Untitled Document | | அஞ்சாத வீரரெங்கும் தோன்ற வேண்டும்; அகிம்சா தருமமவர் பேண வேண்டும்; என்சாதி உயர்சாதி இழிந்தசாதி என்றுசொல நாவுமெழா திருக்கவேண்டும்; நெஞ்சாரும் நினைப்பெல்லாம் நிகர்த்தி நின்றேன்; நின்மலனே இரங்கிநீ அருள்செய் வாயே. |
1362 | | தருமநெறி தவறாது தழைக்க வேண்டும்; பயிர்களெல்லாம் செழித்தோங்கி வளர வேண்டும்; தருமநெறி தவறாது தழைக்க வேண்டும்; சாதிமதச் சண்டையெலாம் ஒழிய வேண்டும்; திருமகளும் கலைமகளும் சிறக்க வேண்டும்; தேசாபி மானமெங்கும் திகழவேண்டும்; கருமமெலாம் நற்கரும மாக வேண்டும்; காந்திமதி நின்னடிகள் வாழ்த்தி னேனே. |
1363 | | பொங்கல்! இன்று பொங்கல்! புதுவருஷப் பொங்கல்! மங்கலங்கள் பொங்க மனையிலிடும் பொங்கல்! |
1364 | | சந்தனத்தைக் குழைத்துத் தரையைமெழு கிடுவோம்; சிந்துரத்தாற் கோலம் சேர அதில் அமைப்போம். |
1365 | | எங்கள்கண பதியை எழுந்தருளச் செய்வோம்; மங்கலநற் பொருள்கள் வரிசைகொள வைப்போம். |
1366 | | வாசமிக வீசும் மலர் எடுத்து வருவோம்; நேசமொடு தூவி நின்றுதொழு திடுவோம்; | |
|
|