பக்கம் எண் :

காதல் பாடல்கள்

கள்ளி


'கள்ளி கள்ளி' எனஊர்க் காவலன்
துள்ளிக் கோடம் பாக்கம் தொடர்கையில்
ஒருவனை அறியா தொருவனை நாடும்
கள்ளி ஓடிடத், திருவக்
கள்ளி நிற்பது கண்டான் மகிழ்ந்தே.





( 5 )
நிலவு கேலி செய்தது

வருவதாய்ச் சொன்னவர் வந்திருப் பார்என்று
தெருக்கதவு திறந்து பார்த்தேன்; தென்னையை
'அத்தான்' என்றழைத் திட்டேன். அதற்கு
முத்தொளி சிதறிட முழுநிலா என்மேல்
கேலிச் சிரிப்பை வீசி
நாலுபேர் அறியச் செய்தது நங்கையே!





( 10 )
திருமண வாழ்த்து

வாழ்க தம்பதிகள்
வாழ்கவே வாழ்கவே!
வண்புனற் கங்கையென நன்றெலாம் சூழ்கவே!

ஆழ்கடல், ரவி, மதி,
வான் உள்ள காலம்,
ஆயுள் அடைக! ஓங்க அநுகூலம்.

ஆலெனத் தழைத்தும்
அறுகென வேறிழிந்தும்
மேலுக்கு மேலின்பம் மிகும்அன்பிற் பிழிந்தும் -- வாழ்க!

வேலைச் சுமக்கும்
பிள்ளைமிகும் எழிற்கிள்ளை
காலமெல்லாம் குடி கனத்தோங்க.

அடிமையும் மிடிமையும்
ஆண்மையால் மாற்றியே
ஆவியினும் இனிதாய்த் தேசத்தைப் போற்றியே -- வாழ்க!

கடமை நினைந்திரு
கையின்மேல் உரிமை
கண்டுயர் வெய்துக இத்தரை மேல்!

வாழ்க தம்பதிகள்
வாழ்க நற்சுற்றமே!
வாழ்க நற்பாரத சோதரர் முற்றுமே!

வாழ்க நற்பாரத
தேசமும் புவியும்!
வாழ்க எவ்வுயிரும் நனி வாழ்க!





( 15 )





( 20 )





( 25 )






( 30 )





( 35 )
போருக்கு வேண்டும் பிள்ளை

அந்மிழ்க் 'காத்திடப் போராம்
அன்பநீ செல்லுகின் றாயாம்,
வந்தது சேதி மகிழ்ந்தேன்.
வாழ்வில்என் காதலர் சீர்த்தி
இந்ததாள் எய்திட வேண்டும்;
இன்பமுத் தம்ஒரு கோடி
செந்தமிழ் வீரத்தில் சேர்ப்பேன்;
செங்களப் பிள்ளைகள் ஈவேன்.

இங்குள வண்டமிழ்க் கில்லா
எவ்வளம் கண்டனர் ஆள்வோர்;
எங்குள வைய மொழிக்கும்
ஈன்றதாய் நந்தமிழ் அன்றோ?
மங்கல நாணின்மேல் ஆணை,
மார்புறச் சேர்ந்துபின் செல்க,
தங்கும்என் சூலுள பிள்ளை
தங்களின் பின்வரும், வெல்லும்!

முத்தமிழ் நாட்டினில் இந்தி
முற்றுகை என்றொரு பேச்சும்
எத்திசை வந்ததோ போருக்
கிங்குநாம் ஒன்றெனச் சேர்ந்தீர்;
பெற்றிடும் பிள்ளையும் நாளை
பீடுடன் வென்றிட வேண்டிச்
சுற்றுக என்தமிழ்த் தோளை,
தோன்றுவன் போர்க்களம் தன்னில்!

வண்டமிழ் நாட்டில்தி ணிக்கும்
வன்செயல் தீர்த்திட இந்நாள்
கொண்டெழும் போர்க்குணக் குன்றே,
கோளரி யேஉயிர் அன்பே!
பெண்டகை யாள்வயி றீனும்
பிள்ளையும் வாகையைச் சூடக்
கண்ணுறங் காய்உயிர் எச்சக்
கால்முளை தோன்றிட வேண்டும்.

தென்மொழி காக்கும்பு ரட்சித்
தேரினை ஓட்டிடும் அன்ப,
நன்மொழி கொஞ்சிடும் ஆண்பெண்
மக்களின் நல்வர வேற்பை
என்விழி காணவும் வேண்டும்,
ஏமுறும் வெற்றியில் பூத்த
நின்இரு தோளினில் மக்கள்
ஏறிட என்னுடல் தோய்வாய்!




( 40 )





( 45 )




( 50 )





( 55 )





( 60 )




( 65 )





( 70 )




( 75 )
பெண்களே!

பெண்களே உலகப் பெண்களே!
பிழைகள் செய்பவர் ஆண்கள் அன்றோ?
அழிவை அடைபவர் நீங்கள் அன்றோ? (பெண்களே!)

அன்பு மனைவியைப் பிரிய நேர்ந்தால்
அன்றிற் பறவையும் உயிரை விடுமே
அதுவு மிலையே ஆடவரிடமே. (பெண்களே!)

'என்னுடம்பில் நான்பாதி மனைவி பாதி'
என்று சொல்லும் ஆடவர்கள் மறுவினாடி
தன்மையிலா கோவலன் களாகின்றார், என்ன நீதி?
துன்பம் எல்லாம் மாதருக்கோ?
இன்பம் எல்லாம் ஆடவர்க்கோ?
என்று தொலையும் இந்த ஆட்சி?    (பெண்களே!)

காதல் உணர்வோ உயிரின் இயற்கை.
மாதர் மட்டும் சூளைக் கல்லோ?     (பெண்களே!)

பெண்களிடம் கற்பைஎதிர் பார்க்கும் ஆண்கள்
பெண்களையே கற்பழித்துத் திரியலாமோ?
பெண்களுக்கும் ஆண்களுக்கும் கற்பு பொதுவன்றோ?

