பக்கம் எண் :

காதல் பாடல்கள்

தொட்டாலும் தேனோ!

நாட்டு மாதரே -- அறுவடைப்
பாட்டு பாடுவோம்.
நாட்டு மாந்தரே!
ஆட்டமயில் கூட்டமாக
அங்கே செல்லுவோம். (நாட்டு)

தங்கக் கதிர்தான் -- தன்
தலை சாய்த்ததே;
சிங்கத் தமிழர் -- தம்
செல்வம் உயர்ந்ததே!
பொங்கும் சுடர்ப் பொன்னரிவாள்
செங்கை பிடிப்போம்;
போத்துக் கூட்டி அரிந்த செந்நெல்
போட்டுக் கட்டுவோம். (நாட்டு)

கட்டழகுத் தாளின் -- கட்டுக்
கண்ணைப் பறிக்கும்;
சிட்டாய்ப் பறப்போம் -- களத்தில்
சென்று சேர்ப்போம். (நாட்டு)
கட்டடிக்கும் ஆளும் தோளும்
பட்டாளந்தானோ? -- அவர்
காதலிமார் ஆசையோடு
தொட்டாலும் தேனோ?




( 5 )





( 10 )





( 15 )




( 20 )
அன்பர் வருநாள்

பொங்கல்நாள் வருக! கீழ்ப்பால்
புதுக்கதிர் எழுக வாழ்க!
இங்கெனைத் தனிவி டுத்தே
ஏகினார் வருவா ரன்றோ?
அங்கையிற் பெட்டி தூக்கி
ஆளிடம் மூட்டை தந்து
பெங்களூர்த் தெருக்க டந்து
பெருவண்டி நிலையம் சேர்வார்!

தைவிழா வருக! கீழ்ப்பால்
புதுக்கதிர் தளிர்க்க! வாழ்க!
மெய்இங்கே உயிர்அங் கென்றே
சென்றவர் மீள்வார் அன்றோ?
'உய்' என்று சீழ்க்கை காட்ட
உட்கார்ந்த படி என் அன்பர்
தையலை எண்ண, மெல்லத்
தவழ்ந்திடும் புகைத்தல் வண்டி.

தமிழர்நாள் வருக! கீழ்ப்பால்
புதுக்கதிர் தழைக! வாழ்க!
அமிழ்தூறத் தழுவுந் தோளார்
அகன்றனர் வருவா ரன்றோ?
சுமை 'எரிமலை' ஒன் றங்குத்
தொடர்மலை இழுத்த தென்ன
இமைப்பிற்பக் கத்தூரில் வண்டி
இச்சிச்சென்றோடி நிற்கும்.

தைப்பொங்கல் வருக! கீழ்ப்பால் தனிக்கதிர் எழுக! வாழ்க
ஒப்பிலா அன்பர் என்றன்
உயிர்க்காக்க வருவா ரன்றோ?
இப்பக்கம் வரும்அவ் வண்டி
எதிர்ப்பக்கம் ஓடும் காடே
உட்பக்கம் பார்த்தால் வண்டி
ஓடும்! ஓடாது காடு!

உழவர்நாள் வருக! கீழ்ப்பால்
ஒளிச்செல்வன் எழுக! வாழ்க!
வழங்காமற் சென்றார் இன்பம்
வழங்கிட வருவா ரன்றோ?
முழங்கியே நிற்கும் வண்டி
முறுக்கோமப் பொடி ஆரஞ்சிப்
பழம் விற்பார் செய்தித்தாள்தான்
பசிதீர்க்கும் அத்தானுக்கே!

பாற்பொங்கல் வருக! கீழ்ப்பால்
பகலவன் எழுக! வாழ்க!
வேற்றாள்போல் சென்றார் அன்பு
விளக்காக வருவர ரன்றே!
நேற்றேறி இருப்பார்! இவ்வூர்
நிலையத்தை அடைவார் இன்று!
நூற்றைந்து கூலியாள்கள்
நுழைவார்கள் கூலி என்றே.

