| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 263 |
Untitled Document | | | அடித்து நொறுக்கி அழலிற் காய்ச்சி மாசெலாம் அகற்றி வையகம் தொழுதன் அடியில் இடுஞ்செருப் பாணிகள் ஆக்கவும், | | 850 | | அவர், கொடுங்கோல் எல்லாம் குதிரைப் பாகர் தாங்குதற் குரிய சவுக்குள் ஆக்கவும், ஈட்டி வாள் இவை யாவையும் முறித்துப் பண்பட நிலம் உழு படைகள் ஆக்கவும் | | 855 | | கொடிகள் கொற்றக் குடைகள் இவற்றைச் சிறுசிறு துண்டாய்க் கீறிச் சிறுமியர் பாவைக்கு அணிபா வாடைகள் ஆக்கவும், நாடும் நகரும் நாசம் செய்யும் பென்னம் பெரிய பீரங் கிகளை | | 860 | | இந்திய நாட்டில் இழுத்துக் கொணர்ந்து செந்நெல் கோதுமை தீங்கரும்பு என்று பன்னப் படுபல பயிர்களும் ஓங்குநம் நிலங்களில் என்றும் நீர்வளம் பெருகக் கங்கை யமுனை காவிரி முதலிய | | 865 | | வற்றிலா நதிகளில் மடைகள் ஆக்கவும், கங்கணம் கட்டியெம் காவலர் காவலன் ஐந்தாம் ஜ்யார்ஜாம் அமரா பரணன் பூதலகம் மீதலம் பாதலம் நடுங்க ஏம கால தூதரும் இளைக்கக் | | 870 | | கடும்போர் செய்யும் இக்கலாந் தன்னில் காரண வர்களே! காரண வர்களே! குடும்பந் தோறும் கொடுங்கோ லரசு நிலைத்திட முயல்வது நீதிதா னாகுமோ? அது, | | 875 | | நீணலத்து இனியொரு நிமிஷம் நிற்குமோ? ஐயோ! இவர் செய்யும் அநியா யங்களை அறிபவர் யாரே! அறிபவர் யாரே! கொடுங்கோ லரசர் குடிகளைப் போல், இக் காரண வர்களின் கைக்கீழ்த் தங்கி |
| |
|
|