Untitled Document
| 169 | | நாட்ட மொழியுமவன் பாட்டினிசையில் - மிக்க நல்ல கற்கண்டினிமை சொட்டுமே, அடா! ஏட்டிலிம் மந்திரந்தான் கண்டவருண்டோ? - ஈதவ் ஈசன் திருவருளென் றெண்ணுவாய், அடா! |
| 170 | | உள்ளந் தெளியுமொரு பாட்டிலே, அடா! - மிக்க ஊக்கம் பிறக்குமொரு பாட்டிலே, அடா! கள்ளின் வெளிகொளுமோர் பாட்டிலே, அடா! - ஊற்றாய்க் கண்ணீர் சொரிந்திடு மோர் பாட்டிலே, அடா! |
| 171 | | 'கரும்புத் தோட்டத்திலே' - எனுங்கவி காதைச் சுடுகுதடா! இரும்பு நெஞ்சமே - நீராய் இளகியோடுதடா! |
| 172 | | 'செந்தமிழ் நாட்டின்' - முதன் மொழி செவியிற் சேருமுன்னே, அந்தமில் லாமல் - உள்ளத்தில் அமுதம் ஊறுதடா! |
| 173 | | 'பாப்பாப் பாட்டி'லே - நெஞ்சைப் பறிகொ டுத்தேனடா! சாப்பா டேதுக்கடா! - சீனி சர்க்கரை ஏதுக்கடா! |
| 174 | | அன்னை 'பாஞ்சாலி - சபதம்' அறைதல் கேட்டேனடா! முன்னைக் கதையெல்லாம் - கண்ணின் முன் நடந்ததடா! |
| 175 | | 'வந்தே மாதரத்' தைப் - பாடவே வாய்தி றந்தவுடன், சந்தேக மில்லை - ஒருபுதுச் சக்தி தோன்றுதடா! |
| 176 | | 'எங்கள் நாடு' தான் - பூங்கா இசையி லேறிடுமேல், கங்கை யாறுபோல் - உள்ளத்தில் களிப்பொ ழுகதடா! | |
|
|