முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 173 |
Untitled Document
1088 | | எல்லையிலா நல்ல எழிற்காட்சி பாரதத்தாய் தில்லையிலே கண்ட திருக்காட்சி - தொல்லுலகம் போற்றும் சுதேசப் பொருட்காட்சி என்றென்றும் ஏற்றமுற வாழ்க இனிது! |
158, திருநாவுக்கரசு வித்தியாசாலை |
1089 | | தேசமக்கள் யாவருந்தன் செல்வமக்க ளேஎன்னப் பாசமுற நோக்கும் பழனியப்பன் - ஆசை மிகுந்து அப்பர் பெயரால் அமைத்தகல் விச்சாலை எப்பொழுதும் வாழ்க இனிது. |
1090 | | ஓடி விளையாடி உல்லாச மாய்நின்று பாடிக் கதைகள் பலசொல்லிக் - கூடிநம் மக்கள் பயின்று மகிழ்ந்துவரும் காட்சி அந்தச் சொர்க்கத் திலும் உண்டோ? சொல். |
1091 | | நித்தம் இளமை நிலைக்கும் படிஈசன் வைத்திலனே என்று வருந்துகின்றேன் பத்திமிகு நாவரசின் நாமங்கொள் நற்கல்விச் சாலையின்சீர் யாவையுமே கேட்டறிந்த யான். |
1092 | | தேவரும் போற்றும் திருநாடு தென்னாடாம் யாவரும் ஐயம் இதிலில்லை - மூவர் தமிழ்தரும் இன்பம் தருமோ அவ்வானின் அமிழ்தமும் சொல்வாய் அறிந்து. |
1093 | | அப்பர் இசையரங்கும் அண்ணல்அரிச் சந்திரன் பேர் எப்பொழுதும் போற்றும் இளம்படையும் - ஒப்பரிய பாரதத் தாயைப் பணிந்து பணிசெய்து சீருடன் வாழ்க, தினம்! | |
|
|