பெரும்பொங்கல் வருக! கீழ்ப்பால்
புதுக்கதிர் பிறக்க! வாழ்க!
இரும்பு நெஞ்சத்தார் சென்றார்
இன்புற வருவா ரன்றோ!
திரும்பிய பக்க மெல்லாம்
தெரிந்தவர் காண்பார்! அத்தான்
பதிந்துகட்டணச்சீட்டு ஈந்து
பின்புற முகப்பில் நிற்பார்!

திருவிழா வருக! கீழ்ப்பால்
செங்கதிர் எழுக! வாழ்க!
உருமறைத் துறைவார் என்றன்
உளம் பூக்க வருவார் அன்றே?
தெருவெலாம் வண்டி நிற்கும்
நல்லதாய்த் தெரிந்து சத்தம்
ஒருரூபாய் பேசி, மூட்டை
யுடன் ஏறி அமர்வார் அத்தான்.

பொன்விழா வருக! கீழ்ப்பால்
புதுக்கதிர் எழுக! வாழ்க!
அன்பிலார் போற் பிரிந்தார்
ஆர்வத்தால் வருவா ரன்றோ?
முன்னோக்கி வாஎன்பார் வண்
டிக்காரர்! முன்நகர்ந்தால்
பின்னோக்கிக் குதிரை போகும்
பிழைசெய்தார் நெஞ்சம் போலே!
இனிக்கும் நாள் வருக! கீழ்ப்பால்
இளங்கதிர் எழுக! வாழ்க!
தனியாக்கிச் சென்றார் உள்ளம்
தவிர்த்திட வருவார் அன்றோ!
புனையப் பொங்கற் புத்தாடை
வாங்கிடப் போவார், அன்பில்
நனையத்தான் வேண்டும் என்பேன்
நன்மாலை வந்த தாலே!


( 25 )





( 30 )




( 35 )





( 40 )




( 45 )





( 50 )





( 55 )




( 60 )





( 65 )





( 70 )




( 75 )





( 80 )




( 85 )





( 90 )





( 95 )




( 100 )
எதிர்பார்க்கும் ஏந்திழை

சிரிப்பென்ன? கலிப்பென்ன?
சேயிழையே மடமானே -- புகழ்
பரப்பும் சேரன் மகன்
வரக் கேட்ட நற்சேதி தானே?

கரிப்பைச் சுவைத்த பிள்ளை
போலே இருந்ததுன்றன் கன்னம் -- விண்
விரிக்கும் நிலவே என்று
விளம்ப முடியவில்லை இன்னம்.

தெருவை நோக்கி மீண்டும்
வருவை அறைக்கு மீண்டும் அன்னாய் -- அவன்
உருவை மனத்திற் கண்டே
வருக வருக என்று சொன்னாய்.

இருவிழி அனுப்பினை
இரண்டரைக் கல்தூரம் நீயே -- உடன்
வரவேற்பு வாழ்த்துரை
தொடக்கமும் செய்தனை தாயே.

அருகில் அவனும் இல்லை
அணைத்திடத் தாவினை தங்கமே -- பின்
கருகின விழிமலர்
காணுகிலான் அவன் எங்குமே!

சருகு சலசலக்கும்,
தாவும் உனது மலர்க் காலம்மா -- அவன்
வருகை பாடின உன்
கைவளை சிலம்பவன் மேலம்மா!


( 105 )






( 110 )





( 115 )





( 120 )





( 125 )
அன்பன் வந்தால் அப்படி!

