முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 361 |
Untitled Document
1670 | | காலைச் சிறுவன், கல்லினை அக் கங்குற் பானை யகமிட்டான்; நீல வானின் மீனெல்லாம் நில்லா தோடி ஒளித்தனவே! தாலத் தொருகீழ்த் திசைவேடன் தாங்கும் கதிரின் கண்ணிகளால், சீலக் கோமான் திருக்கோயில் சிகரம் கொண்டான், காணீரோ! | 1 |
1671 | | அருணன் உதிக்கும் வேளையிலே ஆரோ அந்தச் சாலையிலே 'மருவும் வாழ்வின் கிண்ணமது வற்றி வறண்டு போகும்முனம், பருக மதுவைத் தாரீரோ? பாய்விட் டெழுந்து வாரீரோ? அருமை மங்கை மாரே!' என்று அழைத்தல் கேட்டேன், அறிவீரே. | 2 |
1672 | | காகம் கரைதல் கேளீரோ? கதவைச் சற்றே திறவீரோ? ஆகஇரண்டு கணப்பொழுதுக்கு அப்பால் இங்கே தங்கோமே; தேகம் அலுத்துச் செல்வோமோ, சென்றால் மீண்டு வாரோமோ; வாகின் அமைந்த சாலைஇதன் வாயில் காக்கும் காவலரே! | 3 |
1673 | | புலர்ந்து விடியும் பொழிதினிலே, பொய்கைக் கரையஞ் சோலையிலே, மலர்ந்து நல்ல மணம்வீசி மகிழும் மலர்கள் ஆயிரமாம்; உலர்ந்து வாடிச் சேற்றினிலே உதிருமவையும் ஆயிரமாம்; கலந்த உலக வாழ்வைஇதில் கண்ணாற் கண்டு தெளிவாயே. | 4 | |
|
|