்சேர்தொல் காப்பியமும்
புறப்பொருளும் அகப்பொருளும்
தன்னேரிலாக் குறளும்-தோழரே-இவை
சார்ந்தபல் லாயிரமாம்-தோழரே.
கேள்வி : முன்னாளில் இலக்கியங்கள்
மொழிந்தீர்கள் இவை என்றே
இந்நாளின் இலக்கியங்கள்-தமிழரே-நீ
ஏதொன்றும் கூறவில்லை தமிழரே?
விடை ; இந்நாளில் தோன்றியவை
எண்ணிறந்த இலக்கியங்கள்
இன்னும் அவ் விளைவின் ஒட்டம்-தோழரே-உய்
கொள்கையினில் ஆசை வைத்தேன் தோழரே.
விடை : ஒன்றாகும் மக்கள் நிலை
உணர்வொன்றே பெறத்தக்கதாம்
அன்றே உரைத்த இவை-தோழரே-இதை
ஆரும் உரையாத போது தோழரே.
கேள்வி : நன்றான அக்கருத்தை
நாட்டுகின்ற இலக்கியங்கள்
ஒன்றேனும் தனித் தமிழில்-தமிழரே-இங்
குள்ளதுவோ சொல்லிடுவீர்-தமிழரே?
விடை : இன்றுநீர் தனித்தமிழ் ஒன் றிருப்பதாக ஒப்புகின்றீர்,
குன்றிலொரு குரங்கு வந்தால்-தோழரே-அக்
குரங்குகளே குன்றாகுமோ-தோழரே.
கேள்வி ; வீட்டினில் உள்ள பொருள்
வேறுபட்டால் அந்தப் பொருள்
வேறுபொருள் என்னாரே தமிழரே-அவ்
வேறுபொருள் உம்பொருளோ தமிழரே.
விடை : வீட்டிலே இருந்த பொருள்
வேறுபட்டால் வீட்டுரிமை
வேறாகிப் போய்விடுமே தோழரே-எம்
வீட்டுப்பொருள் தேடமோ தோழரே?
கேள்வி : கூட்டக் கடல் நீரின் உள்ளே
குமரிநாடு மூழ்கிற் றென்றீர்
நாட்டுக்கிதில் பெருமை என்ன தமிழரே-இதை
நன்றாக விள்க்க வேண்டும் தமிழேரே?
வினட : பாட்டை அறியா உலகில்
பழங்குமரி அறிவு வைத்தாள்
மூட்டையுடன் இங்குவந்தோர்-தோழரே-கடல்
முத்தைச் சொல்லி அதைமறைப்பார் தோழரே.
கேள்வி : நாட்டை ஒட்டிக் குமரிநாடும்
இருந்த தென்றால் தமிழருக்குக்
கட்டஇதில் பெருமை உண்டோ தமிழரே?-நான்
காணிஇதை விளக்க வேண்டும் தமிழரே?
விடை : காட்டை ஒத்த உலகில் ஒளி
காட்டிவைத்த குமரி நாட்டைக்
காட்டினால் எம்பெருமை தோழரே-மிகக்
காணுவார் எம் பகைவர் தோழரே.
|
( 235 )
( 240 )
( 245 )
( 250 )
( 255 )
( 260 )
( 265 )
( 270 )
( 275 )
( 280 )
( 285 )
( 290 )
|
தமிழர்க்கொரு திருநாள்-அது
தைத்திங்கள் முதல் நாள்
சமயத் துறை அறவே-உயர்
தமிழ் வாழ்த்தும் பெருநாள்.
நமை ஒப்பார் யாவர்?நம்
தமிழ் ஒப்பதும் யாது?
கமழ் பொங்கள் நன்னாள்-புதுக்
கதிர் கண்ட பொன்னாள்!
ஏரோட்டும் இரு தோள்-ஒரு
சீர் போற்றும் திருநாள்!
ஆரோடும் உண்ணும் நெல்
அறுவடை செய் பெருநாள்!
போராடும் கூர் வாள்-பகை
போக்குவ தோர் பெருநாள்!
ஊரோடும் உறவோடும்
உள மகிழும் திருநாள்.
மாடுகளும் கன்றுகளும
வாழியவே என்று
பாடுகின்ற நன்னாள்! கொண்
டாடுகின்ற பொன்னாள்!
வீடுதெரு வெங்கும் எழிற்
சோடணை விளங்கும்
நீடுதமிழ் நாடு-புகழ்
நீட்டுகின்ற திருநாள்!
|
( 295 )
( 300 )
( 305 )
( 310 )
( 310 )
|
|
|
|