பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு143

Untitled Document
மெய்யும் அருளும் துணைகொண்டு
     வெற்றி காணும் ஜகவீரன்
வையம் புகழும் காந்திமகான்
     வாழ்க வாழ்க வாழ்கவே

928 புத்தனும் மக்களெல்லாம் போற்று மரிச் சந்திரனும்
ஒத்துலகில் ஒன்றாள உத்தமனே - நித்தமும்
துய்ய கதருடுத்து சோர் வின்றித் தொண்டு செய்யும்
ஐயனென்னும் காந்தி மகானாம்.

929 வாழ்க நல்லறம்! வாழ்க சுதந்திரம்!
வாழ்க செல்வம் வளர்க்கும் தொழிலெலாம்!
வாழ்க செந்தமிழ்! வாழ்கநம் பாரதம்!
வாழ்க காந்தி மகான் நிலத்தென்றுமே!

116. நீதி நிலைக்க
930 ஜாதி சமய வெளி தளரக் கலைவளர
நீதி வளர அறம் நிலைக்க நீதி வளர
ஆதி பகவனடிக் கன்புவளரச் செய்த
மாதவப் பயனென வாய்த்த குடியரசு

தனி மனிதர் வாழ்த்து (9)
117. வேல்ஸ் இளவரசர்
931 தண்ணளியின் மண்முழுதும் தாங்குந் தனிக்கவிதை
அண்ணலருள் ஜார்ஜின் அருங்குமரற்கு - எண்ணு புகழ்ச்
செல்வதற்கு வேல்ஸினிளஞ் செம்மற்குத் தேமொழியீர்!
நல்வரவு சொல்வோம் நயந்து.

வேறு
932 பாரணிந்த பலமன்னர் பரந்தபுகழ்க் குலமாம்
     பாற்கடலின் உதித்தெழுந்த பாக்கியமே! வருக!
தாரணிஎவ் அறங்களுமே தழைத்தோங்கி வளரத்
     தனிமுதலைத் தொழுதடைந்த தவப்பயனே! வருக!