   மாதருலகை ஆளவந்தார்
   மமதையால் இரு கண்ணவிந்தார்
   மனவிளக்கும் அவியலாகுமோ?

ஆடவர்க்கொரு நீதியோ -- எழில்
மாதர்கட்கொரு நீதியோ!           (பெண்களே!)

யாமரத்தின் தோலுரித்துப்பெண் யானைக்கே
ஆண்யானை நீரூட்டும் இயற்கை அன்பும்
தாமணந்த மனைவியர்மேல் காட்டுவாரோ?

   நங்கைமார்க்கிடர் செய்யும் ஆடவர்
   நாட்டில் வாழ்வது தீமையே.

'தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்
என்றார் வள்ளுவனார்,

இக்கால
ஆடவர்கள் பெண்ணுயர்வை எண்ணுவரோ? (பெண்களே!)






( 80 )




( 85 )






( 90 )





( 95 )






( 100 )






( 105 )

வானப்பெண்

(ஒரு காட்சி சிறு நாடகம்)


  முதுமாலை தழுவிய ஒரு சோலையில் மொய்குழல் ஒருத்தி
ஐயனை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாள். காதல் கனலாகிறது.

  அவள் வானை நோக்குகின்றாள். வானில் பூரித்த
மீன்களை நோக்குகின்றாள்.






( 110 )
பாட்டு 1

மேனிகொப் பளித்ததோ வானப்பெண்ணே? -- எங்கும்
வெண்முத் திறைத்தனவோ வானப்பெண்ணே?
'நானே வரேன்' என்று வாராததால் -- அவன்
நாளோடு தோளை வந்து சேராததால்
மேனிகொப் பளித்ததோ வானப் பெண்ணே?

   { மாமரத்தின் பின் ஒளிந்துகொண்டிருந்த குறும்புக்காரத்
தலைவன் அவளை எட்டிப் பார்த்துச் சிரித்துப்
பாடுகின்றான் }

   ஏனோடி பூவில்லை கொண்டையிலே? அடி
   இங்கே பார் மாமரத்து அண்டையிலே,
   தேனோடைப் பக்கம் திரும்பாததால் -- தேன்
   திரும்பி அருந்திட விரும்பாததால்
   மேனிகொப் பளித்ததோ வானப்பெண்ணே?

  { திரும்பிப் பார்த்தவள் விரும்பி ஓடிவரவில்லை. வந்தவன்
நேரே ஓடிவராமல் மாமரத்தைத் தழுவியது வருத்தத்தை
அளித்தது. அவள் பாடுகின்றாள் }


பாட்டு 2


மாவேஅக் காளைக்குக் காப்பிட்டதோ? 'மா
மா வா வா' என்றுதான் கூப்பிட்டதோ?
சாவோடு மாரடிக்கும் பெண்ணாததால் -- இங்குத்
தாவிப் பறந்துவர எண்ணாததால்
மேனி கொப்பளித்ததோ வானப்பெண்ணே?

   { மா அதாவது மாமரத்துக்கும் அவனுக்கும்
உண்டாயிருந்த தொடர்பு பற்றி இழித்துக் கூறிய தலைவியை
நோக்கி, 'நீ மட்டும் சாவோடு கொண்ட தொடர்பு
சரியா? நீ அதை விடு. நான் மாவோடு கொண்ட
தொடர்பை விடுகின்றேன்' என்று பாடுகின்றான் தலைவன். }


பாட்டு 3


மாவை நான் விட்டிடுவேன் வஞ்சிக்கொடி -- கெட்ட
சாவை நீ விட்டு விட்டு வா இப்படி;
வாழ்வோடும் இன்பத்தைக் காட்டாததால் -- இங்கு
வந்தேறும் துன்பத்தை ஓட்டாததால்
மேனி கொப்பளித்ததோ வானப்பெண்ணே!
               { இருவரும் கூடி இன்புறுகின்றனர் }




( 115 )









( 120 )













( 125 )















( 130 )

அவள் அடங்காச் சிரிப்பு

ஏரிக்க ரைமீது தோழி -- நான்
இருந்தேன்என் கால்இட றிற்று,
நீரில் விழுந்திட்டேன் தோழி -- அந்த
நிலையிலும் நீரினை நோக்கிப்
''பாரிலுன் சாதிதான் என்ன'' -- என்று
பாவை நான் கேட்டிடல் உண்டா?
யார் சொன்ன சொல் இது என்றால் -- என்னை
ஈன்றவர் சொன்னது தோழி!

''என்நிலை'' என்பது கேட்பாய் -- அதை
ஏரிக்கரை என்று சொன்னேன்,
என்நிலை தப்பினேன் தோழி -- ஒர்
இன்பத் தடந்தோளில் வீழ்ந்தேன்.
அன்னதன் காரணம் கேட்பாய் -- என்
அறிவின் திறம் பெற்ற காதல்
மின்னல் வெளிச்சமும் வீச்சும் -- வேறு
வேறென்று சொல்பவர் உண்டா?

மலர் என்பார் காதல் வளத்தை -- அதன்
மணம் என்பர் அவன் தோளில் வீழ்தல்!
தலை நான்கு பெற்றவன் சொன்ன -- நான்கு
சாதிக்கிங் கேஎன்ன வேலை?
உலகினில் சாதிகள் இல்லை -- என்
உள்ளத்தில் வேற்றுமை இல்லை
கலகத்தைச் செய்கின்றன்ற சாதி -- என்
கைகளைப் பற்றி இழுப்பதும் உண்டோ?

அதிகாரி கட்குத்தன் பெண்ணைக் -- கூட்டி
அறையினி லேகொண்டு சேர்த்து
மிதிமிதி என்று மிதிக்கப் -- பின்
விளைந்த விளைச்சலே பார்ப்பான்!
முதிர்ந்து முதிர்ந்து வரும் காமம் -- கொண்ட
முனிவர்கள் இருடிகள் தந்த
பதர்களே ஆரியர் சொல்லும்
சத்திரி யர் என்பதும் பார்த்தோம்.

