பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு173

Untitled Document
1088 எல்லையிலா நல்ல எழிற்காட்சி பாரதத்தாய்
தில்லையிலே கண்ட திருக்காட்சி - தொல்லுலகம்
போற்றும் சுதேசப் பொருட்காட்சி என்றென்றும்
ஏற்றமுற வாழ்க இனிது!

158, திருநாவுக்கரசு வித்தியாசாலை

1089 தேசமக்கள் யாவருந்தன் செல்வமக்க ளேஎன்னப்
பாசமுற நோக்கும் பழனியப்பன் - ஆசை மிகுந்து
அப்பர் பெயரால் அமைத்தகல் விச்சாலை
எப்பொழுதும் வாழ்க இனிது.

1090 ஓடி விளையாடி உல்லாச மாய்நின்று
பாடிக் கதைகள் பலசொல்லிக் - கூடிநம்
மக்கள் பயின்று மகிழ்ந்துவரும் காட்சி அந்தச்
சொர்க்கத் திலும் உண்டோ? சொல்.

1091 நித்தம் இளமை நிலைக்கும் படிஈசன்
வைத்திலனே என்று வருந்துகின்றேன் பத்திமிகு
நாவரசின் நாமங்கொள் நற்கல்விச் சாலையின்சீர்
யாவையுமே கேட்டறிந்த யான்.

1092 தேவரும் போற்றும் திருநாடு தென்னாடாம்
யாவரும் ஐயம் இதிலில்லை - மூவர்
தமிழ்தரும் இன்பம் தருமோ அவ்வானின்
அமிழ்தமும் சொல்வாய் அறிந்து.

1093 அப்பர் இசையரங்கும் அண்ணல்அரிச் சந்திரன் பேர்
எப்பொழுதும் போற்றும் இளம்படையும் - ஒப்பரிய
பாரதத் தாயைப் பணிந்து பணிசெய்து
சீருடன் வாழ்க, தினம்!