முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 163 |
Untitled Document
1040 | | சீதமதி புனைந்து திற்றம்பலத் தாடும் ஆதிபகவன் அருளாலே - ஓதுபுகழ் செந்தமிழ்ச் செல்வன் சிதம்பர நாதநண்பன் சந்ததம் வாழ்க தழைத்து. |
139. அனந்தகிருஷ்ண அய்யங்கார் |
1041 | | முன்னைக் காள மேகத்தின் மூவி ரட்டிக் கவி பொழிவோன்; அன்னை வாணி அருளுடையன் அனந்த கிருஷ்ணப் பேரறிஞன்; மன்னும் ஈசன் திருவருளால் மகிழ்ந்து மக்கள் சுற்றத்தோடு இன்னும் பிறைகள் ஆயிரங்கண்டு இனிது வாழ்க! வாழ்கவே! |
1042 | | அன்பால் அறிவால் அகங்குளிரும் அமுத மொழியால் அனைவரையும் தன்பா லாக்கும் தகைமையுளோன் தமிழ்த்தாய் பெற்ற தவப்புதல்வன் தென்பால் வைகும் திருப்பேரைச் செல்வன் அனந்த கிருஷ்ண நண்பன் இன்பா லாழி இறையருளால் என்றும் வாழ்க! வாழ்கவே! |
1043 | | பாகனைய செந்தமிழ்ப் பாமாரி யைக்காள மேகமென வேபொழியும் வித்தகா! - ஊகமிகும் அந்தண நண்பா! அனந்த கிருஷ்ண நாவலா! சந்ததம் வாழ்க தழைத்து! | |
|
|