இந்நாட்டு வணிகர் எல்லாம் -- பிரமன்
இடுப்பில் பிறந்தாராம் தோழி,
என்ன புளுகுகள் தோழி -- இதை
ஏன்நம்பு கின்றனர் பெற்றோர்?
தொன்மைத் தமிழக மாந்தர் -- நாம்!
சூத்திரர் என்றனர் நம்மை!
பொன்னுக்குப் பித்தளைமெருகா? -- தமிழ்ப்
பூணெல்லாம் பித்தளை தானா?

சந்தனச் சோலை நான் தோழி -- தென்றல்
தழுவத் தழுவினேன் தோழி,
அந்தச் செயல் கேட்ட பெற்றோர் -- அவன்
ஆர்? அவன் எச்சாதி என்றார் இந்தாடி அன்புள்ள தோழி -- எனக்
கெப்போ தடங்கும் சிரிப்பு?
வந்தவன் ஆண் சாதி என்றால் -- அவனை
மணந்தவள் பெண்சாதி தானே?



( 135 )




( 140 )





( 145 )





( 150 )




( 155 )





( 160 )





( 165 )




( 170 )





( 175 )




( 180 )
இன்பம்

சோலையில் தோகைமார்


சிந்தொன்று வண்டு பாடும்
சோலையில் செங்கையிற் பூப்
பந்தொன்றை எறிந்தாள் அன்னம்
''பார்'' என்றாள்! பறந்ததென்றாள்;
பொந்தொன்றில் சோலைக்கப்பால்
போயிற்றே என்று நைந்தார்!
பந்தில்லை என்றார் கிள்ளை
பார் என்றாள்! பறந்த தென்றாள்!





( 185 )


அன்னம் பந்தைத் தேடச் சென்றாள்

அன்னத்தைப் பழித்தாள் கிள்ளை
ஆதலால் அழுத அன்னம்
முன் அதைக் கொணர்வேன் என்று
முடுக்கொடு வெளியிற் சென்றாள்!
தென்னந் தோப்பொன்று கண்டாள்;
சிறுபந்தைத் தேடும் போதில்
புன்னையின் மறைவினின்று
பொலிந்தன இரண்டு கண்கள்.


( 190 )




( 195 )

வேலன் உதவிக்கு வந்தான்

குனிந்தனள், குனிந்த வண்ணம்
கூனிய முதுகின் மீது
புனைந்தனள் இரு மலர்க்கை!
பொன்முகம் கவலை நீரால்
நனைந்தனள்! ''என்ன தேடி
நலிகின்றாய்!'' என்று வேலன்
முனம்வந்து கேட்டான். அன்னம்
முகத்தினில் நாணம் பூத்தாள்.




( 200 )


அயலார்க்கு வேலையில்லை

சோலையில் அடித்த பந்து
தொலைவிலே -- இங்கு வீழ்ந்த
தாலதைத் தேடு கின்றேன்
அயலவர்க் கிவ்விடத்திலே
வேலை ஏதென்று வேலன்
விலாப்புறம் வேல் பதித்தாள்!
''நூலிடை முறியும் என்று
நுவல்வதும் பிழையா? என்றான்.

( 205 )




( 210 )
பொந்தில் இருவர் கைகள்

வேலனும் பந்து தேட,
அன்னமும் முயலுகின்றாள்,
ஆலின் வேர்ப் பொந்து கண்டார்
எதிரெதிர் அன்னம் வேலன்
ஏலவே நுழைத்த கைகள்
ஒன்றில் ஒன்றிழைந்த தாலே
மூலத்தை மறந்தா ராகி
நகை முத்தை முடிய விழ்த்தார்.



( 215 )




( 220 )
நான் போகவேண்டும்

''மேழியை உழவர் தூக்கி
வீட்டுக்குத் திரும்பும் நேரம்!
கோழிகள் சிறகு கூம்பி
அடைந்தன கூட்டுக்குள்ளே!
தோழிமார் பந்து கேட்பார்
தொலைந்தது தெரிந்தால் என்மேல்
ஏழிசை கூட்டிக் கேலிப்
பண்பாடி இழிவு செய்வார்!''





( 225 )


வேலன் அணைப்பு

இது கேட்ட வேலன் அன்பால்
இடதுகைப் புறத்தில் அன்னம்
புதைந்திட அணைத்த வண்ணம்
''போகலாம்'' என்று சொன்னான்!
எதற்கென்று மங்கை கேட்டாள்
''இதற்கல்ல; வீட்டிலுள்ள
புதுப்பந்து தரத்தான்!'' என்றான்;
அன்றில்கள் போக லானார்.


( 230 )




( 235 )
சோலையில் தோழிமார்


அன்னத்தைத் தேடும் கண்கள்
அழுதன. கிள்ளை என்பாள்
என்னோடி அன்னந் தன்னை
இன்னலில் தோய்த்த தென்றாள்
முன்னாக அன்னந் தன்னைத்
தேட நாம் முயல வேண்டும்
என்றனன் வஞ்சி, ஆங்கே
எழுந்தனர் பெண்கள் யாரும்!




( 240 )



வேலன் விலகினான்

''தோழிமார் வருகின்றார்கள்
தொலைவினில்!'' என்றாள் அன்னம்,
''வாழிய அன்பே!'' என்று
வேலனும் வாழ்த்திச் சென்றான்.

( 245 )


அன்னம் பந்து கொடுத்தாள்

நாழிகை ஆயிற்றந்தோ
நான் செய்த தொன்று மில்லை
பாழ்மகன் செய்த வேலை!
பந்திதோ!'' என்றாள் அன்னம்.


( 250 )
இது நம் பந்தல்ல

பொழிலிடை ஒருபாற் குந்திப்
பூப்பந்தை ஆராய்ந்தார்கள்
''எழிலான பந்தே, ஆனால்
இப்பந்து நம்பந் தன்றே?
விழிக்கின்றாய் அன்னம் என்ன
விளைந்தது சொல்க?'' என்று
கனிமொழிகேட்டாள்! அன்னம்
கண்ணீரால் சொல்லலுற்றாள்;



( 255 )




( 260 )
வேலன்மேற் குறை

தென்னந் தோப்புக்குச் சென்று
பந்தினைத் தேடும் போதே
புன்னைக்குப் பின்னிருந்து
பொதுக்கென எதிரில் வந்தே
''இன்னந்தான் தேடுகின்றாய்!
யான் தேடுகின்றேன்!'' என்று
கன்னந்தான் செய்தான். அந்தக்
கள்வன் என் கையைத் தொட்டான்.