(நான் சொன்னால் செய்யாதவள்)

'புளியிற் கோது நீக்'கெனப் புகல்வேன்!
கிளியோடு பேசக் கிளம்புவாள் என்மகள்!
'வெந்தயம் புடை' எனில் வெடுக்கெனப் பகடைப்
பந்தயம் ஆடப் பறப்பாள் அப்பெண்;
விழுந்தி ருக்கும் மிளகையும் பொறுக்க
எழுந்திருக்க ஒப்பா தவள் அவள்.
அப்படிப் பட்டவள், கைப்படக் காதல்
அஞ்சல் அவளுக் கெழுதிய அன்பன்
என்னை 'மாமி' என்று கூவி
வீட்டில் நுழைந்ததைக் கண்டமெல்லியள்
அம்மியை அயலில் நகர்த்தி, மிளகாய்
செம்மையில் அரைத்துச் சேர்த்துக் காய்கறி
திருத்திக் குழம்பு, பச்சடி தென்முறைக்
கூட்டு முதலான குறைவர முடித்து,
யானைத் தலையினும் பெரிதாய் இருந்த
பானையில் வெந்ததைப் பதுமுற வடித்துக்
குருத்தரிந் துண்போன் கருத்தறிந்து முக்கனி
உரித்துத் தேன்வைத்து -- உருக்கு -- நெய் வைத்துச்
சமையல் ஆகட்டும் என்று சாற்றிய
என்னிடம் ஆயிற்று -- என்றே இயம்பி,
எட்டி, அவன்முகம் நோக்கி இனிதே
மூகிலைக் கண்ட தோகைபோல்
தகதக என்றாடினள் அத்தையலே!




( 130 )




( 135 )




( 140 )




( 145 )
நான் வாழக் காரணம்

மதச்சிறை இடித்துத் தள்ளி
மனச்சிறை புகுந்த அன்பன்
புதுத்தமிழ் அழிக்கும் இந்திப்
போரினில் சிறைச் சென்றிட்டான்;
எதற்கு நான் வருந்த வேண்டும்?
என் உளச் சிறையிருந்து
மதுத்தமிழ் வழங்குகின்றான்
மருவுதல் ஒன்றா இன்பம்?

சாதியின் விலங் கொடித்துத்
தமிழர் நாம் என மணந்தான்,
மோதினான் இந்திப் போரில்
முத்தழிழ் காக்க வீரன்,
வீதியில் விலங்கை பூட்டிச்
சிறையினில் விடுத்தார் ஆள்வோர்;
சேதிகேள், தோழி அத்தான்
செத்தாலும் தமிழ் சாகாதே.

என்னுயிர் அவன் உயிர்வே
றென்றெண்ணாத் தமிழ்ப் பிணைப்பு
நின்றெமில் வாழும் போதில்
நெடுஞ்சிறை, தளைகள் எல்லாம்
குன்றெறி மலையின் முன்னர்
கூத்திடும் பஞ்சுக் கூட்டம்;
அன்புயிர் தமிழே வெல்லும்
ஆதலால் வாழ்கின்றேன் நான்.

( 150 )




( 155 )





( 160 )






( 165 )




( 170 )
பால்காரன்பால் அன்பு

கண்ணன்பால் மிகஅன்பால் வேலைக்காரி
கையிற்பால் செம்போடு தெருவிற் சென்றாள்;
திண்ணன், பால் வாங்கென்றான் கரியனும் பால்.
தீங்கற்ற பாலே என் பால்வாங் கென்றான்
திண்ணன்பால் கரியன்பால் வெறுப்பால் பெண்பால்
'சீ' என்பால் நில்லாதீர் போவீர் அப்பால்,
கண்ணன்பால் நான்கொண்ட களிப்பால் அன்னோன்
கலப்பாலே இனிப்பதென்று கசப்பால் சொன்னாள்.


( 175 )




( 180 )
கற்பே உயிர்

அவன்:

     தயிர் விற்கப்போனவளே
     தட்டானிடம் பேச்சென்ன?
     மோர் விற்கப் போனவளே
     முத்தனிடம் பேச்சென்ன?


அவள்:
    
     தட்டானிடம் பேசாமே
     தயிர் விற்ப தெப்படியாம்?
     முத்தனிடம் பேசாமே
     மோர் விற்ப தெப்படியாம்?

அவன்:

     தயிர் விற்க மட்டுந்தான்
     தட்டானிடம் பேசலாம்;
     மோர் விற்க மட்டுந்தான்
     முத்தனிடம் பேசலாம்

அவள்:
     
      தயிர் விற்க மட்டுந்தான்!
      மோர் விற்க மட்டுந்தான்!
      உயிர் விற்க என் மனந்தான்
      உடன்படுமா சொல்லத்தான்?
 




