| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 381 |
Untitled Document | 1750 | | உண்ணும் உணவை அழித்திடுவான்; உடலை மெலியச் செய்திடுவான்; கண்ணுக் கினிய ஆடையினைக் கந்த லாகக் கீறிடுவான்; பண்ணற் கரிய மாளிகையும் பாழ்மண் ணாகக் கண்டிடுவான்; எண்ணிற் காலன் கொடுமையெலாம் யாரே கூற வல்லவராம்? | 81 |
| 1751 | | வாடி நித்தம் வருந்திடினும் வயிற்றுக் குணவு தரமாட்டாய்; தேடி வைத்த பொருளையெலாம் திருடிக் கொண்டு போய்விடுவாய்; ஆடிச் சுழலும் ராட்டினமும் ஆடைக் குதவு நூல்தருமே நீடு காலச் சக்கரமே! நின்னால் ஏதும் பயனுண்டோ? | 82 |
| 1752 | | ஏழை ஒன்றை எண்ணுகின்றேன், ஈசன் ஒன்றை எண்ணுகின்றான்; ஏழை எண்ணம் இந்நிலையில் என்றும் நிறைவு கண்டிடுமோ? ஏழை வாழ்வை யன்றிஎதும் ஈசன் எண்ணான் ஆதலினால் ஏழை எண்ணம் நிறைவேறாது இருத்தல் அன்றோ நலம், ஐயா! | 83 |
| 1753 | | தேறா உலகின் மாற்றமெலாம் தேறும் உண்மை ஞானியர்கள், மாறா இன்ப துன்பத்தால் மயக்கம் கொள்வது என்றுமிலை; கூறாய் இன்பம் மறைவதுபோல் குறைந்து மறையும் துன்பமுமே; ஆறாப் புண்ணும் உலகில்லை; ஆற்ற மருந்தும் அதற்கில்லை; | 84 |
|
|
|