| | | வேறு |
| | | காரணவரைக் கண்டு அனந்திரவர்கள் கூறுவது |
1409 | | | காணியெல்லாம் ஆளும் காரணவர் - உம்மைக் கண்டு தொழுதிவை சொல்ல வந்தோம்; வீணர் இவரென் றிகழ்ந்திடாமல் - கேட்டு வேண்டும் விடைகள் பகரும், ஐயா! |
1410 | | | பற்றுப் பருக்கையும் உண்டுவிட்டீர் - வெறும் பானையைப் பங்கிட வைத்துவிட்டீர்; சற்றும் கருணை உமக்கிலையே? - எங்கள் சங்கட முற்றும் அறிகிலீரோ? |
1411 | | | வட்டியிலே நெல் அளந்து நீர் - ஒவ்வொரு மாதமும் தந்திட வேதனை ஏன்? குட்டிக் கரணங்கள் போட்டிடினும் - இனிக் கோர்ட்டு விதிகள் அழிவதுண்டோ? |
1412 | | | யானைக் குலத்து நீர் வந்தவரோ - நாங்கள் ஏழை எறும்பின் குலத்தவரோ? மான மிலாது பெரும்பங்கு கேட்டிட வாயும் சிறிதுமே கூசலையோ! |
1413 | | | கைப்பொருள் எல்லாம் கடத்திவிட்டீர் - நூறு கள்ளக் கடன்களும் காட்டிவிட்டீர்; பப்படம் போல நொறுங்கிடோமோ? - இந்தப் பாரமும் நாங்கள் பொறுப்போமோ? |
1414 | | | கூனக் கிழவிகள் கொட்டை நூற்று - முன்னம் கூட்டி தேட்டம் எமக்கிலையோ? ஆனபொருளில் அதிகம் எடுக்க - நீர் ஆசைப் படுவது எக்காரணமோ? |