Untitled Document | 1738 | | கான ரோஜா முகம்வெளிறிக் கவிழ்ந்து நிற்றல் கண்டவொரு வானம்பாடி மனம்உருகி ‘மதுவுண், மதுவுண், மதுவுண்டால் தீனம் நீங்கி உடல்தேறிச் செம்மை யாக வளர்ந்திடுவாய்; ஏனம் மா! நீ வாடுகின்றாய்’ என்று கூறிச் சென்றதுவே. | 69 |
| 1739 | | உலகில் வாழும் இவ்வாழ்வின் உண்மை யறியாக் குயவன்செய் கலச வாயை என்வாய்தான் கலந்து கொண்ட கதையிதுவாம்; ‘உலக வாழ்வு நிலையில்லை உண்இம் மதுவை உண்’எனவே கலச வாய்என் வாயோடு கனிந்த சொல்லைச் சொன்னது. அம்மா! | 70 |
| 1740 | | மன்னா மனிதர் ‘வாழ்வுஎன்றும் வழுவி வழுவிப் போகும்’ எனச் சொன்னார்; சொன்ன சொல்லையின்னும் சொல்லிச் சொல்லிப் பயன் எதுவோ? இந்நாள் இனிய நாளானால், இறந்த நாளுக்கு இரங்குவதேன்? பின்னாள் எண்ணி நடுங்குவதேன்? பெண்ணே! கிண்ணம் நிறையம்மா! | 71 |
| 1741 | | என்னைக் கேளாது எங்கிருந்தோ இங்கே தூக்கி எறிந்திட்டான்; என்னைக் கேளாது இன்னுமவன் எங்கே தூக்கி எறிவானோ? என்ன செய்வேன்? இக்கொடுமை ஏழை உள்ளம் மறந்தொழிய, வன்னக் கிளியே! ஒருகிண்ணம் மதுவை ஊற்றித் தருவாயே! | 72 | |
|
|