( 265 )


தொட்ட இன்பம்

புறங்கையை விரலால் தொட்டான்
அதிலொரு புதுமை கேளீர்;
திறந்தது நெஞ்சம்! உள்ளே
சென்றனன் அந்தக் கள்வன்.
மறந்திட்டேன் உலகை, அந்த
மாக்கள்வன் இடு மருந்தால்
பறந்தது நாணம் பட்ட
பாட்டையார் அறிவார்?'' என்றாள்.


( 270 )




( 275 )
என்னைக் கருப்பஞ்சக்கை யாக்கினான்

பூப்பந்து கிடைக்க வில்லை
போதுபோயிற்றே! அங்கே
கூப்பிடு வார்கள் தோழமைக்
குயில்களும் என்று சொன்னேன்.
காப்பாக என் இடுப்பைக்
கைப்புறம் இறுக்கி, ஆலை
வாய்ப்பிலே கருப்பஞ் சக்கை
ஆக்கினான் வஞ்ச நெஞ்சன்.




( 280 )
புதுப்பந்து தந்தான்

அணைத்திட்ட அணைப்பில் என்னை
வீட்டுக்கே அழைத்துச் சென்றான்;
முணுமுணுத்தேன் அப்போதென்
முகத்தோடு முகத்தைச் சேர்த்தான்;
அணிமலர்ப் பந்து தந்தான்!
''அதே இது''! என்றாள் அன்னம்,
மணப்பந்தல் இடுதல்தான் நம்
மறுவேலை என்றாள் கிள்ளை!

( 285 )




( 290 )

நான்போதும்

''நாளையே பந்து தேட
நாமெல்லாம் போக வேண்டும்
காளையை அங்குக் கண்டால்
கடுஞ் சொல்லை உகுக்க வேண்டும்
''வேளையோ டேகு வோம்நாம்
வீட்டுக்கே!'' என்றாள் முல்லை
''நாளைக்கும் பந்து தேட
நான் போதும்!'' என்றாள் அன்னம்.



( 295 )




( 300 )
பள்ளிக்குப் போகும் புள்ளிமான்

திருநாளில் என்னைத் திரும்பிப்பார்த் தாள்பின்
ஒருநாள் உரையாடத் தானும் -- உரையாடி
நான்நகைக்கத் தானும் நகைத்தாள் அதனாலே
வான நிலவும் மனமொத்துப் -- போனாள், என்
இன்பத்தை வாழ்வில் இணைஎன்றேன், அன்னவள்
துன்பத்தை என்வாழ்வில் தூர்த்துவிட்டாள் -- இன்னும்
படித்துப் படிப்படியாய் முன்னேற்றத் திட்டம்
முடித்துநான் வாழு முறைக்கு -- முடிவொன்று
பண்ணுவ தென்றும் பகர்ந்திட்டாள்; இன்றதனை
எண்ணுவ தென்ப திழுக்கென்றாள் -- கண்ணிலே
சற்றும் தொடர்பின்றித் தன்கருத் திற்கும்ஒரு
முற்றுப்புள் ளிக்குறியும் முன்வைத்தாள் -- உற்றுக்கேள்
கண்ணப்பா நானவளைக் கட்டாவிட் டால்வாழ்வு
மண்ணப்பா என்றுரைத்தான் மன்னாதன் -- ''மன்னாதா,
பார்த்தாள் பகர்ந்திட்டாள் பற்காட்டி னாள்என்று
கூத்தாடு கின்றாய்க் குரங்காகக் -- கோத்த
பவழம் சிரிக்கும், பறிக்க முயன்றால்
அவிழ விடுமா அதற்குள் -- தவழ்சரடு?
பள்ளிக்குச் செல்லுமொரு செந்தமிழ்ப் பாக்கியத்தை
அள்ளிப், பெண் முற்போக்கில் ஆறாத -- கொள்ளிவைக்க
எண்ணாதே எல்லாரும் அண்ணன்மார் என்றெண்ணும்
பெண்ணாத லாலும், இரும்புமனம் -- பண்பாடு
பெற்றுள்ள தாலும் அவள் பேசினாள் உன்னிடத்தில்,
முற்றிய கல்வி முயற்சியே -- நற்றவம்
என்று நினைக்கும் இளைய பெருமாட்டி!
கன்றாத் தமிழ்வாழைக் கன்றின்கீழ்க் -- கன்றுதனை
அன்னை என்று போற்றப்பா'' என்றேன் அம் மன்னாதன்
பின்ஓடி னான் அறிவு பெற்று!





( 305 )




( 310 )




( 315 )



( 320 )




( 325 )
வெப்பத்திற்கு மருந்து

{ பொன்னியும் வெற்றியும் பேசிப் போகிறார்கள் }
''ஏதிந்த நேரம் பெண்ணே
எங்கே நீ செல்லு கின்றாய்?
ஓதென்றான் வெற்றிவேலன்,
''உடைவாங்க'' என்றாள் பொன்னி
''தீதானே வெயிலும் உன்னைத்
தீய்க்காதோ'' என்றான் வெற்றி.
''போதோடு சேலை தேவை
புறப்பட்டேன் வெயிலில்'' என்றாள்.

   ''உலையிலே இரும்பு போல
   வெயிலிலே உடல் வெதும்பும்
   நிலையிலே என்ன செய்வார்
   நீணில மக்கள்'' என்றான்.
   ''இலையாட வில்லை கொண்ட
   புழுக்கத்துக் கெல்லை யில்லை,
   அலைமோதும் கடலோ ரத்தும்
   அணுக்காற்றும் இல்லை'' என்றாள்.

''என்குடை நிழலில் வந்தால்
எனக்கென்ன குறைந்து போகும்?
பொன்போல வரலாம், மேனி
பொசுங்கிட வேண்டாம்'' என்றான்.
நன்றென நெருங்க லானாள்,
நடந்தனர் இரண்டு பேரும்;
குன்றும் பூங்கொடியும் போல;
அருகினில் கடைகள் கண்டார்.

