Untitled Document
| | 185 | எல்லாம் வல்ல எம்பெரு மான்இவள் குணத்தை அறிந்தே கொடுத்தான் ஒருகண். கணகண என்றெக் கணமும் நாக்கின் அடிக்கும் மணிவிசை அடங்கி விடுமென்று எவரும் எண்ணி யிருந்ததே யில்லை. |
| | 190 | ஊரை முழுதும் நாழியால் அளப்பாள். நாட்டை முன்னம் பரியாய் ஆக்கின நாதனும் கண்டு நாண, இவளும் யானையைப் பூனை யாக மாற்றுவாள். |
| | 195 | பூனையை யானை போலக் காட்டுவாள். ஐயோ! உலகுக் கெங்கள் அருமை அத்தை திருவிளை யாடலை யெல்லாம் பத்துப் பரஞ்சோ திகளே பாடினும் முடியா தென்றால், மூதறி வில்லா |
| | 200 | அடியாள் சொல்லி அறியப் படுமோ? இரக்கம் சிறிதும் இன்றி, எனக்கிவள் இடுவாள் வேலைகள் இரவும் பகலும். குழந்தைக் குப்பால் கொடுக்க வொட்டாள்; கும்பி யாரக் குடிக்க வொட்டாள்; |
| | 205 | உண்ண வொட்டாள் உறங்க வொட்டாள்; உடலைக் கீழே சரிக்க வொட்டாள்; அருமை மதினி அடிக்கடி அடிக்கடி சடைவா றுதற்குத் தாய்வீ டடைவாள்; மக்களும் பின்னால் வருவர்; புருஷன் |
| | 210 | இரண்டொரு நாள்கழிந் தெட்டிப் பார்ப்பான். வந்தால், போகும் வரையிலும் என்னை அம்மியில் வைத்துச் சம்மந்தி யாக அரைத்து விடுவாள் ஐயம் அதற்கிலை, என்னிரு மக்களும் இவருக் கேவல் |
| | 215 | செய்து செய்து துரும்பாய்த் தேய்ந்தார். |
| |
|
|