பக்கம் எண் :

இருள்

வாடிய உயிர்களை அணைப்பாய்

ஆடிஓ டிப்போர் இட்டும்,
அருந்துதல் அருந்தி யும், பின்
வாடியே இருக்கும் வைய
மக்களை, உயிர்க்கூட் டத்தை,
ஓடியே அணைப்பாய்! உன்றன்
மணிநீலச் சிறக ளாவ
மூடுவாய் இருளே, அன்பின்
முழக்கமே, உனக்கு நன்றி!





( 5 )



இருளின் பகலாடை இரவாடை

விண்முதல் மண் வரைக்கும்
வியக்கும்உன் மேனி தன்னைக்
கண்ணிலே காண்பேன்; நீயோ
அடிக்கடை உடையில் மாற்றம்
பண்ணுவாய் இருளே, உன்றன்
பகல்உடை தங்கச் சேலை!
வெண்பட்டில் இராச் சேலைமேல்
வேலைப்பாடு என்ன செல்வேன்!


( 10 )




( 15 )

இருள், நீர்நிலை, கதிர், சுழல்வண்டு

எங்குச்செல் கின்றாய்' என்று
பரிதியை ஒரு நாள் கேட்டேன்;
'கங்குலை ஒழிக்க' என்றான்.
கடிதுசெல் தம்பி என்றேன்.
அங்கு உன்னைத் தொடர்ந்தான்; நீயோ
அகல்வதாய் நினைத்தான்; என்னே!
எங்கணும் நிறைந்த நீர் நீ;
அதில், "கதிரசுழல்வண் டன்றோ!




( 20 )




நீ முத்துடை போர்த்து நின்றாய்

கள்ளரை வெளிப்படுத்தும்
இருட்பெண்ணே, கதைஒன்றைக் கேள்:
பிள்ளைகள் தூங்கினார்கள்;
பெண்டாட்டி அருகில் நின்றாள்;
உள்ளமோ எதிலும் ஒட்டா
திருக்கையில், நிமிர்ந்தேன், நீயோ
வெள்ளைமுத்துக்கள் தைத்த
போர்வையை மேனி போர்த்தே.

( 25 )




( 30 )


கொண்டையில் நிலாக் கொண்டைப்பூ!

மண்முதல் விண் வரைக்கும்
வளர்ந்தஉன் உடல் திருப்பி
கண்மலர் திருப்பி நின்றாய்!
பின்புறம் கரிய கூந்தல்
கொண்டையில் ஒளியைக் காட்டும்
குளிர் நிலா வயிர வில்லைக்
கண்டேன்; என் கலங்கும் நெஞ்சம்
மனைவியின் திருமுன் செல்லும்!



( 35 )




( 40 )

பிறப்பும் இறப்பும்

வானொடு நீபிறந்தாய்!
மறுபடி, கடலில் தோன்றும்
மீன்என உயிர் உடல்கள்
விளைந்தன! எவ்வி டத்தும்
நீநிறை வுற்றாய்! எங்கும்,
பொருளுண்டேல் நிழலுண்டன்றோ!
பானையில் இருப்பாய்; பாலின்
அணுத்தோறும் பரந்திருப்பாய்!





( 45 )



உருப்படியின் அடையாளத்தை இருள் அறிவிக்கும்

உயர்ந்துள்ள அழகு மூக்கின்
இருபுறம் உறைவாய்; மங்கை
கயல்விழிக் கடையில் உள்ளாய்;
சாதினில் நடுப்பு றத்தும்,
அயலிலும், சூழ்வாய்; பெண்ணின்
முகத்தினில் அடையாளத்தை
இயக்குவாய் இருளே, உன்சீர்,
ஓவியர் அறிந்திருப்பார்!


( 50 )




( 55 )

இருளே அழகின் வேர்

அடுக்கிதழ்த் தாமரைப் பூ
இதழ்தோறும் அடிப்பு றத்தில்
படுத்திருப் பாய்நீ! பூவின்
பசைஇதழ் ஒவ்வொன் றுக்கும்
தடுப்புக்காட் டுகின்றாய்! இன்றேல்,
தாமரை அழகு சாகும்!
அடுத்திடும் இருளே, எங்கும்,
அனைத்துள்ளும் அழகு நீயே!




( 60 )




அறியாமைதான் இருள்
ஆனால் அதுதான் அறிவைச் செய்யும்

அறிவென்றால் ஒளியாம். ஆம்ஆம்!
அறியாமை இருளாம். ஆம்ஆம்!
அறியாமை அறிவைச் செய்யும்;
அறியாமை அறிவால் உண்டோ?
சிறுவனைத் தீண்டிற்றுத் தேள்;
நள்ளிருள்; விளக்குத் தேவை;
நிறைவேற்ற நெருப்புக் குச்சி
தேடினார்; கிடைக்க வில்லை;

( 65 )




( 70 )


இருளின் பெருமை இயம்ப அரிது

பெட்டியில் இருப்பதாகப்
பேசினார்; சாவி இல்லை;
எட்டுப்பேர் இதற்குள் தேளால்
கொட்டப்பட்டுத் துடித்தார்;
'கட்டாயம் தூய்மை வேண்டும்'
என்னுமோர் அறிவு தன்னை
இட்டளித்திட்ட நல்ல
இருளேஉன் பெருமை என்னே!



( 75 )




( 80 )