( 330 )




( 335 )





( 340 )




( 345 )




( 350 )



   ''இக்கடை களிலே உள்ள
   சேலைகள் மட்டம்'' என்றாள்,
   ''அக்கடை தொலைவா னாலும்
   அங்குதான் நல்ல சேலை
   விற்கும்என் றுரைக்கின் றார்கள்,
   விலைமலி வென்கின் றார்கள்,
   கைக்குடை உண்டு பெண்ணே,
   கடிதுவா போவோம்'' என்றான்.

உழவனும் உழத்தி தானும்
ஒவ்வாத உளத்த ராக
அழலெனத் தாம்சி னந்தே
அடுக்காத மொழிகள் பேசி
வழியினில் வரலா னார்கள்;
உழத்தியோ வெயிலால் வாடி
தழைத்த ஒர் மரத்தின் கீழே
சாய்ந்தனள், அவனும் சாய்ந்தான்.

   இரங்கிடத் தக்க காட்சி
   இருவரும் கண்டார் பொன்னி
   ''மருந்துண்டோ வெப்பத் திற்கு
   மாய்கின்றார் இவர்கள்'' என்றாள்.
   சரேலென வெற்றி வேலன்
   தையலோ டங்கே சென்றே
   ''எரிந்திடும் வெயிலால் நேர்ந்த
   இன்னலா?' என்று கேட்டான்


( 355 )




( 360 )





( 365 )





( 370 )




( 375 )

''வெய்யிலில் சாகின் றேன் நான்
மெய்ம்மைதான் பிழைக்க அந்தத்
தையல்பால் மருந்தி ருந்தும்
கொடேனென்று சாற்று கின்றாள்,
ஐயனே, அவள் உளத்தின்
அன்பள்ளித் தன்கை யால்என்
மெய்தடவி விட்டால் வெப்பம்
தீரும்'' என்றுழவன் சொன்னான்.

   ''உனக்கென்ன துன்பம் என்றே''
   உழத்தியைப் பொன்னி கேட்டாள்;
   ''எனையலால் வேறு பெண்ணை
   எண்ணுவ தில்லை என்று
   மனமார உழவன் இங்கு
   மாறிலா உறுதி சொன்னால்
   கனல்வெயில் குளிரும்'' என்றாள்.
   வியப்பிடைக் கலந்தாள் பொன்னி.

உழவனும் உறுதி சொன்னான்,
உழத்தியும் உளம் மலர்ந்தே
தழைஅன்பால் எழுக என்றே
தளர்க்கையால் தொட்டி ழுக்க
மழையிடை எருமை கள்போல்
மகிழ்வொடும் நடந்து சென்றார்;
வழியிலே வெப்பம் தீர்க்கும்
மருந்தினை இருவர் கண்டார்.

   பொன்னியின் இரண்டு கைகள்
   வெற்றியின் பொன்னந் தோளில்
   மன்னிட, இருவர் நோக்கும்
   மருவிட, வெப்பத் திற்கோர்
   நன்மருந் தருந்தி னார்கள்
   நாளெல்லாம் வெப்பம் ஏதும்
   ஒன்றாத இன்ப வாழ்க்கை
   ஒப்பந்தம் ஒன்றும் கண்டார்!



( 380 )




( 385 )





( 390 )





( 395 )




( 400 )




( 405 )
     பேசுதற்குத் தமிழின்றிக்
    காதலின்பம் செல்லுமோ?

நெஞ்சில் நிறைந்த காதலால் அந்த
நேரிழை, தன்னை எனக்களித் தாளே.
அஞ்சினாள் என்றும், தந்தையின் வறுமை
அகற்ற எண்ணி வேலனுக் கேதான்
தஞ்ச மாயினாள் என்றும்நீ சொல்கின்றாய்;
சாவுக்கும் எனக்குந்தான் திருமணம் போலும்!
வஞ்சிக் கொடிபோல்வாள் வஞ்சியா? அன்றி
வஞ்சிப்பாள் வஞ்சியா? ஐயுற வைத்தனள்!.

கூடு சாத்தி யிருக்கையில் உள்உள்ள
கொஞ்சு கிள்ளை இல்லை என்கின்றாளா?
வீடு சாத்தி யிருக்கையில் உள்உள்ள
மேலோன் இல்லைஎன் கின்றாளா அவள்?
தேடி என்னைத் தன்னெஞ்சில் வைத்தவள்
திறந்துவிட் டாள்எனில் இறந்துபட் டிருப்பாளே!
ஈடிலாக் கற்பினாள் என்றுநான் நம்பினேன்,
இல்லை என்றால் தமிழுக்கே நாணமாம்,

தன்னு ளத்தில் ஒருவனுக் கிடந்தந்து
மற்றொருத்தனைத் தாவுவ தென்பது
தென்னவர் கற்பன்று! கற்பை இழந்தவள்
தீந்தமிழ் நாட்டினள் என்றும்எண் ணப்படாள்.
புன்னை கொய்துகொண் டிருந்தாள் எனைக்கண்டு
புன்னகைப்பினால் போட்டுக் கொலைசெய்தாள்
பின்னொரு நாளிலே தன்வீட்டுத் தோட்டத்தில்
பொத்த லாம்படி என்றன் கன்னத்தைக் கொத்தினாள்.

தமிழினும் இனியதோர் மொழிதேடித் திரிவேனைத்
தடுத்தாட் கொண்ட பெருமாட்டி தான்தன்னை
அமிழ்தென்று காட்டி உண்ணவும் நீட்டினாள்.
அவள்பிறனுக்கா அளித்தாள் எச்சிற் பண்டத்தை?
உமிழாதா வையகம்? கதிர்மதி ஒழிந்தாலும்
ஒழியாப் புகழுலகில் கால்வைக்க ஒண்ணாதே.
அமிழ்ந்ததா என் ஆசை அவள்வஞ்சக் கடலினில்?
அடைந்திட்டதா மாசும் தமிழ்ஒழுக்கந்தன்னில்?



