பக்கம் எண் :

340கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1607 ஆயிரம் பாவங்கள் செய்தவெல்லாம் - ஏழை
     ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ?
தீயவும் நல்லவும் செய்தவரை - விட்டுச்
     செல்வ தொருநாளு மில்லைஐயா!
163
1608 முன்னைப் பிறப்பினில் செய்தவினை - யாவும்
     முற்றி முதிர்ந்து முளைந்தெழுந்து
பின்னைப் பிறப்பில் வளர்ந்திடும் என்பது
     பித்தர் உரையென எண்ணினீரோ?
164
1609 நெஞ்சினில் வாயில் கையினில் - செய்திடும்
     நீதி அநீதிகள் யாவையுமே
வஞ்சமி லாது மறுபிறப்பில் - உம்மை
     வந்து பொருந்தாமற் போயிடுமோ?
165
1610 கன்று பசுவை மறந்திடினும் - செய்த
     கருமங்கள் உம்மை விடுமோ ஐயா!
கொன்று பழிதேட வேண்டாம்ஐயா; - இனிக்
     கொல்லா விரதம்மேற் கொள்ளும் ஐயா!
166
1611 தானியம் பற்பல தாமிலையோ? - சுவை
     தாங்கிய காய்கனி தாமிலையோ?
வான மழைதரு நீரிலையோ? - இவை
     வாழ்ந்திடப் போதும் உணவல்வோ?
167
1612 ஊனுண வின்றி உறவு கொண்டு - நிலத்து
     உள்ளதை யாவரும் உண்டிருந்தால்
மானும் புலியும் ஒருதுறையில் - நீரை
     வந்து குடிப்பதும் காணலாமே
168
1613 ஆதலால், தீவினை செய்யவேண்டாம் - ஏழை
     ஆட்டின் உயிரையும் வாங்கவேண்டாம்,
பூதலந் தன்னை நரகம தாக்கிடும்
     புத்தியை விட்டுப் பிழையும், ஐயா!”
169
வேறு  
1614 வாய்பேசா உயிரெலாம் வாய்பெற்று அங்கு
     வாதாடி வழக்கிட்ட வாறீ தென்னத்
தாய்போலுந் தயவுடைய தரும மூர்த்தி
     சாற்றியநல் லறவுரைகள் யாவுங் கேட்டு
170