நாடினேன்; நடந்தேன்;
என்றன்
நகர ஓ வியத்தைத் தாண்டித்
தேடினேன்; சிற்றூர் தந்த
காட்சியைச் சிதைத்தேன்; சென்றேன்;
பாடினேன்; பறந்தேன்; தேய்ந்த
பாதையை இழந்தேன், அங்கே
மாடிவீடொன்று மில்லை
மரங்களோ பேசவில்லை! |
( 5 )
|
மேன் மேலும் நடந்தேன்;
அங்கே
'மேற்றிசை வானம்' என்னை
'நான் தம்பி என்னை நோக்கி
நட தம்பி! எனச்சொல்லிற்று!
வான்வரை மேற்குத் திக்கை
மறைத்திட்ட புகைநீலத்தைத்
தேன்கண்டாற் போலே கண்டேன்
திகழ்நாடு நோக்கிச் சென்றேன் |
( 10 )
( 15 )
|
வன்மைகொள் பருக்கைக்
கல்லின்
வழியெலாம் பள்ளம், மேடு!
முன்னாக இறங்கி ஏறி
முதலைகள் கிடப்பதைப்போல்
சின்னதும் பெரிது மான
வெடிப்புக்கள் தாண்டிச் சென்றேன்;
'கன்மாடம்' எனும்புறாக்கள்
கற்களைப் பொறுக்கக் கண்டேன். |
( 20 )
|
மகிழ்ந்துநான் ஏகும் போதில்
காடுதன் மயிலை ஏவி
அகவலால் வரவேற் பொன்றை
அனுப்பிற்று! கொன்றைக் காய்க்கு
நிகரான வாலை ஆட்டிக்
காரெலி நின்று நின்று
நகர்ந்தது கூடச் சென்றேன்
நற்பாதை காட்டும் என்றே. |
( 25 )
( 30 )
|
மமுகத்திலே கொடுவாள்
மீசை
வேடன், என் எதிரில் வந்தான்.
அகப்பட்ட பறவை காட்ட,
அவற்றின் பேர் கேட்டேன்! வேடன்
வகைப்பட்ட பரத்துவாசன்
என்பதை வலியன் என்றான்;
சகோதரத்தைச் செம்போத் தென்றான்!
தழிழா நீ வாழ்க என்றேன். |
( 35 )
( 40 )
|
"போம் அங்கே! காரும்
அந்தப்
புனஎலுமிச்சை என்றான்
ஆம் என்றேன அழைத்தான் ஐயா
குருந்தென்றும் அறைவார் என்றான்?
ஆம் என்றேன் தெரிந்தவன்போல!
"அப்பக்கம் நோக்கிச் சென்றால்
மாமரம் இருக்கும் அந்த
வழிச்செல்வீர என்றான் சென்றேன் |
( 45 )
|
காட்டின் உச்சிக்கிளையில்
குரங்கு ஊசல்
|
செருந்தி, ஆச்சா, இலந்தை,
தேக்கீந்து கொன்றை யெல்லாம்
பெருங்காட்டின் கூரை! அந்தப்
பெருங்கூரை மேலே நீண்ட
ஒரு மூங்கில், இரு குரங்கு
கண்டேன் பொன்னூசல் ஆடல்!
குருந்தடையாளம் கண்டேன்
கோணல்மா மரமும் கண்டேன்! |
( 50 )
( 55 )
|
பாம்பின் வாயில் தாயைப் பறிகொடுத்த
மான் கன்றை நரியடித்தது
|
ஆனைஒன்று இளமரத்தை
முறித்திடும்; ஆந்தைக் கூட்டைப்
பூனை ஒன்றணுகும்; அங்கே
புலி ஒன்று தோன்றும்; பாம்பின்
பானைவாய் திறக்கக் கண்டு
யாவுமே பறக்கும்; கன்றோ
மானைக்காணாது நிற்கும்!
அதை ஒரு நரிபோய் மாய்க்கும். |
( 60 )
|
மயிலுக்குக் கரடி வாழ்த்து
|
இழந்த பெட்டையினைக்
கண்டே
எழுந்தோடும் சேவல் வாலின்
கொழுந்துபட் டெழுந்த கூட்டக்
கொசுக்களை முகில்தான் என்று
தழைந்ததன் படம்விரிக்கும்
தனி மயிலால், அடைத் "தேன
வழிந்திடும்; கரடி வந்து
மயிலுக்கு வாழ்த்துக் கூறும். |
( 65 )
( 70 )
|
ஆடிய கிளைகள் தோறும்
கொடிதொங்கி, அசையும்! புட்கள்
பாடிய படியிருக்கும்!
படைவிலங்கொன்றை யொன்று
தேடிய படியிருக்கும்!
காற்றோடு சருகும் சேர்ந்து
நீடிசை காட்டா நிற்கும்;
பயன்தந்து நிற்கும் காடே! |
( 75 )
( 80 )
|
|
|
|