Untitled Document | 815 | | அற்புதம்! அற்புதம்! அற்புதம்! அப்பா! ஒருகண் வெண்ணையும் ஒருகண் நீறும் வைப்பதும் உனக்கு வழக்கம் தான், அடா! இதற்குச் சாத்திரம் எங்கே பார்த்து வைத்திருக் கின்றீர், மாப்பிள்ளைத் துரையே! | | 820 | | போட்டும்; ஆண்டு தோறும் அறுப்புக் காலம்உன் நாலாம் மனைவி நாடகக் காரி, வித்துத் தண்டும் வாளை மீனும் முருங்கைக் காயும் மொச்சைக் கொட்டையும் | | 825 | | வட்டி வட்டியாய் வாங்கி வாங்கிக் கறிகள் வைத்துக் கஞ்சியும் வைத்து, கஞ்சியை ஆற்றி ஆற்றி அரையரை அகப்பையாய் விட்டுக் கொண்டு, விசிறி எடுத்து | | 830 | | வியர்வை மாற வீசிக் கொண்டு, பற்பல பேச்சிலும் பக்குவ மாக உண்மையும் பொய்யும் ஒருங்கு கலந்து காலம் போக்கும் காரணம் இன்னதென்று அப்ப முத்துநீ அறிவா யோடா? | | 835 | | கொட்டுக் குடவைப் புட்டும் தின்று, மேல் குறுணிக் காப்பியும் குடித்தால் போதுமா? வீட்டுக் காரியம் விசாரித்து அறிய மதியில் லாதவன் மனிதனா? மாடா? சாளையும் சோறும் சண்ணும் சப்பா, | | 840 | | களத்துச் சுவரைக் கடந்து போவது எத்தனை வட்டிநெல் என்றுஅறி வாயோ? கூடப் பிறந்தவள் கும்பி கொதித்து வந்துநின் றாலும், மாபா தகன்நீ, ஆழக்கு நெல்லும் அளித்திடு வாயோ! | | 845 | | அலர்தலை யுலகில் அறவழி நில்லா அரசர் மகுடம் அனைத்தையும் ஒன்றாய் |
| |
|
|