பக்கம் எண் :

120கவிமணியின் கவிதைகள்

Untitled Document
767 பொங்கு கடல் கடந்து - சென்றிப்
     பூவுலகத் தினிலே
எங்கெங்கு வாழ்ந்தாலும் - தமிழர்
     ஏக குலத்தவராம்.

768 கோடரி மண்வெட்டி - கலப்பை
     குந்தாலி ஏந்துவோரே
நாடெலாம் ஆளுகின்ற - உண்மை
     நாயக ராவாரையா!

769 பாழ் நிலத்தையெல்லாம் - திருத்திப்
     பண்படுத்தி மக்கள்
வாழ் நிலமாகத் - தமிழர்
     மாற்றிய தாரறியார்?

770 இலங்கை சிங்கபுரம் - பிஜிமுதல்
     இன்னும் பலவான
தலங்களின் செல்வம் - தமிழர்
     தந்த செல்வமன்றோ?

771 நாச அணுக்குண்டால் - நமக்கு
     நன்மை ஏற்படுமோ?
நேச மாய்நிதமும் - அஹிம்சை
     நெறியைப் போற்றுவமே.

772 காந்தி மகான் சொன்ன - வழியைக்
     கடைப்பிடிக்கும் மந்த
மாந்தரே உலகில் - நல்ல
     வாழ்வு பெறுவரையா!

வேறு

773 ஆதி பகவன் அறவாழி அந்தணன்
யாதும் உவமையிலான் இன்னருளால் - பூதலத்தில்
சிந்தைக் கினியபிஜித் தீவில் தமிழ்மக்கள்
சந்ததம் வாழ்க தழைத்து.