Untitled Document | 1722 | | எழுதிச் செல்லும் விதியின்கை எழுதி எழுதி மேற்செல்லும்; தொழுது கெஞ்சி நின்றாலும் சூழ்ச்சி பலவும் செய்தாலும் வழுவிப் பின்னாய் நீங்கியொரு வார்த்தை யேனும் மாற்றிடுமோ? அழுத கண்ணீ ராறெல்லாம் அதிலோர் எழுத்தை அழித்திடுமோ? | 53 |
| 1723 | | உயிரின் ஒளியும் மணமுமெலாம் உன்பேர ரருளில் உதிப்பனவாம்; மயலின் மாசு நீங்கிடவே வறுமை சூழ வைத்தனைநீ, எயிலும் அரணும் காப்பதிலுன் இணையா மடிகட்கு இணையாமோ? அயலும் காவா மனிதருலகு அனைத்தும் காக்கும் ஆண்டவனே! | 54 |
| 1724 | | புந்தி ஈசன் திருவடியிற் பொருந்தா உலகம், பொய்யுலகம் முந்து துயரம் மூடுலகம், மூட உலகம், எந்நாளும் வெந்து தீயும் நரகினுக்கு விறகு தேடி இடுமுலகம்; இந்த உலகில் ஏன், ஐயா! இன்னும் ஆசை வைப்பாய்நீ? | 55 |
| 1725 | | வீடும் பழவீ டாகுதடா! விட்டம் கூரை சுவரெல்லாம் ஆடி அலைந்து விழுநாளும் அண்டி அண்டி வருகுதடா! நாடி இதனை இன்னும்நீ நம்பி மோசம் போகாமல், பாடிப் பாடி, எம்பெருமான் பாதம் போற்றி வாழ்வாயே. | 56 | |
|
|