( 185 )







( 190 )







( 195 )







( 200 )
உடைத் திருத்தம்

உப்பு விற்கும் குப்பு -- நீ
ஒழுங்கை விட்டது தப்பு!
செப்புப்போல் உறுப்பு! -- வெளித்
தெரிவதே நகைப்பு -- தலையில்      ( உப்பு விற்கும் குப்பு )

விற்குமே அரைக்கை -- உள்ள
மேலுக்கிர விக்கை? -- ஊர்
ஒப்பவே உடுக்கை -- அன்றோ
ஒழுங்கானந டத்தை -- தலையில்      (உப்பு விற்கும் குப்பு)

தமிழ்ப் பெண்ணின் துப்பு -- நீ
தவறுவதா செப்பு?
அமைவான உடுப்பு -- நீ
அணிவதுதான் கற்புத் -- தலையில்   (உப்பு விற்கும் குப்பு)

சார்ந்த நாக ரீகம் -- நம்
தமிழர் கண்ட தாகும்
மார்பு தெரிய விடுதல் -- தமிழ்
மாண்பினைக் கைவிடுதல்--தலையில்  (உப்பு விற்கும் குப்பு )



( 205 )





( 210 )





( 215 )
ஒத்து வாழாத ஆண்கள்

அழகால்
அங்கே
அழைத்ததே
ஆணின்

விழியை
மேல், ஆண்
முழுதும்
முற்றாதா

அத்தான்
அந்தப்
முத்துக்
மூன்று

"ஒத்து
உயிரில்
செத்தேன
சேர்ந்த
ஓடும்
ஒரு
தன்
நெஞ்சோ

மற்றொரு
வைத்த
கண்ட
தன்

அத்தான்
பெட்டை
குரல்
முறை

வாழா
லாத
என்றே
தந்தக்
அருவி
குருவி
ஆணை
கோணை!

பெட்டை
குட்டை
பின்பும்
துன்பம்?

என்றே
நன்றே
தாவி
கூவி,

ஆண்கள்
தூண்கள்
அருவி
குருவி!



( 220 )






( 225 )





( 230 )
மணவாளனைப் பறிகொடுத்த
மங்கை அழுகின்றாள்

இருப்பீர் என்றிருந்தேனே
இறந்தீரோ அத்தானே,
ஒரு பானை வெண்ணெயும் கவிழ்ந்ததோ?
உண்ணவே அணைத்த கை அவிழ்ந்ததோ?

சிரிப்பாலும் களிப்பாலும்
சேயிழையை வாழவைத்தீர்,
முரித்தீரோ என் ஆசையை அத்தானே?
முத்து மழையில் வாழ நினைத்தேனே.

வெண்ணெய் படும்நேரத்திலே
தாழிஉடைந் திட்டதுவோ?
கண்ணொளியை இழந்தேனே அத்தானே
காவலற்ற பயிரானேன் அத்தானே.

கண்ணுக்கே மையானீர்
கார்குழலில் பூவானீர்
மண்ணாகிப் போனதுவே என்வாழ்வு,
மறப்பினும் மறக்கவில்லை உம் சேர்க்கை.


( 235 )





( 240 )





( 245 )
விடுத்தானோ

தினம் -- மதன துரையை நாடி
மனது மிகவும் வாடி
வசமிழந்தேனென் சேடி!   (தினம்)

மஞ்சமிசை வந்து கொஞ்சிக்கு லாவி
மகிழ்ந்திடப் பறந்திடுதென் ஆவி!
மாதென் செய்குவேன்?
மதிமயங்கி இப் பாவி!     (தினம்)

காதலின் ஆழத்தில் என்னையும் தள்ளிக்
கடிதினில் அவன் வேறொரு கள்ளி
மீதில் மையல் கொண்டே
விடுத்தானோ எனைத் தள்ளி? (தினம்)
( 250 )





( 255 )





( 259 )