பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு341

Untitled Document
வேறு


1615 தீக்ஷிதரும் வாளை விட்டெறிந்தார் - ஓமத்
     தீயெரி குண்டம் அழித்துவிட்டார்;
மோக்ஷம் இவையுந் தருமோ என்றார்
     மூர்த்தியின் பாதம் பணிந்து நின்றார்.
171

1616 “செய்பிழை யாவும் பொறுத்தருள்வீர்” - எனச்
     சேவித்து மன்னனும் தாழ்ந்து நின்றான்;
“ஐயனே நாட்டில் கொலைதவிர்த்து - நாளை
     ஆணையும் கட்டுவேன்” என்றுரைத்தான்.
172

வேறு

1617 “மன்னயி ரெல்லாம் தன்னுயிர் போல
நிலமுழு தாளும் நெடுமுடி யண்ணல்
பிம்பி சாரப் பெரும்பெயர் வேந்தன்,
மெய்யகங் கண்டுஇவ் வையகம் உய்ந்திடத்
திருவருள் புரிந்த செய்தி இதுவாம்;
யாக சாலையில் பக்குவம் செய்தும்
யாக சாலையில் எரிவாய் ஊட்டியும்
பலவா முயிரின் குலம்வே ரறுத்தல்
பழியும் பாவமும் பயக்கும் செயலாம்.
ஆதலின்,
ஊனை உண்பதும் உயிர்க்கொலை புரிவதும்
இந்நாள் முதல்இந் நன்னாட் டெல்லையில்
இல்லா தொழிக; ஈதுஎம் ஆணை!
அருளடை யோர்க்கே அருளும்
உறுதுணை யாமென்று உளங்கொள் வீரே.”
173

வேறு

1618 மந்திர வோலை எழுதுபவர் - அந்த
     மன்னவன் ஆணைஇம் மாநிலத்தில்
சந்திர சூரியர் உள்ளளவும் - நிலை
     தந்தி டச் சாசனம் கண்டாரம்மா!
174