| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 373 |
Untitled Document
| 1718 | | ஐயோ அறியா மானிடரே! ஆசைப் பேயின் அடிமைகளே! எய்யா தென்றும் வான்நோக்கி, இரங்கி அழுது நிற்பதும் ஏன்? மெய்யாய் அன்று படைத்தஅவன் மெலியாது உம்மைக் காவானோ? கையால் மரத்தை நட்டவர்கள் கருத்தாய் நீரும் வார்க்காரோ? | 49 |
| 1719 | | ‘ஈசா! உள்ள மிரங்கிடு; யான் ஏழை, ஏழை, என்றுநிதம் கூசா தேனோ கூப்பிடுவாய்? குறைகள் கூறி நின்றிடுவாய்? பேசா தவரைப் பேணானோ? பெற்ற மகவைக் காவானோ? ஆசான் நீயோ? ஈசனெதும் அறியாச் சிறிய பாலகனோ? | 50 |
| 1720 | | நாடும் வெற்றி தோல்விகள்எந் நாளும் பந்து விரும்பிடுமோ? ஆடுமவரின் அடிக்கேற்ப அங்கும் இங்கும் அலைந்திடுமால்; நீடும் இந்த நிலமீது நின்னைத் தூக்கி இட்டஅவன் ஈடு செய்வான், இரங்கிடுவான், யாவும் அறிவான், நன்கறிவான். | 51 |
| 1721 | | எல்லாம் இங்கோர் சூதாட்டம், இரவும் பகலும் மாறாட்டம்; வல்லான் விதியே ஆடுமகன், வலியில் மனிதர் கருவிகளாம்; சொல்லா தெங்கும் இழுத்திடுவான், ஜோடி சேர்ப்பான், வெட்டிடுவான்; செல்லா தாக்கி ஒவ்வொன்றாய்த் திரும்ப அறையில் இட்டிடுவான். | 52 | |
|
|