( 410 )




( 415 )





( 420 )



( 425 )





( 430 )





( 435 )




( 440 )


வந்த ஆளிடம் இவ்வாறு கூறித்தன்
வயிற்றை நோக்கினான்; கத்தியைத் தூக்கினான்;
கொந்து முன்னர்க் கத்திதூக் கியகை
குறுக்கில் மறிக்கப் பட்டது! குரல்ஒன்றும்
"அந்த மங்கைதான் நான என் றெழுந்ததே!
அன்பு மங்கையைக் காதலன் கண்ணுற்றான்;
இந்தியாவில் மறைந்திட்ட தமிழகம்
எதிரில் வந்ததுபோல் மகிழ்ந்தான் அவன்.

நீஎனக்குத் தானேடி கிள்ளையே
நின்ற வாறு நெஞ்சைக் கலக்கினாய்,
"நேயத் தமிழே என்தோளில் சாய என்று
நீட்டு கின்ற கரும்பான கைகளைத்
தூய நங்கை விலக்கினாள் சொல்லுவாள்:
தொன்மையும் மேன்மையும் உடையவள் ஆந்தமிழ்த்
தாயிருந்தனள், தமிழகக் காதலர்
தமிழிற் பேசித் தமிழின்பம் உற்றனர்.

நாமும் இன்று தமிழ்பேசி இன்ப
நல்ல வாழ்வின் வழிநோக்கி நடக்கின்றோம்;
தீம னத்து வடக்கர்நம் தமிழினைத்
தின்றொழிக்க ஒவ்வொரு பல்லையும்
காயமாட்டித் துறட்டுக் கோலால் நீட்டிக்
கால்மாட்டில் நிற்கின்றார்! பேசு தற்கே
தேமதுரத் தமிழின்றிக் காதல் இன்பம்
செல்லுமோ? செல்லுமோ தமிழ வாழ்வு?"

உரை கேட்டான், உரைகின்றான் தமிழ வேங்கை;
ஒருமொழிவைத் துலகாண்ட தமிழ னைப்போல்
ஒருநாவ லந்தீவை வென்றே னுந்தன்
ஒரு மொழிவைத் தாட்சிசெயக் கனவு கண்ட
பெருவேலான் அசோகனால் நெருங்க ஒண்ணாப்
பெருநெருப்பைத் தில்லிஎனும் சிறு துரும்பா
நெருங்கும் நீ? தொடக்கம்செய் என்று சொன்னான்!
நெருங்கினார் குளிரருவித் திருக்குற்றாலம்!



( 445 )





( 450 )




( 455 )





( 460 )




( 465 )




( 470 )


எது பழிப்பு?

1

பத்து வயதில் பழனியப்பன் வீட்டினிலே
முத்தம்மை என்னும் முதிராத செங்கரும்பு
வேலைசெய்தி ருக்கையிலே வேம்பென்னும் தாயிறந்தாள்;
மேலுமோர் ஆண்டின்பின் தந்தையாம் வீரப்பன்
தானும் இறந்தான். தனியாக முத்தம்மை
கூனன் வரினும் குனிந்துபுகும் தன்குடிலில்
வாழ்ந்திருந்தாள், அண்டைஅயல் வாழ்வார் துணையோடு
தாழ்ந்திடுதல் இன்றியே தன்வருமா னத்திலே
நாளைக் கழித்துவரும் நங்கை பருவமுற்றாள்
தோளை அழகு வந்து சுற்றியது; முத்தம்மை
கண்ணை ஒளிவந்து கௌவியது; முன்னிருந்த
வண்ண முகமேதான் வட்டநிலா ஆகியது;
மொட்டு மலர்ந்தவுடன் மொய்க்கின்ற வண்டுகள்போல்
கட்டழகி அன்னவள்மேல் கண்வைத்தார் ஆடவர்கள்.

( 475 )




( 480 )




( 485 )

2

அச்சகத்தில் வேலைசெய்யும் அங்கமுத்துத்தான் ஒருநாள்
மெச்சுமெழில் முத்தம்மை மெல்லியினைத் தான்கண்டு
தன்னை மணந்துகொண்டால் நல்லதென்று சாற்றினான்;
இன்ன வருமானம் இன்னநிலை என்பவெல்லாம்
நன்றாய்த் தெரிந்துகொண்டு நல்லதென்றாள் முத்தம்மை.
ஊரார்கள் கூடி ஒருநாள் திருமணத்தைச்
சீராய் முடித்தார்கள். செந்தமிழும் பாட்டும்போல்
அங்கமுத்து முத்தம்மா அன்புடனே வாழ்ந்துவந்தார்.
இங்கிவர்கள் வாழ்க்கை இரண்டாண்டு பெற்றதுண்டு;


( 490 )




( 495 )
3

வாய்ச்சொல்லாய்த் "தோளில் வலி" என்றான்; மட்டாகக்
காய்ச்சல்என்று சொன்னார் மருத்துவரும் கைபார்த்து!
நாலுநாட் பின்னை நளிர் ஏற நாவடங்கிப்
பாலும் உட்செல்லாத பான்மை அடைந்தே
இறந்துவிட்டான் அங்கமுத்து. முத்தம்மை மார்பில்
அறைந்தபடி கூவி அழுது புரளுகையில்
அண்டை அயலுள்ளார் அங்கமுத்தின் மெய்கழுவி
தொண்டர் சுமக்கச் சுடுகாட்டை எய்துவித்தார்.
நாட்கள்நில் லாது நடந்தன! முத்தம்மை
வாட்டுகின்ற ஒவ்வோர் நொடிக்கும் மனம்பதைத்தாள்.
அங்கமுத்து மாண்டான். அறுபதுநாள் சென்ற பின்னும்
எங்கும் அவனே எனஅழுதாள் முத்தம்மை!
மாதங்கள் மூன்று மறைந்தபின்னும், அங்கமுத்தின்
காதில்விழும் என்றழைப்பாள் 'கண்ணாளா' என்று!



