Untitled Document | | துட்டர் கண்டன் சூராதி சூரன் என்றிவ் வுலகெங்கும் பட்டம் பெற்ற பாண்டியனைப் பாடிப் பாடிப் போற்றுவமே. |
924 | | அன்ன சாலை அமைத்திடுவோம்; ஆல யங்கள் கட்டிடுவோம்; பன்னற் கரிய கலைகளெல்லாம் பயிலக் கழகம் கண்டிடுவோம்; தென்னர் போற்றும் பாஞ்சையினைத் திருத்தி அளகை யாக்கிடுவோம்; மன்னர் வீர பாண்டியன்பேர் வையத் தென்றும் வழங்கிடவே. |
925 | | கெஞ்சி வாழும் வாழ்க்கையினைக் கிஞ்சித் தேனும் விரும்பாத செஞ்சி யாண்ட தேசிங்கத் திறலோன் அனைய போர்வீரன்; வஞ்சர் இழைத்த தீவினையால் மாண்ட கட்டபொம்மான்பேர் விஞ்சும் ஆண்மை பெறுவதற்கு வீரர் போற்றும் மந்திரமே. |
926 | | அஞ்சினவர்க் கென்றும் அபயம் அளித்திடவோன் வஞ்சகர்க்கு வாழ்வு மறுத்திடுவோன் - விஞ்சு புகழ் தென்னாட்டுப் பாஞ்சைத் திறல்வீர பாண்டியனின் நன்னாமம் போற்றுவோம் நாம். |
927 | | ஜயன் ராமன் திருநாமம் அன்பு கனியை ஓதிடுவோன் செய்யும் தொழில்கள் ஆராய்ந்து திருந்தச் செய்யும் குணசீலன் | |
|
|