Untitled Document
113 | | உள்ளத் துள்ளது கவிதை - இன்பம் உருவெ டுப்பது கவிதை; தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை தெரிந்து ரைப்பது கவிதை. |
| | 23. இலக்கிய பஞ்சகம் | 114 | | வள்ளுவர் தந்த திருமைறையைத் - தமிழ் மாதின் இனிய உயிர் நிலையை உள்ளம் தெளிவுறப் போற்றுவமே - என்றும் உத்தம ராகி ஒழுகுவமே. |
115 | | பாவின் சுவைக்கடல் உண்டெழுந்து - கம்பன் பாரிற் பொழிந்ததீம் பாற்கடலை நாவின் இனிக்கப் பருகுவமே - நூலின் நன்னயம் முற்றுந் தெளிகுவமே, |
116 | | தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை தேரும் சிலப்பதி காரமதை ஊனிலே எம்முயிர் உள்ளளவும் - நிதம் ஓதி யுணர்ந்தின் புறுவோமே. |
117 | | கற்றவர் மெச்சும் கலித்தொகையாம் - இன்பக் கற்பனை சேருங் களஞ்சியத்தை முற்ற அளந்து தெரிவோமே - காதல் மூழ்கும் துறைகண்டு வாழ்வோமே. |
118 | | பண்டை இயற்கை வளங்களெல்லாம் - பத்துப் பாட்டின் வளத்தினிற் கண்டறிந்து, மண்டல மெங்கும் கமழும் அருந்தமிழ் வாசம் நுகர்ந்து மகிழ்வோமே. |
119 | | வெந்தழல் நீராகும்; வெள்ளெலும்பு பெண்ணாகும்; வந்தமத வேழம் வணங்கிடுமே; - சந்தமெழப் பாடுவார் உள்ளுருகிப் பாடும் தமிழிசைக்கு நீடுலகில் உண்டோ நிகர்? | |
|
|