முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 23 |
Untitled Document
| | 21. உரையாசிரியர் | 106 | | கண்ணைக் கெடுப்பர் கவிராயர்; அக்கண்ணை எண்ணி உரைகாரர் ஈவாரே - மண்ணுலகில் ஆக்கு பவரோ அழிப்பவரோ மேலாவார்? நோக்கிநீ உண்மை நுவல். |
| | 22. கவிதை | 107 | | வண்டி அற்புதப் பொருளாம் - வண்டி மாடும் அற்புதப் பொருளாம்; வண்டி பூட்டும் கயிறும் - என்றன் மனத்துக் கற்புதப் பொருளாம். |
108 | | வண்டல் கிண்டி உழுவோன் - கையில் வரிவில் ஏந்தி நின்ற பண்டை விஜயன் போல - இந்தப் பாரில் அற்புதப் பொருளாம். |
109 | | பறக்கும் குருவி யோடென் - உள்ளம் பறந்து பறந்து திரியும்; கறக்கும் பசுவைச் சுற்றி - அதன் கன்று போலத் துள்ளும். |
110 | | ஈயும் எனக்குத் தோழன் - ஊரும் எறும்பும் எனக்கு நேசன்; நாயும் எனக்குத் தோழன் - குள்ள நரியும் எனக்கு நண்பன். |
111 | | கல்லின்கதைகள் எல்லாம் - இரு காது குளிரக் கேட்பேன்; புல்லின் பேச்சம் அறிவேன் - அதைப் புராண மகா விரிப்பேன். |
112 | | அலகில் சோதி யான - ஈசன் அருளி னாலே அமையும் உலகில் எந்தப் பொருளும் - கவிக்கு உரிய பொருளாம், ஐயா! | |
|
|