| 1486 | | சந்தேகம் வேண்டாம் - அதனைத் தரமு டியாதப்பா! எந்த உயிரையும் - காப்பது என் கடமையப்பா! | 42 |
| 1487 | | சாற்றும் உரைகேட்டுத் - தேவ தத்தனும் ஓடிவந்து, சீற்றம் எழுந்தவனாய் - நின்று செப்பும் மொழியிதுவாம்; | 43 |
| 1488 | | "மடிய நேர்ந்தாலும் உயிர்த்து வாழ நேர்ந்தாலும், படியில் வீழ்ந்திடுமேல் - பறவை பாணம் எய்ந்தவர்க்காம். | 44 |
| 1489 | | என்கை அம்பினால் - விழுந்த இப்ப றவையினை, சங்கை இல்லாமல் - இங்கே தந்திடுவாய், ஐயா! " | 45 |
| 1490 | | சொன்ன மொழிகேட்டான் - ஐயன் துன்பம் மிகஅடைந்தான்; அன்னப் பறவையினைக் - கன்னத்தோடு அணைத்து வைத்துக் கொண்டான். | 46 |
| 1491 | | பாரில் உயிரையெல்லாம் - அருளால் பாது காக்கவந்தோன், சீரிய நன்மொழிகள் - உள்ளம் தெளிந்து கூறுகின்றான்; | 47 |
| 1492 | | "இல்லை இல்லையா! - பறவை என்பறவை, ஐயா! வல்லடி வழக்கு - நீயும் வளர்க்க வேண்டாம், ஐயா! | 48 |
| 1493 | | தொல்லு லகமெல்லாம் - அருளால் சொந்த மாக்கவந்தேன்; வெல்லும் பொருள்களில் - முதலில் வென்ற பொருளிதாம், | 49 |