| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 309 |
Untitled Document | 1494 | | எம்ம னிதருமே - உளத்தில் இரக்க முற்றிடயான், செம்மை நெறியினை - நன்கு தெரிந்து கூறிடுவேன். | 50 | | 1495 | | துன்பம் அண்டாமல் - அதனைத் துரத்தி ஓட்டிடுவேன்; இன்பம் இவ்வுலகில் - நிலைக்க என்றும் வென்றிடுவேன்! | 51 | | 1496 | | மனிதர் மட்டுமல்ல - உலகில் வாழும் எவ்வுயிரும், இனிய வாழ்வடையும் - வழியை இனிது காட்டிடுவேன்., | 52 | | 1497 | | என்னு ரைகளை நீ - மறுக்கின், இன்றே இப்பொழுதே, மன்னும் நீதிமன்றம் - ஏறி வழக்கு ரைப்போம், ஐயா! | 53 | | | வேறு | | | 1498 | | இருவரும் அப்பால் இசையா ராகி, அறநூல் கற்றோர் அறிவிற் பெரியோர், நடுநிலை நீதி நன்கு கண்டோர் கூடிய மன்றில் குறைகொண்டு ஏகினர். ஏகவே, வழுவற இருதலை வழக்கும் கேட்டு, மன்றுளோர் தம்முள் வாதம் செய்தனர்; இதுவே நீதியென்று இயம்பினர் சிலரே; அதுவே நீதியென்று அறைந்தனர் சிலரே; யாதும் துணியாது இருந்தனர் சிலரே; முடிவில், இந்நாள் வரையிலும் எவருமே அறியாப் புலமை மிக்க புரோகிதன் ஒருவன், எழுந்து நின்று, யாவருங் கேட்க, | 54 | |
|
|