( 500 )




( 505 )




( 510 )
4

துணைவனைச் சுட்ட சுடுகாட்டை நோக்கி
இணைவிழிகள் நீர்பெருகச் சென்றாள். இடையிலே
நள்ளிரவில், மக்கள் நடப்பற்ற தோப்பினிலே,
பிள்ளையின் பேர்சொல்லிக் கூவினாள் அங்கொருத்தி
'தங்கமுத்தே தங்கமுத்தே' என்ற பெயர் தான் கேட்ட
மங்கையவள் முத்தம்மை வந்தான் கணவனென்று
நின்றாள்; விழியாள் நெடிதாய்வாள் தோப்பெல்லாம்.
தன் துணைவன் போல தனியாக வந்துநின்றான்.
யார்? என்று கேட்டாள், நீ யார்? என்றான், வந்தவனும்;
தேரோடும் போதே தெருவில் அது சாய்ந்தது போல்
மாண்டார்என் அத்தான் மறைந்தார்; சுடுகாட்டில்
ஈண்டுநான் வந்தேன் எதிரில் உமைக்கண்டேன்;
உம் பெயரை யாரோ உரைத்தார், அது துணைவர்
தம்பேர்போல் கேட்டதனால் தையலுளம் பூரித்தேன்;
என்பெயரோ முத்தம்மை என்றாள் அது கேட்டுத்
தன்பெயர் தங்கமுத் தென்றான்; தளர்வுற்றாள்.
தூயோன் எரிந்த சுடுகாடு போகலுற்றாள்.
"நீஏன் சுடுகாட்டை நேர்கின்றாய் மங்கையே
தச்சுவே லைசெய்யும் தங்கமுத்துப் பேர்சொன்னால்
மெச்சாதார் யாருமில்லை, மெய்ம்மைஇது கேட்டுப்பார்;
தன்னந் தனியாய் நீ வந்ததுவும் தக்கதல்ல,
உன்வீடு செல்வாய்நீ, நானும் உடன் வருவேன
என்றான். அவளும் எதிரொன்றும் கூறாமல்
சென்றாள்; உடன் சென்றான். செங்கதிரும் கீழ்க்கடலில்
தோன்றியது தோகைக்கும் தங்கமுத்தின் மேல்உள்ளம்
ஊன்றியது; தாமே உறுதிசெய்தார் தம்மணத்தை.
தங்கமுத்தின் அன்னை தளர்ந்த பருவத்தாள்,
மங்காத செல்வம்போல் வாய்த்த மருமகளைக்
காணும்போ தெல்லாம் மகிழ்ச்சிக் கடல்படிவாள்.
ஆணழகன் தன்மகனும் அன்பு மருமகளும்,
வேலையிலாப் போது விளையாடல் தான்கண்டு
மூலையினில் குந்தி முழுதின்ப மேநுகர்வாள்.
ஆண்டொன்று செல்லஅவள் ஆண்குழந்தை ஒன்றுபெற்றாள்-
ஈண்டக் குழந்தைக் கிரண்டுவய தானவுடன்
தங்கமுத்து மாண்டான்; தளர்ந்தழுதாள் முத்தம்மை.
மங்கை நிலைக்கு வருந்தினாள் அக்கிழவி,




( 515 )




( 520 )



( 525 )




( 530 )




( 535 )




( 540 )




( 545 )
5

மாமிதன் வீட்டினை நூறு வராகனுக்குச்
சாமியப்ப னுக்குவிற்றுத் தையலிடம் தந்து
கடையொன்று வைக்கக் கழறினாள். அன்னாள்
உடனே கடைதிறந்தாள், ஊர் மதிப்பும் தான்பெற்று.
வாழ்கையில் ஓர்நாள், மனைவி தனைஇழந்த
கூழப்பன், மங்கையிடம் தன்குறையைக் கூறலுற்றான்,
"மாடப் புறாப்போல், மயில்போல், குயில்போலத்
தேடி மணந்தேனா பத்தாண்டும் செல்லப்
பிள்ளையில்லை, வேறே ஓர் பெண்ணையும் நீ மணந்து
கொள்' என்றாள்; 'கோதையே, நீஇருக்கு மட்டும்
எவளையும் தீண்டேன்நான்' என்று முடித்தேன்;
அவள் அன்று மாலை அனல்மூழ்கி மாண்டுவிட்டாள்.
இப்படிச்செய் வாள்என் றெனக்குத் தெரிந்திருந்தால்
அப்படிநான் சொல்ல அணுவளவும் ஒப்பேன்.
மணம்புரிய வேண்டும் நான் மக்கள்பெற வேண்டும்.
தணல்மூழ் கினாளின் எண்ணமிது தான என்றான்.
கேட்டிருந்த முத்தம்மை கிள்ளிஎறி பூங்கொடிபோல்
வாட்டம் அடைந்தாள்; மனமெல்லாம் அன்பானாள்,
"என்னை மணப்பீரோ என்றன் அருமைமகன்
தன்னைஉம் பிள்ளையெனத் தாங்கத் திருவுளமோ?
ஐயாவே" என்றாள். உடனே, அருகிலுறும்
பையனை அன்னோன் தூக்கிப் பத்துமுறை முத்தமிட்டான்.



( 550 )




( 555 )




( 560 )




( 565 )


6

தங்கமுத்தின் தாய்கண்டாள், கூழப்ப னின்உருவில்
தங்கமுத்தைக் கண்டாள்! தணியாத அன்பினாள்
வாழ்த்தினாள் முத்தம்மை கூழப்பன் மாமணத்தை!
வீழ்த்தினார் அவ்விருவர் மேல்வீழ்ந்த துன்பத்தை!
பூவும் மணமும்போல் பொன்னும் ஒளியும்போல்
கோவையிதழ் முத்தம்மை கூழப்பன் இவ்விருவர்
ஒத்தின்ப வாழ்வில் உயர்ந்தார். வாணிகமும்
பத்துப்பங் கேறியது. பையன் வயதும்
இருப தாயிற்று மணம் செய்ய எண்ணிப்
பெருமாளின் பெண்ணைப்போய் பேசுவதாய்த் திட்டமிட்டார்.

