| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 15 |
Untitled Document
| 58 | | ஒளியை நோக்கிடவே - விளக்கின் உதவி வேண்டுவதேன்? தெளிய உள்ளத்தில் - ஞான தீபம் ஏற்றுவையே. |
| 59 | | மேயும் ஆட்டினைப் - பிடித்து வெட்ட வேண்டாமே; தீய குணமெல்லாம் - பலிநீ செய்தாற் போதுமே. |
| 60 | | வாழிஎன் மனமே! உழவின் வழியறி யாயோ? பாழ்நில மெல்லாம் - உழுதால் பயிர் செழித் திடுமே. |
| 61 | | விரிசடைத் தேவி - பெயரால் வேலிகட் டுவையேல், அரிய காலனுமே - வந்தங்கு அணுக மாட்டானே. |
| 62 | | என்றிவ் வுலகமெல்லாம் - நாசம் எய்தி வீழ்ந்திடுமோ? இன்றோ நாளையோ? - அதனை யாவர் அறிகுவார்? |
| 63 | | இந்த நாளேநீ - வாழ்வோடு இருக்கும் நாளாகும் : முந்திப் பயிர்செய்த - நல்ல முதலெடுப் பாயே. |
| 64 | | விரும்பி ஞானகுரு - தந்த விதையை நீ விதைத்துப் பெருகும் அன்புநீரைப் - பாய்ச்சிப் பேணிக் காப்பாயே. |
| 65 | | தனியே நிற்பாயேல் - மனமே! தளர்ந்து போவாய் நீ; எனையும் கூடவே - துணையாய் ஏற்றுக்கொள்வாயே. | |
|
|