முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 13 |
Untitled Document
45 | | கண்ணுக் கினியகண்டு-மனத்தைக் காட்டில் அலையவிட்டு, பண்ணிடும் பூசையாலே-தோழி பயனொன்றில்லை, அடி! |
46 | | உள்ளத்தில் உள்ளான்,அடி!-அதுநீ உணர வேண்டும் அடி உள்ளத்தில் காண்பாய்எனில்-கோயில் உள்ளேயுங் காண்பாய் அடி! |
| | 12. குருவின் உபதேசம் | 47 | | வாக்கி றந்த பொருள்-நமது மனத்திற் கெட்டாப் பொருள்! யார்க்கும் அப்பொருளை-அளக்க இயல மாட்டா தப்பா! |
48 | | ஒரு திரை நீங்கின்-மேலும் ஒரு திரை வீழும்; ஒரு கணப் பொழுதும்-திரைதான் ஒழிய மாட்டா தப்பா! |
49 | | 'ஆதி எது?' என்று-வினவும் அன் ஓர் அறிவிலான்; ஆதி இது என்று-கூறும் அவனும் ஒரு மூடன் |
50 | | மண்ணில் வாழ்வதுண்டு-பின்னால் மரண மாவ துண்டு நண்ணும் இன்ப துன்பம்-எந்த நாளும் உண்டப்பா |
51 | | நன்மை விதைத்திடில்-என்றும் நன்மையே விளையும்; தின்மை விதைத்திடில்-அதுபோல் தின்மையே விளையும். |
52 | | கரும்பில் என்றுமே-வேம்பின் கனி கனிவ தில்லை; விரும்பிடா வேம்பில்-கரும்பும் விளைவ தொன்றுமில்லை. | |
|
|