1347 | | புண்ணியஞ் செய்தவர் வாழும்நாடு - நெல்லைப் பொன்மலை போலக் குவிக்கும்நாடு; எண்ணும்பல தொழில் செய்யும் நாடு - நீதி ஏந்திய செங்கோல் வளர்க்கும் நாடு. |
1348 | | கொண்ட நிலத்தில் விளைந்து வரும் - அந்தக் கூழும் அமுதாகக் கொள்ளும் நாடு; கண்டு தொழுதுகை கூப்பி நின்று - பெறும் காசை விடமாகக் காணும் நாடு. |
1349 | | வெற்றி சுதந்திரம் வேண்டும் நாடு - சாதி வேற்றுமை என்றும் வெறுக்கும் நாடு; ஒற்றுமையாக ஒழுகும் நாடு - தேச ஊழியத் தாலே உயரும் நாடு. |
1350 | | தென்றல் உலவித் திரியும் நாடு - உடற் சீக்கெல்லாம் ஓட்டித் துரத்தும் நாடு; என்றும் தழைத்தறம் ஏறும் நாடு - வையத்து ஏதும் இணையிலா நாஞ்சில் நாடே. |