முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 25 |
Untitled Document | | 25. கவியமுதம் | 120 | | அம்புவிக்கு வாய்த்த அருட்கவி, ஐயமின்றி உம்பரமு தொத்த உயிர்க்கவி - கம்பனும்தன் மந்திரச் சொல்லால் வனைந்தகவி, என்றேனும் வெந்திடுமோ, தீயால்? விளம்பு. |
121 | | ஓலை எரியும் தாளெரியும் உள்ளத் தெழுதி வைத்துநிதம் காலை மாலை ஓதுகவி கனலில் வெந்து கரிந்திடுமோ? |
122 | | சிந்தை மகிழ விழாக்கண்ட தேர்ந்த புலவர் முன்வந்து சந்த மெழவே பாடுகவி தழலில் வெந்து நீறாமோ? |
123 | | உள்ளத் துவகை பொங்கியெழ உரைகள் சொல்லப் பொருளேறித் தெள்ளத் தெளிந்த கவியமுதம் தீயில் வெந்து பொடியாமோ? |
| | 26. திருவள்ளுவர் | 124 | | வையம் புகழ்ஞானி வள்ளுவன் மக்களெலாம் உய்யும் படிமுப்பால் ஓதினான் - ஐயமின்றி இம்மை மறுமை யிரண்டுக்கும் நேர்வழியைச் செம்மையிற் கண்ட தெளிந்து. |
125 | | ஜாதி மதபேதம் சற்றேனு மின்றி நடு நீதி நிலைகண்ட நீள்புகழோன் - கோதிலாச் செந்தமிழ்ச் செல்வன் திருவள் ளுவன்பாதம் சிந்தையிற் கொள்வோம் தினம். |
126 | | புத்தகம் நூறு புரட்டிக் களைப்புற்றச் சித்தம் கலங்கித் திகைப்பதேன்? வித்தகன் தெய்வப் புலவன் திருவள் ளுவன்சொன்ன பொய்யில் மொழியிருக்கும் போது. | |
|
|