முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 231 |
Untitled Document 1367 | | இலைகள்விரித் திடுவோம், இளநீர்கள் வைப்போம்; குலைகுலையாய்க் கனிகள் கொண்டுவந்து வைப்போம். |
1368 | | பச்சைமஞ்சள் இஞ்சி படைபடையாய் வைப்போம்; இச்சைதரு கரும்பும் இடையிடையே நடுவோம். |
1369 | | அகில் விறகை மாட்டி அடுப்பில் எரி மூட்டி, பகவன் அடி போற்றிப் பானையேற்றி வைப்போம். |
1370 | | தங்கத்தினால் பானை, தரளம்என அரிசி பொங்கலும்பால் பொங்கல் புத்தமுதப் பொங்கல்! |
1371 | | பானையுமே பொங்கிப் பால்வடியும் வேளை, வானம்எழக் குரவை வழங்கிவலம் வருவோம். |
1372 | | கடவுட்கமு தளிப்போம்; காகத்துக்கும் இடுவோம்; உடனிருந்தெல் லோரும் உண்டுமகிழ்ந் திடுவோம். |
| | 265. ஆரல்வாய்மொழி | 1373 | | கம்பனையும் சோழனையும் காத்திடுவோம் காற் றரசின் வம்பினுக்கும் அஞ்சாது வாழ்ந்திடுவோம் - உம்பர்கோன் வானைமழை பெய்ய மறுத்திடினும் மற்றெங்கள் கூனைமழைக் குண்டோ, குறை? |
1374 | | பச்சடியும் தீண்டேன் பரப்பினும் கைவை யேன் கிச்சடியும் தீண்டேன் கிழங்கும் எடேன் - மெச்சுபுகழ் ஆரைப் பதியில் அவித்துக் கடைந்துவைத்த கீரைக் கறிகிடைக்கு மேல். | |
|
|