Untitled Document | 1746 | | நின்ற துயரம் நீங்கிடவே நேருந் துயரம் மாறிடவே, இன்றிக் கிண்ணம் நிறையஎனக்கு இனிய மதுநீ வார்த்திடம்மா! அன்றி நாளைக் கென்பாயேல் அந்த ‘நாளை’ வருமுன்னம் சென்ற கோடி ஆண்டுகளில் சேர்ந்தொன் றாகிப் போவேனே. | 77 |
| 1747 | | அரிய இனிய குணமுடையர் அறிவும் புகழும் மிகவுடையார் மருவும் உலகம் மதிக்கவரு மணியே, போல்வோர் பலநண்பர், பருகும் மதுவைச் சிறிதுமுனம் பருகிப் பருகி மெல்லஎழுந்து ஒருவர் ஒருவர் ஒருவராய் உறங்க வீடு சென்றனரே. | 78 |
| 1748 | | அங்கவ் அயனும் தங்கவொட்டான் அஞ்சல் வழியிங்கு அனுப்பிடுவான்; இங்கு யமனும் இருக்கவொட்டான் யார்சொன் னாலும் விடமாட்டான்; அங்கு மிங்கு மாகஅலைந்து அயர்ந்து வாடி அலுப்புற்றேன்; இங்கு மங்கும் எங்குமுளோய் ஏழை என்னைக் காப்பாயே. | 79 |
| 1749 | | ஒருகை அன்னம் இடமாட்டான்; ஊரூ ராகத் துரத்திடுவான்; பருக நீரும் தரமாட்டான்; பழியில் மூழ்கச் செய்திடுவான்; இரவும் பகலும் ஓயாமல் என்னை மானம் கெடுத்திடுவான்; கருணை யில்லாக் காலனவன் காட்டும் கொடுமை சிறிதளவே. | 80 | |
|
|