Untitled Document
53. | | பொய் களைந்திடுவோம் - மெய்மைப் போற்றி நின்றிடுவோம் செய்கடனை நிதம் - உலகில் செய்து வாழ்ந்திடுவோம். |
54. | | மனமே! நீயும் வருந்துவதேன்? மகிழ்ந்து தேவி திருநாமம் தினமும் மறவா தன்போடு தியானஞ் செய்து வாழ்வாயே! கனமா மணிசே கண்டியெலாம் கணக ணென்று முழக்காது நினைவை ஒடுக்கி நிகழ்த்திடும் அந் நிஷ்டைக் கேதும் நிகருண்டோ? |
55. | | மண்ணினைக் கல்லதனைச் - செம்பினை வடிவஞ் செய்துவைத்துப் பண்ணிடும் பூசையாலே - யாதுமோர் பலன்அ டைவதுண்டோ? எண்ணிய எண்ணிலெழும் - உருவை இதயக் கமலத்தில் திண்ணமாய் ஏற்றிவைத்து - நிதமும் செபங்கள் செய்வாயே. |
56. | | பூவும் வேண்டாமே - பழமும் பொரியும் வேண்டாமே; மேவும் உள்ளன்பே - தேவி விரும்பும் நல்லமுதாம். |
57. | | குருடர் கூடிநின்று - கற்பூரம் கொளுத்திக் காட்டுவதால் சிறிதும் நன்மையுண்டோ? - இதனைச் சிந்தனை செய்வாயே. | |
|
|