முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 239 |
Untitled Document
1392 | 155 | | இவர்கதை இவ்வா றாக, இனிஎன் மாமி கதையை வகுப்பேன் கேளும். அரங்கு பூட்டாம், அறைப்புரை பூட்டாம்; தட்டுப் பூட்டாம், சாய்ப்புப் பூட்டாம்; அரிசியை நிதமும் அளந்து வைப்பாள், |
| 160 | | நல்ல மிளகை நறுக்கி வைப்பாள், கொல்ல மிளகைக் குறக்கி வைப்பாள், உப்பில் புளியை உருட்டி வைப்பாள், கறிக்குத் தேங்காய் கருக்கி வைப்பாள், கடுகையும் எண்ணிக் கணக்கிட்டு வைப்பாள்; |
| 165 | | தீபா வளிக்குத் தீபா வளியே எண்ணெ யறியும் என்தலை, அம்மா! அரைக்க மஞ்சள் அளித்திடா மாமி குளிக்க மஞ்சள் கொடுத்திடு வாளோ? உம்மே லாணை, ஒருநா ளாகிலும் |
| 170 | | கஞ்சியோ கூழோ காடி நீரோ கும்பி யாரக் குடித்ததே யில்லை; கந்தைத் துணிகள் கட்டின தல்லால், கண்டாங் கிகளைக் கண்டதே யில்லை, அடுக்களை நடையே நிலைய மாயினும் |
| 175 | | அங்கும் இங்கும் ஆக அவ்வீடு எங்கும் இருப்பாள் எங்கள் மாமி. இவளொரு கண்ணுக் கிணை அவ் இந்திரன் ஆயிரம் கண்ணும் ஆகா துண்மை பின்னே நோக்கினும் முன்னுள தறியும்; |
| 180 | | முன்னே நோக்கினும் பின்னுள தறியும்; எறும்பும் காணா இடத்திவள் காண்போம்; புகையும் நுழையா இடத்திவள் புத்திபோம். ஆணாய்ப் பிறந்தால் அகிலம் ஆளுவாள்; இருகண் இருப்பின் இடமிது போதுமோ? |
| |
|
|