Untitled Document
| 1714 | | மண்ணுக் கீடு பொன்கேட்டால் வலியில் மனிதர் என்செய்வார்? கண்ணிச் செய்த ஒப்பந்தம் கண்ணிற் கண்டது ஒன்றுமிலை; திண்ணமாக இவ்வழக்குத் தீரா வழக்கே யாகும், அப்பா! எண்ணி முடிவு செய்திடுவார் யாவர் உள்ளார்? எங்குள்ளார்? | 45 |
| 1715 | | எல்லாம் வலியாய், நின்வலிதான் எங்கும் வெளியாம் வேளையிலே, நல்லாறு அறியா நாத்திகரும் நம்பி உனையே நாடிடுவார்; வில்லார் கதிரோன் விண்ணின்று விளங்கி ஒளியைப் பொழிகையிலே, பொல்லா வாவல் இருள்நோக்கிய போக வழிதான் கண்டிடுமோ? | 46 |
| 1716 | | ‘யாரும் சிறியர்; யான்பெரியன்; எதிலும் சிறந்தது என்னலமாம்; பாரில் எனக்கீ டில்லை’ எனப் பயனில் மொழிகள் பகர்வதும்என்? சேரும் உலகப் பொருளையெலாம், தெரிய நோக்கித் தனைநோக்காச் சீரின் அமைந்த கண்மணியின் செயலை நோக்கித் தெளிவீரே. | 47 |
| 1717 | | அல்லும் பகலும் பலநூல்கள் ஆய்ந்து கற்றேன்; அவையாவும் வெல்லும் வெற்றி ஈகையினால் விளைந்த புகழை விரித்ததலால், தொல்லை ஆன்ம நிலையிதெனச் சொன்ன சொற்கள் ஒன்றுமிலை கல்லும் முள்ளும் கடந்துழன்றும் கனியைக் கண்ணால் கண்டிலனே! | 48 | |
|
|