( 570 )




( 575 )


7

மாலையிலே முல்லை மலர்ப்பொடியைத் தானள்ளித்
சோலையெலாம் வண்டிருந்து சூறையிடும் தென்றலிலே
மேலாடை சோர விளையாடும் தோகைஎதிர்
வேலன் வரலானான். கண்டாள் விளம்புகின்றான்;
உம்மைக் கடைத்தெருவில் கண்டேன் நெடுநாள்பிள்
மெய்ம்மறவர் வாழ்தெருவில் கண்டு வியந்ததுண்டு.
எந்தப் பெண்ணுக்காக இவ்வுலகில் வாழ்கின்றீர்?
அந்தப் பெண் உம்மை அடையப் புரிந்ததவம்
யாதென்றாள். வேலன் இயம்பத் தலைப்பட்டான்;
காதலெனும் பாம்புக் கடிமருந்து நீ என்று,
தேடிவந்தேன் ஒப்புதலைச் செப்பிவிடு. நீ வெறுத்தால்
ஓடிஇதோ என் உயிர் மாய்த்துக் கொள்ளுகின்றேன்.
என்றான். "உனக்குநான என்றாள். உவப்புற்றான்;
நின்றாளின் நேர் நின்றான்; நீட்டியகைம் மேல்விழுந்தாள்.
மாலை மறைந்ததையும், வல்லிருட்டு வந்ததையும்
சோலை விளக்கம் தொலைந்ததையும் தாம் உணரார்.
குப்பத்து நாய்தான் இடிபோற் குரைத்ததனால்
ஒப்பாமல் ஒப்பி உலகை நினைத்தார்கள்.
விட்டுப் பிரியமனம் வெம்பிப் பிறர் விழிக்குத்
தட்டுப் படாதிருக்கத் தத்தம் இடம்சேர்ந்தார்.

( 580 )




( 585 )




( 590 )




( 595 )


8

பெருமாளிடம் சென்றான் கூழப்பன், "பெற்ற
ஒருமகளை வேலனுக்கே ஒப்படைக்க வேண்டு" மென்றான்,
"தாயோ பழியுடையாள தந்தையும் நீயல்லை,
சேயோ திருவில்லான்," என்றான் பெருமாள்.
"மருமக னாவதற்கு வாய்த்தபல பண்புகள்
பையனிடம் உண்டா எனப்பாரும் மற்றவரை
நைய உரைத்தல் நலமில்லை" என்றுரைத்தான்.
விண்ணில் இருக்கின்றாள் தோகை, பழிவேலன்
மண்ணில் கிடக்கின்றான்; மாற்றம் உணர்ந்தாயோ
என்றான் பெருமாள். எதிரே ஆள் நீள் அஞ்சல்
ஒன்றைப் பெருமாள்பால் நீட்டிவிட் டோடிவிட்டான்.
வீட்டின் ஒரே அறைக்குள் வேலனும் தோகையும்
காட்டுப் புறாக்களைப்போல் காதல்நலம் காணுகின்றார்:
ஒத்த உளத்தை உயர்ந்த திருமணத்தைப்
பத்துப்பே ரைக்கூட்டிப் பாராட்ட எண்ணமுண்டோ?
பாராட்டு நல்விழா எந்நாள்? இருபெற்றோர்
நேரே உரைத்திடுக. நெல்லிமர வீட்டினுள்ளார்
இங்ஙனம் தோகையாள் வேலன் இருவர்ஒப்பம்.
அங்கே இதைப்படித்தான் ஆம்ஆம் பொருத்தம்என்றான்.
வேலவன் தோகை விழைவின் விழாவையே
ஞாலமே வாழ்த்தியது நன்று.

( 600 )




( 605 )




( 610 )




( 615 )



இன்றைக்கு ஒத்திகை
நாளைக்குக் கூத்து



மாணிக்கம் தன்வீட்டு
மாடியின் மேற்குந்தி
தோணிக்கா ரத்தெருவின்
தோற்றத்தைப் பார்த்திருந்தான்.
பொன்னிதன் வீட்டுக்
குறட்டினிற் பூத்தொடுப்பாள்.
தன்விழியைத் தற்செயலாய்
மாடியின் மேல்எறிந்தாள்!

பார்வை வலையில்ஒரு
பச்சைமயில் பட்டதனால்
யார்வைத்த பூங்கொடியோ
என்றிருந்தான் மாணிக்கம்!

பூத்தொடுக்கும் கைகள்,
புதுமைபார்க் கும்கண்கள்,
நோக்குவதும் மீளுவதும்
ஆக இருவரின்
உள்ளம் இரண்டும்
ஒட்டிக் கிடக்குமங்கே!
"தள்ளுவளா? ஒப்புவளா
தையல எனும் ஐயத்தை
மாணிக்கம் எண்ணி
மணிக்கணக்காய்த் துப்புற்றான்.
ஆணிப்பொன் மேனியினாள்
எண்ணமும் அப்படித்தான்.
அன்னைதான் பொன்னியினை
உள்ளிருந்தே "உண்ணாமல்
என்னசெய் கின்றாய என்
றேசினாள் பொன்னி
இதோவந்தேன் என்பாள்;
எழுந்திருக்க மாட்டாள்.
இதுவெல்லாம் காதினில்
ஏறுமா? மாடியினைப்
பார்ப்பாள்; சிரிப்பாள்!
அதேநேரம் பச்சையப்பன்,
ஊர்ப்பேச்சு பேசுதற்கே
உள்வந்து மாடியிலே
மாணிக்கம் செய்திகண்டு
"மங்கையிடம் என்னகண்டாய்?
காணிக்கை வைத்தாளா
தன்நெஞ்சைக் காட்டென்றான்.
"பெய்வளைதான் தன்மீது
பெய்துள்ள அன்பினிலே
ஐயமில்லை" என்றே
அறிவிப்பான் மாணிக்கம்.
"துத்திப்பூக் கொண்டையும் நானும்நல் துய்க்கின்ற
ஒத்திகை இன்றைக்கு
நாளைக்குக் கூத்து!"
( 620 )




( 625 )





( 630 )





( 635 )




( 640 )




( 645 )




( 650 )




( 655 )




( 660 )




( 665 )