பக்கம் எண் :

338கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1591 வாரும் விரும்புவ தின்னுயிராம் - அவர்
     என்றுமே காப்பதும் அன்னதேயாம்;
பாரில் எறும்பும் உயிர்பிழைக்கப் - படும்;
     பாடு முழுதும் அறிந்திலீரோ?
147
1592 நேரிய உள்ளம் இரங்கிடுமேல் - இந்த
     நீள்நிலம் முற்றுமே ஆண்டிடலாம்;
பாரினில் மாரி பொழிந்திடவே - வயல்
     பக்குவ மாவ தறிந்தலீரோ?
148
1593 காட்டும் கருணை யுடையவரே - என்றும்
     கண்ணிய வாழ்வை உடையவராம்;
வாட்டும் உலகில் வருந்திடுவார் - இந்த
     மர்மம் அறியாத மூடரையா!
149
1594 ஆட்டின் கழுத்தை அறுத்துப் பொசுக்கிநீர்
     ஆக்கிய யாகத்து அவியுணவை
ஈட்டும் கருணை இறைவர் கைகளில்
     ஏந்திப் புசிப்பரே? கூறுமையா!
150
1595 மைந்தருள் ஊமை மகனை ஒருமகன்
     வாளால் அரிந்து கறிசமைத்தால்
தந்தையும் கண்டு களிப்பதுண்டோ? - இதைச்
     சற்றுநீர் சோசித்துப் பாருமையா!
151
1596 காடு மலையெலாம் மேய்ந்து வந்து - ஆடுதன்
     கன்று வருந்திடப் பாலையெல்லாம்
தேடிஉம் மக்களை ஊட்டுவதும் ஒரு
     தீய செயலென எண்ணினீரோ?
152
1597 மேடையில் நீங்களும் மூடிப் படுத்திட
     மெல்லிய கம்பளி தானளித்து
வாடையி லாடிக் கொடுகுவதும் - அதன்
     வஞ்சகச் செய்கையோ, சொல்லும்ஐயா?
153
1598 அம்புவி மீதில்இவ் வாடுகளும் - உம்மை
     அண்டிப் பிழைக்கும் உயிரலவோ?
நம்பி யிருப்பவர் கும்பி எரிந்திடில்
     நன்மை உமக்கு வருமோ ஐயா?
154