பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு379

Untitled Document
1742 அல்லும் பகலும் விவேகத்தால்
     அடைந்த கவலைக் களவில்லை
தொல்லை நீங்க இன்றவளைத்
     துரத்தி விட்டுத் துணிவாகச்
செல்வி திராட்ச வல்லிதரும்
     தெய்வ மகளை மணந்துகொண்டேன்;
இல்லை துயரம் இல்லையினி
     இன்பம் என்றும் இன்பமதே.
73

1743 உண்ணும் மதுவும், நீயுள்ளம்
     உருகி முத்தம் இடுமுகமும்,
எண்ணும் பொருள்கள் முடிவதுபோல்,
     இன்மை யேயாய் முடிவுமெனில்,
மண்ணில் இந்நாள் நிலையும்இனி
     வருநாள் நிலைபோல் இன்மையதாம்
திண்ணம் இந்த அளவினிலோர்
     சிறிதும் குறையாது அறிவாயே.
74

1744 இதற்கும் அதற்கும் எத்தனைநாள்?
     இரவும் பகலும் சண்டை? அப்பா!
புதர்க்குள் இல்லாக் கனிதேடிப்
     புற்றில் நாக மணிதேடிப்
பதைத்து வீழ்ந்து பயனுண்டோ?
     பாரில் அமுத சுரபியினுள்
முதற்கு முதலாம் திராட்சையினை
     முற்றும் நம்பி வாழ்வாயே.
75

1745 மங்கும் மாலைப் பொழுதினிலே
     மதுவின் சாலை வாயில்வழி
எங்கும் யான்கண் டறியாத
     எழிலார் தெய்வ வடிவுடையோன்
தங்கக் கலசம் தாங்கிவந்தான்,
     ‘சற்றே பருகிப் பார்’ என்றான்;
எங்கும் கிடையா அவ்வமுதம்
     இனிய திராட்சை ரசம் அப்பா!
76