Untitled Document 157. தில்லைப் பொருட்காட்சி |
1081 | | தேசம் செழிப்படையச் செய்கருமம் நன்றாக மாசில் புகழும் வளர்ந்தோங்க - ஈசனருள் முந்தியெழுந் தில்லை முதுநகரின் காட்சியெலாம் வந்தின்று காண்பீர் மகிழ்ந்து. |
1082 | | கைத்திறன் கண்டோம் கதரின் பெருமை கண்டோம் உத்தமநம் நாட்டின் உயர்வுகண்டோம் - அத்தன் அருட்காட்சி கண்டதிரு வாதிரையில் தில்லைப் பொருட்காட்சி கண்ட பொழுது. |
1083 | | பண்டிழந்த செல்வமெலாம் பாரதத்தாய் கண் குளிரக் கண்டுகண் டுள்ளம் களித்தனளே - தொண்டர்சீர் நாடும் சிதம்பர நன்னகர்க்கிங் நாள்வாய்த்த ஈடில் பொருட்காட்சி யில். |
1084 | | நல்லநல்ல பஞ்சிருக்க நங்கை துணையிருக்க மில்லில் எழும் ஆடை விரும்புவதேன்? - இல்லிடத்தே வெண்ணெய் இருக்க விலைக்குநெய் வாங்குவது கண்ணியமோ புண்ணியமோ? காண். |
1085 | | கப்பற் படையைக் கடற்படையை ஓட்டுபடை எப்பொழுதும் ஏழைகளுக் கேற்றபடை - இப் புவியில் சாந்தியினைப் போற்றுபடை சர்க்காப் படை எங்கள் காந்திமகான் கைப்படையே காண். |
1086 | | பாடுபட்டுத் தேடும் பணமெல்லாம் பாரதநல் நாடுவிட்டுப் போதல் நலமாமோ? - கேடில் பருத்தி பயிர்செய்வோம் பஞ்செடுப்போம் நூற்போம் திருத்தமுற நெய்வோம் தினம். |
1087 | | கைத்தொழிலே மெய்த்தொழிலாம் கைகூப்பும் சேவகமே பொய்த்தொழிலாம் என்னுமொழி போற்றியே - இத்தரையில் வாழ்வை நடத்தும் வலிமை யுடையவர்க்குத் தாழ்வில்லை என்றுமே தான். | |
|
|